டவுன்லோடிட்டு பார்த்த திரைப்படத்தை விமர்சிப்பது, நண்பனின் டாவுக்கு மார்க் போடுவதற்கு ஒப்பாகும் என்றார் ஃபிகரின் அப்பாவாகிய விநியோகஸ்தர்.
Latest Updates: cinema RSS
-
bsubra
-
புருனோ
ஒரு குறிப்பிட்ட ஜாதியுடன் அடையாளப்படுத்தப்பட்டுவிட்டால் அந்த நடிகரால் கண்டிப்பாக “உச்ச” நிலையை அடை முடியாது.
ரஜினிக்கோ கமலுக்கோ 80களில் 90களில் இருந்த ரசிகர்கள் யாருமே அவரது ஜாதியை பார்த்து இருக்க வில்லை. 2000க்கு பிறகு வேறு பல காரணங்களால் அந்த அடையாளம் ஒட்டிக்கொண்டதே தவிர அவர்கள் அதை ஒரு போதும் வெளிப்படுத்தியது கிடையாது.
விஜய், அஜித், விக்ரம், ராமராஜன் !! ஆகியோரின் வெற்றிக்கு ஒரு காரணம் அவர்கள் “ஜாதி நடிகராக” அடையாளப்படுத்தப்படாததால் தான் என்பது என் கருத்து
விஜய் என்ன ஜாதி என்பதும் ராமராஜன் என்ன ஜாதி என்பதும் சரத்குமார் ரசிகர்களில் கூட பலருக்கு தெரியாது.
அதே போல் விக்ரம் என்ன ஜாதி என்பது பல பிரசாந்த் ரசிகர்களுக்கு கூட தெரியாது.
ஷாம், எஸ்.ஜே.சூர்யா, மனோஜ் ஆகியோர் அவர்களின் திரைத்துறை பணித் தடத்தின் (career - பணித்தடம்) ஆரம்ப கட்டத்திலேயே ஜாதி நடிகர் என்ற முத்திரையை பெற்று விட்டார்கள். இதுவே அவர்களால் ஒரு குறிப்பிட்ட உயரத்திற்கு மேல் செல்ல தடையானது.
திரைத்துறையிலும் அரசியலிலும் ஜாதி அடையாளம் என்பது இரு பக்கமும் ஏன் இருமுனையும் கூர்மையான கத்தி.
அதை வைத்து கேக்கை வெட்டியவர்களை விட கையை வெட்டிக்கொண்டவர்கள் தான் அடையாளம்.
1998 நாடாளுமன்ற தேர்தலில் திருநெல்வேலியில் சரத்குமார் தோற்ற அதே நேரம் திருச்செந்தூரில் ராமராஜன் வெற்றி. இருவரும் ஒரே ஜாதி என்ற விபரம் எத்தனை பேருக்கு தெரியும்
விஜயகாந்தால் ஏன் தமிழக முதல்வராக முடியாது என்பதற்கு கூட ஒரு காரணம் அவரது ஜாதி (?? மொழி) அடையாளம் தான்.
-
புருனோ
ஒரு செடி வளர விதையும் முக்கியம், நிலமும் முக்கியம்
விதை - திறமை
நிலம் - பின்புலம்விஜய் செம்புலநீரில் விழுந்த வீரியமான விதை
-
புருனோ
விஜய்க்கு அதிக ரசிகர்கள் இருப்பதற்கு காரணம்
1. விஜய்
2. அவரது தந்தைநான் கூறிய கருத்தை பார்த்து என்னை திட்டும் முன் பதிவர் பாலபாரதியின் இடுகை கூறித்து நான் எழுதிய இடுகை மற்றூம் மறுமொழிகளை ஒரு முறை படித்து விடுங்கள்
-
புருனோ
சில படங்கள் (அவை எடுக்கப்படும் கதைக்கருமூலம்) அனைவரையும் தொடும். உதாரணம் - கல்விக்கு நன்கொடை (ஜெண்டில்மேன்) பதின்ம காதல் (ஆட்டோகிராப்)
வேறு சில படங்களோ (அதில் கூறப்படும் பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள் வெகு சிலர் என்பதால்) வெகு சிலரை மட்டுமே தொடும் - சிறைச்சாலை, லேசா லேசா, கண்களால் கைது செய் - அது போன்ற படங்கள் தோல்வி அடைவதும் நடைமுறைதான்.
–
”கிடைக்காத அங்கீகாரமும்”, ”நிராகரிப்பும்” ஒருவனை அலைக்கழிப்பது போல் அதிக அங்கிகாரமும், அதிக கவனிப்பும் ஒருவனை தனி உலகிற்கும் அழைத்து சென்று விடும் (ivory tower என்று ஆங்கிலத்தில் ஒரு பதம் உண்டு).அது போன்ற பிரச்சனைகளை விளக்கிய படம் கண்களால் கைது செய். அந்த கதாநாயகி (fantasy and fact) உருவகம் தமிழ் திரையில் வேறு பட்ட ஒன்று.
நிராகரிப்பினால் ஏற்படும் மன உளைச்சலினால் மனதிற்குள் ஒரு நாயகியை உருவாக்கி அவள் மேல் தனுஷ் காதல் கொண்டால் அந்த படம் வெற்றி அடைவதற்கு காரணம், மக்களில் பலர் நிராகரிக்கப்படுகிறார்கள். அல்லது தான் நிராகரிக்கப்படுவதாக நம்பிக்கொண்டிருக்கிறார்கள்.
(குணா அபிராமி கூட இந்த வகை கதைதான். ஆனால் அதில் நிராகரிப்பின் காரணம் பிறப்பு. காதல் கொண்டேனில் நிராகரிப்பின் காரணம் படிப்பு / நட்பு / நடை / உடை)
ஆனால் அதே பிரச்சனையை மூற்றிலும் அடுத்த கோனத்திலிருந்து அனுகிய படம் கண்களால் கைது செய்
–
பாரதிராஜாவின் மறக்க முடியாத பெண்பாத்திரங்களின் வரிசையில் இந்த படத்தின் கதாநாயகிக்கும் இடம் உண்டு என்பது என் கருத்து -
santhoshguru
கேரமல் (Caramel) படம் பிட்டாரண்ட்ல ஏறக்கிகிட்டு இருக்கேன்