சமீபத்தில் பலரிடம் பேசியபோது அவர்கள் கூற கேட்டது. இந்துமதம் என்ன சொல்லி இருக்குனா, இஸ்லாம் என்ன சொல்லி இருக்குனா, கிறிஸ்துவம் என்ன சொல்லி இருக்குனா,
அது ஏன் என்கிட்ட மட்டும் எந்த மதமும் நேரடியா பேசமாட்டேங்குது
சமீபத்தில் பலரிடம் பேசியபோது அவர்கள் கூற கேட்டது. இந்துமதம் என்ன சொல்லி இருக்குனா, இஸ்லாம் என்ன சொல்லி இருக்குனா, கிறிஸ்துவம் என்ன சொல்லி இருக்குனா,
அது ஏன் என்கிட்ட மட்டும் எந்த மதமும் நேரடியா பேசமாட்டேங்குது
இறைவனிடம் கையேந்துங்கள் – அவன்
இல்லையென்று சொல்லுவதில்லை
இருக்கிறதென்றும் சொல்லுவதில்லை
கடந்த பத்தாண்டுகளாக ஏழை பணக்காரன் இடைவெளி அதிகரித்துள்ளதா, அல்லது குறைந்துள்ளதா
விளக்க முடியுமா
அதிகரித்துள்ளது
INCREASED
ஒரு அரசன் நிஜத்தில் கட்டிய கோவிலின் கும்பாபிஷேகத்திற்கு வராத இறைவன் ஒரு ஏழை மனதில் கட்டிய கோவிலின் கும்பாபிஷேகத்திற்கு செல்வதாக கூறும் கதையின் உளவியல் என்ன
–
விவிலியத்தில் புனித மத்தேயுவின் தொழில் வரி வசூலிப்பது. (கஞ்சா கடத்துவதோ கிரிலை உடைத்து திருடுவதோ அல்ல). அரசு உத்தியோகம் தான். ஆனால் அந்த தொழிலின் நிலையைப்பாருங்கள்
Matthew was a tax-collector, a profession that was despised in Palestine at that time.
Many of them collected as much money as they could in any way that they could in order to become rich very quickly.
Tax-collectors were considered to be so dishonest that they could not testify in courts of law.
When Jesus called Matthew to follow him, he may have been calling Matthew back to his roots, to a knowledge of a better way of life that became better and better for him as he followed Jesus.
The Pharisees disliked the fact that Jesus would eat with anyone, especially tax collectors.
Perhaps the many stories of banquets to which no one came in the book of Matthew reflected the tax collectors’ lives. They were wealthy people who could give large, elaborate dinner parties, but anyone who thought he was respected in the community would refuse to come.
பணம் வேறு, நாணயம் வேறு என்றூ நீண்ட காலமாகவே கட்டமைக்கப்பட்டு, ஏழையாக இருப்பவன் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற வேட்கை ”அமுக்கப்பட்டு” ஏழைகள் தான் கடவுளின் குழந்தைகள் என்று மதங்கள் கூட கூறியது ஏன் ??
–
அன்று கலிலியோவில் வரி வசூலிப்பவர்களை சமுகம் எப்படி பார்த்ததோ, அதன் பின்னர் அரசு ஊழியர்களை எப்படி பார்த்ததோ, இன்று மென்பொருள் நிறுவன ஊழியர்களையும் பாடுபட்டு காசு சம்பாதிக்கும் சுய தொழில் முனைவோரையும் அப்படி தான் பார்க்கிறது
பணத்தை நோக்கி மக்களின் கவனம் திரும்ப கூடாது என்பதற்காக பல கதைகள் / அறிவுரைகள் கூறப்பட்டன
அவற்றில் முக்கியமானவை
1. பணத்தால் மருந்து வாங்கலாம். உடல் நலனை வாங்க முடியாது
2. பணக்காரன் நிம்மதியாக தூங்குவதில்லை. ஏழை மகிழ்ச்சியாக இருக்கிறான்
–
இது போன்ற கட்டமைப்பின் விளைவுகளையே நாம் இன்று காண்கிறோம்
–
தன்னுடன் பள்ளியில் படித்த வகுப்பு தோழன் இன்று குளிர்சாதன் வகுப்பில் பயணம் செய்யும் போது தான் இரண்டாம் வகுப்பில் பயணம் செய்ய வேண்டியுள்ளதே என்ற கடுப்பு பரவியுள்ளதால் தான் கற்றது தமிழ், சிலந்தி என்று திரைப்படங்கள் வருகின்றன
பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாகவே
1. கடவுள் ஏழைகளை விரும்புகிறார் என்று கூறி அவர்களை ஏழையாகவே வைத்திருக்கிறார்கள்
2. பணம் வைத்திருப்பது பாவம் என்று கூறி அவர்களை சம்பாதிக்கவே விடவில்லை
3. பணம் இருந்தாலும் பக்திதான் பெரிது. எனவே நீங்கள் ஏழை என்றால் கடவுள் உங்களைத்தான் முதலில் கவனிப்பார். அதனால் கவலைப்படாதீர்கள் என்பது நமது மதங்கள் நமக்கு சொல்லும் பாடம்
கடவுள் ஏழைகளை விரும்புகிறார் என்று கூறி கூறி அவர்களை ஏழையாகவே வைத்திருக்கிறார்கள்
–
இது mass psychology தான்.
–
நேர்மறை சிந்தனையை விட எதிர்மறை சிந்தனையே அதிகம் கவனம் பெறுவதற்கு காரணம் நம் ஊடகங்களே
–
இந்தியா ஒளிர்கிறது என்ற கோஷம் ஏன் பா.ஜ.கவிற்கு எதிரானது என்று ஆராய்ந்தால் கிடைக்கும் பதில்கள் சுவாரசியமானவை
ஒரு குறிப்பிட்ட ஜாதியுடன் அடையாளப்படுத்தப்பட்டுவிட்டால் அந்த நடிகரால் கண்டிப்பாக “உச்ச” நிலையை அடை முடியாது.
ரஜினிக்கோ கமலுக்கோ 80களில் 90களில் இருந்த ரசிகர்கள் யாருமே அவரது ஜாதியை பார்த்து இருக்க வில்லை. 2000க்கு பிறகு வேறு பல காரணங்களால் அந்த அடையாளம் ஒட்டிக்கொண்டதே தவிர அவர்கள் அதை ஒரு போதும் வெளிப்படுத்தியது கிடையாது.
விஜய், அஜித், விக்ரம், ராமராஜன் !! ஆகியோரின் வெற்றிக்கு ஒரு காரணம் அவர்கள் “ஜாதி நடிகராக” அடையாளப்படுத்தப்படாததால் தான் என்பது என் கருத்து
விஜய் என்ன ஜாதி என்பதும் ராமராஜன் என்ன ஜாதி என்பதும் சரத்குமார் ரசிகர்களில் கூட பலருக்கு தெரியாது.
அதே போல் விக்ரம் என்ன ஜாதி என்பது பல பிரசாந்த் ரசிகர்களுக்கு கூட தெரியாது.
ஷாம், எஸ்.ஜே.சூர்யா, மனோஜ் ஆகியோர் அவர்களின் திரைத்துறை பணித் தடத்தின் (career – பணித்தடம்) ஆரம்ப கட்டத்திலேயே ஜாதி நடிகர் என்ற முத்திரையை பெற்று விட்டார்கள். இதுவே அவர்களால் ஒரு குறிப்பிட்ட உயரத்திற்கு மேல் செல்ல தடையானது.
திரைத்துறையிலும் அரசியலிலும் ஜாதி அடையாளம் என்பது இரு பக்கமும் ஏன் இருமுனையும் கூர்மையான கத்தி.
அதை வைத்து கேக்கை வெட்டியவர்களை விட கையை வெட்டிக்கொண்டவர்கள் தான் அடையாளம்.
1998 நாடாளுமன்ற தேர்தலில் திருநெல்வேலியில் சரத்குமார் தோற்ற அதே நேரம் திருச்செந்தூரில் ராமராஜன் வெற்றி. இருவரும் ஒரே ஜாதி என்ற விபரம் எத்தனை பேருக்கு தெரியும்
விஜயகாந்தால் ஏன் தமிழக முதல்வராக முடியாது என்பதற்கு கூட ஒரு காரணம் அவரது ஜாதி (?? மொழி) அடையாளம் தான்.
ரவி 9:45 pm on May 3, 2009 Permalink |
குரான், விவிலியம் அடிப்படையில் சொன்னாங்கன்னா தப்பில்லை தானே? ஆனால், கீதை, வேதங்கள் அடிப்படையில் மட்டும் இந்து சமய மேற்கோள்கள் சொல்வது சரியாக இருக்காது. இந்து சமயம் என்பதே கட்டமைக்கப்பட்ட ஒன்று என்கிறார்கள்..
புருனோ 9:03 am on May 5, 2009 Permalink |
The Eye Does Not See What the Mind Does Not Know என்பது வில்லியம் ஆஸ்லரின் கூற்று.
மணிகண்டன் 1:30 pm on May 6, 2009 Permalink |
ரவி,
குரான் சொல்வது என்னவென்றால், கீதை சொல்வது என்னவென்றால், பைபிள் சொல்வது என்னவென்றால் – இதில் எனக்கு எந்த பிரச்னையும் கிடையாது. ஆனால் இதற்கும் கிருத்துவம் கூறுவது என்னவென்றால், இஸ்லாம் கூறுவது என்னவென்றால், இந்து மதம் கூறுவது என்னவென்றால் – மிக பெரிய வேறுபாடு இருக்கிறது என்பதே என் எண்ணம். மதம் என்பதை அதன் வேத புத்தகம், அதை பயன்படுத்திய விதம், பயன்படுத்தப்படும் விதம், அந்த மதத்தை சார்ந்த மனிதர்கள், அவர்களின் கொள்கைகள், செயல்பாடுகள் அனைத்தையும் பார்த்தே கூற முடியும் அல்லவா ?
புருனோ 10:38 pm on May 6, 2009 Permalink |
//ஆனால் இதற்கும் கிருத்துவம் கூறுவது என்னவென்றால், இஸ்லாம் கூறுவது என்னவென்றால், இந்து மதம் கூறுவது என்னவென்றால் – மிக பெரிய வேறுபாடு இருக்கிறது என்பதே என் எண்ணம்.//
இதை ரவி அழகாக விளக்கி விட்டார்.
ரவி 1:41 am on May 7, 2009 Permalink |
இசுலாமியர், கிறித்தவர்களுள் எவ்வளவு வேறுபாடு இருந்தாலும் பெரும்பான்மையினர்(?) விவிலியம் (பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு), குரானை அவர்கள் சமய நூல்களாக ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். இதனால், அச்சமயத்தினருக்காவது, அந்நூல்கள் கூறுவது அச்சமயங்கள் கூறுவதாக ஒப்புக் கொள்வதில் தயக்கம் இருக்காது.
//மதம் என்பதை அதன் வேத புத்தகம், அதை பயன்படுத்திய விதம், பயன்படுத்தப்படும் விதம், அந்த மதத்தை சார்ந்த மனிதர்கள், அவர்களின் கொள்கைகள், செயல்பாடுகள் அனைத்தையும் பார்த்தே கூற முடியும் அல்லவா ?//
இப்படி இருந்தா நல்லா இருக்கும் தான். ஆனா, இப்படி இல்லையே (தசாவதார இறுதிக் காட்சியில் கமல் சொல்வது மாதிரி படிங்க
)
மணிகண்டன் 5:30 am on May 7, 2009 Permalink |
ok guys.
Anonymous 2:44 am on May 21, 2009 Permalink |