அவன் இவன் பார்த்தேன். தாக்கத்தை ஏற்படுத்தாத பிதாமகன் இரண்டாம் பாகம். தீவிரமான கதைகளில் இருந்து விலகி குறுகிய காலத்துக்குள் வணிக வெற்றி பெறும் படம் ஒன்றைத் தரும் அவசரத்தில் எடுத்திருப்பாரோ? இதே கதையை நந்தா ராசுகிரண், சேது விக்ரம், பிதாமகன் சூர்யா பாத்திரப்படைப்பில் அக்னி நட்சத்திரம் மாதிரி எடுத்திருந்தால் படம் கன்னா பின்னாவென்று ஓடியிருக்கும்.
விசாலின் நடிப்பு கொடுமையாக இருக்கிறது. பாலாவின் மீதுள்ள மதிப்புக்காக படத்தை ஒரு முறை பார்க்கலாம். ஒரே மாதிரியான கதைகள், மனிதர்கள், காட்சியமைப்புகளில் பாலா சிக்கிக்கொண்டுள்ளார். படம் பார்க்கப் போபவர்களுக்கு ஒரு நற்செய்தி: இந்தப் படத்தில் விசால், ஆர்யா, அவர்கள் காதலிகள் யாரும் இறப்பதில்லை.
எல்லா விமர்சனங்களையும் படித்து விட்டு காத்திருந்து படத்தைப் பார்க்கும் கொடுமையை அனுபவிக்க முடியாமல் முதல் நாள் முதல் காட்சி ஐதராபாத் புறநகர் திரையரங்கு ஒன்றில் முதல் நாள் முதல் காட்சி பார்த்தேன். அரங்கு நிறைந்து இருந்தது. ஆந்திரா மக்கள் எல்லா படங்களையும் இப்படி பார்க்கிறார்களா இல்லை விசாலுக்கு அவ்வளவு கூட்டமா தெரியவில்லை.
பாலா எடுத்த 5 படங்களில் இந்தப் படத்துக்கு 5ஆம் இடம்
Santhosh Guru 10:04 pm on June 17, 2011 Permalink |
I didnt like the movie at all. I felt, the navarasa scene was the most mokkaiest scene in the whole movie.
Hari 2:38 pm on June 20, 2011 Permalink |
+1 for Santhosh thoughts. Waste of time and money. Even dhanush mappillai was much better.
Arya was more tolerable than Vishal(who over acted). Navarasa scene was forced. The police treat scene was nice. Why the lead ladies are so dumb in Bala’s movies?
ரவி 11:55 am on June 25, 2011 Permalink |
//Why the lead ladies are so dumb in Bala’s movies?//
விகடன் கேள்வி பதிலில் இதே கேள்வியை வாசகர் ஒருவர் பாலாவிடம் கேட்டிருந்தார். அதற்கு அவர் சொன்ன பதில்: “நான் loosu பொண்ணுங்களா தான் காட்டுறேனே தவிர, ஒரு போதும் கொச்சையாக காட்டுவதில்லை”. ஏற்றுக் கொள்ளக்கூடிய பதில் தான் !
ரவி 11:53 am on June 25, 2011 Permalink |
பாலா படங்களிலேயே அந்த நவரசக் காட்சி தான் ஆக மொக்கையான ஒன்று
புருனோ 8:39 am on June 26, 2011 Permalink |
விஷாலுக்கு நடிக்க தெரியும் என்று நிருபிக்க ஒரு படம் எடுத்துள்ளார்கள்
# அவன் இவன்
புருனோ 8:40 am on June 26, 2011 Permalink |
தத்துவம்
ஒரே கதையை நாலு விதமா எடுத்தா அது ஷங்கர்
நாலு கதையை ஒரே விதமா எடுத்தா அது பாலா
இதுக்கு மேல வாயை கிளறாதீர்கள
புருனோ 8:46 am on June 26, 2011 Permalink |
பல காட்சிகளும் வசனங்களும் (உதாரணம் குர்பாணி, இட ஒதுக்கீடு) வலிந்து திணிக்கப்பட்டுள்ளது அயர்ச்சியாக உள்ளது