Tagged: பண்பாடு RSS Toggle Comment Threads | Keyboard Shortcuts

  • ரவி 2:22 pm on June 30, 2011 Permalink | Reply
    Tags: , பண்பாடு, ,   

    நா. பார்த்தசாரதியின் பொன் விலங்கு புதினத்தில் கதைத் தலைவன் ஒரு கல்லூரி விரிவுரையாளன். நூலகத்தில் அமர்ந்து சேக்சுப்பியரின் நாடகத்தைப் படித்துக் கொண்டிருப்பான். அப்போது கல்லூரி முதல்வர் அங்கு வந்துள்ளதைக் கவனிக்காமல் தொடர்ந்து அமர்ந்து படித்துக் கொண்டிருப்பான். முதல்வர் சென்ற பிறகு, அவர் வந்த போது இப்படி இருந்தது மரியாதைக் குறைவாக உள்ளதே என இன்னொருவர் வினவுவார். அதற்குக் கதைத் தலைவன் கூறுவான: நான் சேக்சுப்பியரையே உட்கார்ந்து தான் படிக்கிறேன். கல்லூரி முதல்வர் அவரை விடப் பெரியவரா?

    (ரொம்ப நாள் முன்பு படித்த புதினம். ஆனால், இந்நிகழ்வு கிட்டத்தட்ட இதைப் போலவே ஏதோ ஒரு புதினத்திலாவது வரும் :) )

    கிரந்த உச்சரிப்புகளை விடுத்துத் தமிழ் எழுத்துகள் / உச்சரிப்புகளில் சொன்னால் பிறர் மனம் வருத்தப்படும் என்று நினைப்பதை இதனுடன் ஒப்பிடலாமா? ஒருவரின் மகிழ்ச்சி முக்கியமா அல்லது பல நூறு ஆண்டுகள் ஆக்கி முதிர்ந்துள்ள மொழியின் வழக்கங்கள் முக்கியமா?

    பிற மொழியில் ழகரம் இல்லை என்றால் நம்மால் ஏற்றுக் கொள்ள முடிகிறது. செருமானிய மொழியில் ramanujam என்பதை ராமானுயம் என்றால் நம்மால் ஏற்றுக் கொள்ள முடிகிறது. ர, ல போன்ற முக்கிய ஒலிகள் உலகின் பல மொழிகளிலும் இல்லை. ஆனால், நம் மொழியில் சில ஒலிகள் இல்லாவிட்டால் மட்டும் ஏன் சங்கடப்படுகிறோம்?

    பிறருக்கு மதிப்பு தருகிறோம் என்ற பெயரில் மொழி, பண்பாட்டுச் சிறப்புகளை மதிக்காமல் பிழையாகச் செய்துவிட்டு அதையே புது இலக்கணமாக மாற்ற நினைக்க வேண்டாமே?

     
  • புருனோ 6:37 am on August 21, 2009 Permalink | Reply
    Tags: , , , படை, பண்பாடு, பிள்ளையார், , பைத்தியக்காரன், , முருகன், விநாயகர்   

    தமிழர்களும் கடவுளும்

    http://naayakan.blogspot.com/2009/08/blog-post_21.html

    //இப்படி செய்வது காலம் காலமாக தமிழர்களின் வழக்கமாக இருந்துவருகிறது. எந்த நாட்டுக்கு படையெடுத்து செல்கிறார்களோ, அந்த நாட்டு கடவுளை கொண்டு வந்து தமிழர்களின் கோயிலில் வைப்பதை ஒரு முக்கிய நிகழ்வாகவே நடத்தி வந்திருக்கிறார்கள். இதற்கு ஆதாரமாக நிறைய கல்வெட்டு செய்திகளை சொல்லலாம்.//

    அதாவது

    மற்றவர்கள் எங்காவது படை எடுத்து சென்று வென்றவுடன், தங்களது கடவுளை வெற்றி பெற்ற தேசத்தில் வைப்பார்கள்

    தமிழர்கள் நேர் எதிர் போல் தெரிகிறதே

    இதற்கு பெயர் பெருந்தன்மை. ம்ற்றொரு பெயர் …………. (நீங்களே நிரப்பு கொள்ளுங்கள்

    தமிழகத்தின் விதியை பாருங்கள்.

    போரில் வென்றாலும் ஒரு புது கடவுள் வருகிறார்
    தோற்றாலும் புது கடவுள் வருகிறார்

     
  • ரவி 12:35 pm on August 7, 2008 Permalink | Reply
    Tags: ஊக்கம், , நன்றி, பண்பாடு,   

    குறை சொல்தல், விமர்சித்தல் அளவுக்கு உரிய நேரத்தில் பாராட்டி ஊக்கப்படுத்தவும் நன்றி நவிலவும் கற்றுக் கொள்ளாமல் இருக்கிறோம் :(

     
    • புருனோ 1:21 pm on August 7, 2008 Permalink | Reply

      போக போக சரியாகிவிடும் :)

      எனது பேராசிரியர் ஒருவர் கூறியது. வாழ்க்கையில Thanks சொல்வதற்கும் Sorry சொல்வதற்கும் தயங்கவே கூடாது

c
compose new post
j
next post/next comment
k
previous post/previous comment
r
reply
e
edit
o
show/hide comments
t
go to top
l
go to login
h
show/hide help
shift + esc
cancel