Tagged: புதிர் RSS Toggle Comment Threads | Keyboard Shortcuts

  • ரவி 5:05 pm on April 20, 2011 Permalink | Reply
    Tags: , கூர்ப்பியல், புதிர்   

    விடுதி, அலுவலகம், பன்மாடிக்குடில் என்று எங்கு சென்றாலும் ஒரு கதவு, சாளரம் திறந்திருந்தாலோ, கண்ணாடி வழியாக உள்ளே உள்ளது தெரிந்தாலோ ஒரு நொடி நேர ஓரப் பார்வை பார்க்கத் தோன்றுகிறதே? எங்கள் இடத்தையும் இப்படி பலர் பார்த்திருக்கிறார்கள். பார்க்கிறார்கள். இது ஏன்?

    குறிப்பு: வேண்டும் என்றே மெனக்கெட்டு எட்டிப் பார்ப்பதல்ல. ஏதேனும் ஒரு திறப்பு இருந்தால் அனிச்சையாக ஓரப் பார்வை பார்ப்பதையே குறிப்பிடுகிறேன்.

     
    • கார்த்திக் 10:45 am on April 21, 2011 Permalink | Reply

      //பன்மாடிக்குடில், சாளரம்
      இரு அருமையான தமிழ் சொற்களை அறிய வைத்ததற்கு நன்றி!! :)

      • ரவி 11:05 am on April 21, 2011 Permalink | Reply

        பன்மாடிக்குடில் என்ற சொல் சமயபுரம் அருகே ஒரு வீட்டில் கண்டேன். அவ்வப்போது பொதுப் பயன்பாட்டில் இது போன்ற அருமையான சொற்கள் கிடைக்கின்றன.

      • புருனோ 6:46 am on April 24, 2011 Permalink | Reply

        அடுக்ககம்; அடுக்கில்லம்

    • புருனோ 6:39 am on April 24, 2011 Permalink | Reply

      :)

      • ரவி 10:47 am on April 24, 2011 Permalink | Reply

        அடுக்ககம் நல்லா இருக்கு. சரி, நான் கேட்ட கேள்விக்கு யாராவது பதில் சொல்லுங்கப்பா :)

    • பாண்டி 3:44 pm on April 24, 2011 Permalink | Reply

      உங்களுக்கு மட்டும் ஏன் இப்படி எல்லாம் தோணுது

    • பாண்டி 3:48 pm on April 24, 2011 Permalink | Reply

      மூடி வைத்து இருக்கும் எல்லாவற்றையும் திறந்து பார்க்கும் அல்ப ஆசைதான்.

    • சுந்தர் 11:21 am on April 26, 2011 Permalink | Reply

      குறுகுறுப்பு என்பது வேட்டையாடி வாழும் விலங்குகளுக்கான ஒரு படிவளர்ச்சிப் பண்பாக இருக்குமென நினைக்கிறேன். மாந்தரும் அப்படி இருந்தபடியால் இது ஆழமாகப் பதிந்திருக்கும்.

      காட்டாக ஒரு காட்டுயிர்ப்படத்தில் வந்த காட்சி நினைவுக்கு வருகிறது. ஆப்பிரிக்காவில் கடும் வறட்சி நிலவும்போது, குரங்குகளுக்கு மட்டும் நீர்நிலை ஒன்றின் இருப்பிடம் தெரிந்திருக்கும். அதை அறிந்து கொள்வதற்காகப் பழங்குடி மாந்தனொருவன் ஏதோ மரத்தின் விதைகளைக் கையில் மறைத்துக் கொண்டு வேண்டுமெனவே ஒரு குரங்கு பார்க்கும்படி புற்றினுள் வைப்பான். குரங்குக்கு உள்ளே அப்படி எதைத்தான் வைத்தான் என்று அறியும் ஆவல் பிறக்கும். உள்ளே கையை விட்டு விதைகளை அள்ளியவுடன் கை விரிவாவதால் அதை எடுக்க முடியாமல், விதைகளை விட்டுவிடவும் முடியாமல் அங்கேயே நிற்கும் குரங்கை மாந்தன் பிடிப்பான்.

      • ரவி 2:37 pm on April 26, 2011 Permalink | Reply

        சுந்தர், குறுகுறுப்பு நல்ல சொல். சரியான சொல் சிக்காததால் ஓரப்பார்வை, எட்டிப்பார்த்தல் என்று வெவ்வேறு விதமாகச் சொல்ல முயன்றேன்.

        இது குறித்து எந்ந ஆய்வையும் படிக்கவில்லை. யார், எங்கு என்று இல்லாமல் பலரிடமும் இவ்வழக்கம் இருப்பதைக் கண்ட பிறகே படிவளர்ச்சியுடன் தொடர்பு கொண்டு யோசிக்கத் தோன்றியது. உங்கள் நோக்கும் பெருமளவு ஒத்துள்ளது.

        குகைகளின் இண்டு இடுக்குகள், பள்ளங்கள், பார்வைக்கு மறைவாக உள்ள இடங்களில் இருந்து ஏதேனும் ஆபத்துகள் வரலாம் என்பதால் இவற்றை உற்றுக் கவனித்தே அடி எடுத்து வைக்கும் வழக்கம் இருந்திருக்கலாம். இதன் தற்கால நீட்சியே இந்தக் குறுகுறுப்பு என்று நினைக்கிறேன். பொதுவாக, தன்னுடைய சுற்றுப்புறத்தைப் பற்றிய அனைத்துத் தகவலையும் பெறும் உந்துதல் என்றும் கருதலாமா?

        • சுந்தர் 3:10 pm on April 26, 2011 Permalink | Reply

          ஆம், இரவி. கிட்டத்தட்ட நானும் அப்படித்தான் நினைத்தேன். மேற்கொண்டு இப்போது துழாவியதில் http://www.jstor.org/pss/4533136 கட்டுரைச்சுருக்கம் கிடைத்தது. வீட்டில் “The Moral Animal” நூல் உள்ளது, அதில் ஏதும் குறிப்பு அகப்படலாம்.

        • சுந்தர் 8:18 am on April 27, 2011 Permalink | Reply

          குறுகுறுப்பு, பல படங்களில் வடிவேலு போன்றோர் (சற்றே மாறுபட்ட பொருளில்) பயன்படுத்தியதைப் பார்த்திருக்கிறேன். அதனால் தோன்றியது. :)

      • ரவி 2:38 pm on April 26, 2011 Permalink | Reply

        ஆர்வமூட்டும் செய்தி. குரங்கைப் பிடத்த பிறகு, அது நீர்நிலைக்கான வழி காட்டுமா? :)

        • சுந்தர் 2:54 pm on April 26, 2011 Permalink | Reply

          குரங்கைப் பிடித்துக் கட்டிப் போட்டுவிட்டு அதற்கு உப்புக்கட்டியைக் கொடுப்பான். அதை உண்டவுடன் தண்ணீர்த்தாகத்தால் அது துடிக்கும். பிறகென்ன, கட்டவிழ்த்தவுடன் நேராக நீர்நிலைக்குச் செல்லும். நம்மாளும் பின்தொடர்வார். :)

  • ரவி 10:36 am on August 17, 2010 Permalink | Reply
    Tags: புதிர்   

    ஒரு வீடு விற்றுக் கொடுத்தாலே 25,000 தரகுப் பணமாகப் பெறும் ஒருவர் காலையில் வீடு வீடாக பால் போடுகிறார். ஏகப்பட்ட நகைகளை அணிந்து கொண்டு scootyயில் ஒயிலாகப் போகும் ஒருவர் மாலையில் வீடு வீடாகப் போய் மல்லிகைப் பூ விற்கிறார். ஏன்? (துப்பு: விடை ஒரே ஒரு சொல் தான் :) )

     
    • கார்த்திக் 1:07 pm on August 17, 2010 Permalink | Reply

      வாழ்வாதாரம்?

      • ரவி 10:48 am on August 21, 2010 Permalink | Reply

        networking என்பது தான் சரியான விடை. புதியவர்களிடம் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு வீடு விற்பனை, வாங்குவதற்குரியவர்களை அறிவதற்காக இப்படிச் செய்வதாக பால்காரர் சொன்னார்.

  • ரவி 10:20 pm on August 16, 2010 Permalink | Reply
    Tags: புதிர்   

    ஒரு இடத்தில் நாட்காட்டியின் தாள்களை முன்கூட்டியே கிழித்துக் கொண்டே இருக்கிறார்கள். அங்கு குழந்தைகளோ மனநலம் குன்றியவர்களோ இல்லை. ஏன் கிழிக்கிறார்கள்? என்ன இடம்?

     
    • கார்த்திக் 10:44 am on August 17, 2010 Permalink | Reply

      எங்க ஊரு பெட்டி கடைகள்ல வெத்தல வாங்க போனா, நாட்காட்டி தாள்ல தான் சுண்ணாம்பு தடவி கொடுப்பாங்க!!

      • ரவி 11:01 am on August 17, 2010 Permalink | Reply

        இதுவும் சரியான விடை தான் :) நான் பார்த்தது கோயில்ல. திருநீறு, குங்குமம் மடிக்க…

  • ரவி 10:15 pm on July 28, 2010 Permalink | Reply
    Tags: கணக்கு, குறுஞ்செய்தி, புதிர்   

    அப்பப்ப தென்படும் குறுஞ்செய்தி ஒன்று இன்று மீண்டும் மண்டை காய வைத்தது.

    1 ரூபாய் = 100 பைசா = 10 பைசா X 10 பைசா = 0.1 ரூபாய் X 0.1 ரூபாய் = 0.01 ரூபாய் = 1 பைசா

    1 ரூபாய் = 1 பைசா

    இந்த நிறுவலில் எங்கு தவறு என்று கண்டுபிடிக்க முடிகிறதா?

     
    • Anonymous 6:22 am on July 29, 2010 Permalink | Reply

      0.1 ரூபாய் x 0.1 ரூபாய் என பெருக்கும் கான்சப்டே கிடையாது. அப்படியே பெருக்கினாலும் அது 0.01 ரூபாய் squared என்றுதான் உச்சரிக்க இயலும்.

      ஆனால் வகுக்க இயலும்.

      10 ரூபாயை இரண்டு ரூபாயால் வகுத்தால் விடை ஐந்துதான், ஐந்து ரூபாய் அல்ல. ஏனெனில் ரூபாய் கேன்சல் ஆகிவிடும்.

      அன்புடன்,
      டோண்டு ராகவன்

    • கார்த்திக் 10:35 am on July 29, 2010 Permalink | Reply

      10^2 = 100 but 0.1^2 is not 10

    • புருனோ 6:54 am on July 31, 2010 Permalink | Reply

      1 ரூபாய் = 100 பைசா = 10 பைசா X 10 = 0.1 ரூபாய் X 10 = 1 ரூபாய்

      ரூபாய் = ரூபாய் x ரூபாய் என்று வராது :
      ருபாய் x ருபாய் = ருபாய்^2

      இப்படியே யூனிட்களை கணக்கெடுக்காவிட்டால் 1 மீட்டர் = 1 செ.மீ என்று கூட நிருபிக்கலாம்

      1 m = 100 cm = 10 cm x 10 cm (ஹாங்… இங்க தான் பிரச்சனை !!!) = 0.1m x 0.1m = 0.01 m (இப்படி வராதே… 0.01m^2 என்றல்லவா வரவேண்டும் ) = 1 cm

      எப்படி cm (length) x cm (length) = cm^2 (area வோ) அதே போல் rsxrs என்றால் அது rs ^ 2

    • ரவி 4:16 pm on August 3, 2010 Permalink | Reply

      புருனோ, டோண்டு: உங்கள் இருவரும் விடைகளும் சரி :)

  • புருனோ 9:11 am on August 13, 2009 Permalink | Reply
    Tags: quiz, இராமாயணம், , , , புதிர், வேந்தன்   

    Quiz:கடன்பட்டான் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்-இந்த வரிகளை இயற்றியது யார் ??

     
  • புருனோ 5:54 am on August 6, 2009 Permalink | Reply
    Tags: இராமயணம், கம்பன், தறி, புதிர்,   

    கட்டுத்தறி என்றால் என்ன : தறியா, கட்டிலா, மாட்டை கட்டப்பயன்படுவதா, அல்லது விளக்குமாறா : விளக்குமாற்றலால் விளக்கவும் :) :) (விளக்கும் ஆற்றல்)
    less than 5 seconds ago from we

     
    • Yaro 12:22 am on August 7, 2009 Permalink | Reply

      kattu thari enbathu, “A Equipment which is used to generate sarees and dhoties”

      • புருனோ 5:04 pm on August 7, 2009 Permalink | Reply

        nchokkan @spinesurgeon கட்டுத்தறி-ன்னா துணி நெய்யற எந்திரம்ன்னு நினைச்சுகிட்டிருக்கேன், தப்பா? அல்லது இந்தக் கேள்வியே ட்ரிக் கொஸ்டினா? ;
        http://twitter.com/nchokkan/status/3166024749

      • புருனோ 5:05 pm on August 7, 2009 Permalink | Reply

        dynobuoy @spinesurgeon கட்டுத்தறின்னா மாடு(விலங்குகள்)கட்ட பயன்படும் ஒரு பொறி.தறி என்பது நெசவு இயந்திரம் மட்டுமே என்பது தவறு – ஆசிரியர் சொன்ன நினைவு! http://twitter.com/dynobuoy/status/3166094299

      • ரவி 6:48 am on August 11, 2009 Permalink | Reply

        ஒரு தமிழ்ச்சொல்லுக்குப் பொருள் தெரியாவிட்டால் மட்டும் ஏன் நமக்கு அகரமுதலி பார்க்கத் தோண மாட்டேன் என்கிறது? :( அதுவும் சொக்கன் போன்ற எழுத்தாளர்களுக்கே கூட :(

    • புருனோ 5:06 pm on August 7, 2009 Permalink | Reply

      ilamurugu@spinesurgeon கட்டுத்தறி – thozuvam
      10:04 PM Aug 6th from web in reply to spinesurgeon

      elavasam@spinesurgeon http://bit.ly/8Sh82 @nchokkan @dynobuoy
      9:43 PM Aug 6th from twhirl in reply to spinesurgeon

      elavasamகட்டுத்தறி, a stake or post to which a beast is tied. @dynobuoy @spinesurgeon @nchokkan http://bit.ly/zCZpG
      9:37 PM Aug 6th from twhirl

    • புருனோ 5:06 pm on August 7, 2009 Permalink | Reply

      paval@anbudan_BALA தறி கெட்டு-தறியில இருந்து அறுத்துகிட்டு, கட்டுத்தறிகாளை-கட்டிவச்சகாளை, கன்னுகுட்டி-சும்மா துள்ளிஓடும் @spinesurgeon @krgopalan
      about 19 hours ago from web in reply to anbudan_BALA

      anbudan_BALA”தறி கெட்டு அலைதல்”னு சொல்லுவாங்களே-அதுக்கு “மதி மெட்டு” அலைதல்னு அர்த்தம்! கட்டுத்தறி காளை “தறி கெட்டு” அலையுமோ? @spinesurgeon @krgopalan
      about 20 hours ago from web

      anbudan_BALAResp @krgopalan “கட்டுத்தறி காளை நானும் கன்னுக்குட்டி ஆனேனே, அட பொன்மானே” -மொட்டை பாட்டு :) @nchokkan @spinesurgeon
      about 20 hours ago from web

      krgopalan@spinesurgeon கட்டுத்தறி என்றால் ஆடு, மாடுகள் இரவில் அடைத்து வைக்கப்படும் இடம்….கட்டுத்தறிக் காளை கேள்விப்பட்டதில்லையா?
      about 20 hours ago from web in reply to spinesurgeon

    • ரவி 12:46 am on August 8, 2009 Permalink | Reply

    • தமிழநம்பி 8:13 pm on August 9, 2009 Permalink | Reply

      ரவி கூறியது சரி.

      ஆடு மாடுகள் மட்டுமின்றி யானை கட்டும் கம்பமும் தறி தான்.

    • தமிழநம்பி 8:23 pm on August 9, 2009 Permalink | Reply

      பெயர் விளக்கம்:
      தறித்தல் என்றால் வெட்டுதல்.
      மரத்தில் தறித்து எடுத்த கிளையைத் தறி என்றார்கள்.
      நீண்ட நேரான கிளையே வெட்டி எடுத்தபின் கம்பம் என்றாயிற்று.
      மரத்தாலானதற்கு மட்டுமின்றி மற்ற மாழை(metal)யாலான வற்றிற்கும், பொருள் விரிவாக்கமாகக் கம்பம் என்ற பெயர் வழங்கலாயிற்று.

c
compose new post
j
next post/next comment
k
previous post/previous comment
r
reply
e
edit
o
show/hide comments
t
go to top
l
go to login
h
show/hide help
shift + esc
cancel