கடவுளர்கள் என்ன செய்வார்கள், பாவம்! மனிதர்களால் படைக்கப்பட்டவர்கள். கடவுளைப்படைத்தவர்கள் என்ன செய்வார்கள் பாவம்! அவர்கள் கடவுளை மட்டுமே படைக்கவில்லையே. படைப்பின் மர்மம் போலவே அழிவின் மர்மமும் அவிழ்க்க முடியாதது
நன்றி:
பிரேம்-ரமேஷ் (நூல்: கட்டுரையும் கட்டுக்கதையும், பக்கம் 125, மருதா வெளியீடு, ஜூன் 2006)
bsubra 1:36 pm on July 28, 2008 Permalink |
திரும்ப படிக்க ஆர்வம் இருக்கா? மறுபடியும் படிக்கும்போதும் சுவாரசியமாக இருக்குமா?
ரவி 2:31 pm on July 28, 2008 Permalink |
இல்ல. இல்ல. ஆனா, ஒரு முறையாச்சும் முழுசாவும் ஆர்வமாவும் படிக்க வைக்கிறவர்களுக்கு எழுத்துத் திறமை இருக்குன்னு வேணா சொல்லலாம்.
சாத்தான் 2:57 am on July 29, 2008 Permalink |
இஸ்கோல்ல படிக்கிறப்போ பொன்னியின் செல்வன் மூணு வாட்டி படிச்சேன். காலேஜுக்கு வந்தப்புறம் படிக்கசொல்லோ சிரிப்பு சிரிப்பா வந்துச்சு. இப்ப படிச்சா கெட்ட கோவம் வருது.
ரவி 10:51 am on July 29, 2008 Permalink |
சாத்தான், நீங்க திரும்பத் திரும்ப படிக்க அலுக்காத புத்தகம் ஏதாவது இருந்தா சொல்லுங்க. எனக்கு, The Alchemist
சாத்தான் 8:06 pm on July 29, 2008 Permalink |
இப்ப எதையுமே படிக்கிறதில்ல. கல்லூரி நாட்கள்ல The Idiot, Pride and Prejudice. Kurt Vonnegut நாவல்களைக் கூட பல முறை படிக்கலாம்.
ரவி 5:36 am on July 30, 2008 Permalink |
ஓ, நன்றி சாத்தான். தேடிப் பார்த்து படிக்கிறேன்.