Tagged: நூல் RSS

  • ரவி 3:58 pm on January 24, 2010 Permalink | Reply
    Tags: நூல், crush it   

    Crush It – Why now is the time to cash in on your passion படித்தேன். ஏற்கனவே வலைப்பதிவுகள், இணைய வணிகத்தில் உழல்பவர்களுக்குப் புதிதாக ஒன்றும் இல்லை. புத்தகத்தை விட அதை எழுதிய Gary சுவாரசியமானவர்.

     
  • ரவி 10:04 pm on January 18, 2010 Permalink | Reply
    Tags: நூல், the magic of thinking big   

    Seth Godin அண்ணாத்தை சொன்னாரேன்னு The Magic of thinking Big படிச்சேன். இது போன்ற சர்வரோக நிவாரணி (தமிழ்ல என்ன?) நூல்கள் அலுப்படிக்குது. 15 வயசிலேயே அப்பாவின் நூல் தொகுப்பில் நிறைய இது மாதிரி படிச்சாச்சு. உண்மையில தன் முன்னேற்ற நூல் படிச்சு யாராச்சும் முன்னேறி இருக்காங்களான்னு தெரியல :)

     
    • கார்த்திக் 9:35 am on January 19, 2010 Permalink | Reply

      //இது போன்ற சர்வரோக நிவாரணி (தமிழ்ல என்ன?) நூல்கள் அலுப்படிக்குது
      அளவுக்கு மீறினால், அமுதமும் நஞ்சு?

      • ரவி 11:09 am on January 19, 2010 Permalink | Reply

        நஞ்சு இல்லை. ஆனா, மொக்கை ஆகிடுது. ஆமா, அளவு மிகுந்தது வாசிப்பா, நூலா :)

  • ரவி 10:59 am on January 16, 2010 Permalink | Reply
    Tags: நூல்,   

    திரு எழுதிய “ஈழம்: இனப்படுகொலைகளுக்குப் பின்னால்” படித்தேன். ஆதிக்க நெருப்பில் எரிந்த ஈழம் என்ற பகுதி இந்தியாவின் சகுனித்தனத்தை உரித்துக் காட்டுகிறது :( பரபரப்புக்காக அல்லாமல் உண்மையான அக்கறை, ஆய்வு, பொறுமையுடன் நிறைய தகவல்களைச் சேர்த்து எழுதி இருக்கிறார். கண்டிப்பாகப் படியுங்கள்.

     
  • ரவி 10:57 am on January 16, 2010 Permalink | Reply
    Tags: நூல், purple cow,   

    Seth Godin எழுதிய Purple Cow படித்தேன். எல்லா பசுக்களும் வெள்ளையாக இருந்தால் ஊதாப்பூ நிறப் பசுவின் மீதே கவனம் செல்லும். அதே போல், உலகம் முழுக்க ஒரே மாதிரி இருப்பதால் நம்மை, நம் செயல்களை, நாம் விளைவிக்கும் பொருட்களை வியக்கத்தக்கதாக மாற்றிக் கொள்வதே முன்னேற்றத்துக்கு ஒரு வழி என்கிறார். நல்ல கரு. நூற்றுக் கணக்கான எடுத்துக்காட்டுகள் தருகிறார். அதுவே சற்று அலுப்படிக்கவும் செய்கிறது. 120 பக்க நூலை 350 ரூபாய் கொடுத்து வாங்கினாலும் சாணித்தாளில் அச்சிட்டிருப்பது ஏமாற்றம் :(

     
  • ரவி 6:00 pm on December 13, 2009 Permalink | Reply
    Tags: நூல், , , terminal   

    ராபின் குக் எழுதிய டெர்மினல் படித்தேன். மருத்துவல மசாலா. Succinylcholine கொண்டு கொல்வதை நிறைய கதைகளில் பயன்படுத்துகிறார். கற்பனை வறட்சி?

     
  • ரவி 11:23 am on November 28, 2009 Permalink | Reply
    Tags: நாவல், நூல், , , intervention,   

    Robin Cook எழுதிய Intervention படித்தேன். அவரது முந்தைய புதினங்களில் உள்ள மருத்துவ முக்கியத்துவம் போய் Dan Brown போல கிறித்தவ மர்மங்களுக்குள் புகுந்திருப்பது ஏமாற்றமே.

     
  • ரவி 11:22 am on November 28, 2009 Permalink | Reply
    Tags: நூல், dip,   

    Seth Godin எழுதிய Dip படித்தேன். ஒரு முயற்சியை எப்போது கைவிட வேண்டும், எப்போது கைவிடாமல் தொடர்ந்து செல்ல வேண்டும் என்று சொல்கிறார். ஒரு துறையில் உலகிலேயே முதல் ஆளாக இருக்க முடியாவிட்டால் அதை விட்டு விடுவது நல்லது என்கிறார்! நான் வழக்கமாகப் படிக்கும் வாடகை நூலகத்தில் இந்த நூலை வேண்ட, எனக்காகவே இந்த நூலை வாங்கித் தந்தார்கள். நல்ல கடை !

     
    • விபின் 12:39 pm on December 16, 2009 Permalink | Reply

      //நான் வழக்கமாகப் படிக்கும் வாடகை நூலகத்தில் இந்த நூலை வேண்ட//
      கோவையில் தானே ரவி ? எந்த கடை என்று சொல்லுங்களேன். :)

      • ரவி 4:22 pm on December 16, 2009 Permalink | Reply

        R.S.Puram தலைமை அஞ்சலகம் அருகே உள்ள Thiagu Book Centre.

        http://www.coimbatoreonline.co.in/yellowpages/detail.php?cat=638

        • விபின் 1:34 pm on December 17, 2009 Permalink | Reply

          ஆஹா. தியாகு புக் சென்டராகத்தாத்தான் இருக்கும் என்று நினைத்தேன். நன்றாகவே தெரியும். போய் ரொம்ப நாளாகிவிட்டது. நன்றி ரவி.

  • ரவி 1:12 pm on November 5, 2009 Permalink | Reply
    Tags: நூல், , , குட்டி இளவரசன், , classic, , the little prince   

    The Little Prince படித்தேன். அருமை. என்னைச் சுற்றி உள்ள குழந்தைகளில் பலரிலும் குட்டி இளவரசர்களைக் காண முடிகிறது. கண்டிப்பாக படிக்க வேண்டிய இலக்கியம். பரிந்துரைத்த எழுத்தாளர் S. Ramakrishnan க்கு நன்றி.

     
  • ரவி 12:13 am on November 5, 2009 Permalink | Reply
    Tags: நூல், , , , tribes   

    Seth Godin எழுதிய Tribes படித்தேன். 125 பக்கப் புத்தகம் பல நாட்களுக்கு உறங்க விடாமல் சிந்திக்க வைக்கப் போகிறது. கண்டிப்பாகப் படிக்க வேண்டிய நூல்.

     
  • ரவி 3:10 pm on October 29, 2009 Permalink | Reply
    Tags: நூல், , முகமது யூனுசு, வாழ்க்கை வரலாறு, banker to the poor   

    நோபல் பரிசு வென்ற முகமது யூனுசு எழுதிய Banker to the Poor படித்தேன். ஒரு மர்ம நாவலின் விறுவிறுப்போடு வாழ்க்கை வரலாறு எழுதப்பட்டிருக்கிறது. எல்லாரும் கண்டிப்பாக படிக்க வேண்டிய நூல். ஒரு சிறு பொறி எண்ணம் எப்படி உலகையே புரட்டிப் போடுகிறது என்பது வியக்க வைக்கிறது

     
  • ரவி 1:22 pm on October 4, 2009 Permalink | Reply
    Tags: நூல், பாம்பு, பாம்பு என்றால், , முகமது அலி, இயற்கை வரலாறு அறக்கட்டளை, இயற்கைப் பாதுகாப்பு   

    ச. முகமது அலி எழுதி இயற்கை வரலாறு அறக்கட்டளை ( 04259 – 253252 ) வெளியிட்ட “பாம்பு என்றால்?” நூல் படித்தேன். இந்தியாவில் நான்கு வகை பாம்புகளுக்கு மட்டுமே நஞ்சு உண்டு என்பது முக்கிய செய்தி. திரும்பத் திரும்பத் துணுக்குத் தோரணங்களாக வரும் செய்திகள் அலுப்பு தந்தாலும், இயற்கை ஆர்வத்தில் கைக்காசும் பெரும் உழைப்பும் செலுத்தி வெளியிடப்படும் இத்தகைய முயற்சிகள் பாராட்டுக்குரியன.

     
  • ரவி 1:19 pm on October 4, 2009 Permalink | Reply
    Tags: நூல், , , கிழக்குப் பதிப்பகம்   

    செல்லமுத்து குப்புசாமி எழுதிய “பிரபாகரன் – ஒரு வாழ்க்கை” படித்தேன். நடுநிலையான நல்ல அறிமுகம்.

     
  • ரவி 8:38 am on September 22, 2009 Permalink | Reply
    Tags: நூல், , made in japan   

    Made in Japan படித்தேன். ஒவ்வொரு பெரிய நிறுவனத்தின் மிகச் சிறிய தொடக்கமும் சிந்திக்க வைக்கிறது. சப்பானியர் வாழ்க்கை, சமூக அமைப்பு, தொழில் துறை குறித்து நிறைய அறிய முடிந்தது. கண்டிப்பாக படிக்க வேண்டிய நூல்.

     
  • ரவி 1:23 pm on September 18, 2009 Permalink | Reply
    Tags: நூல், , , the lost symbol   

    The Lost Symbol படித்தேன். டாவின்சி கோடு வார்ப்புரு. முடிவு ஏமாற்றம் தான். 506 பக்கங்கள் படிக்க 11 மணி நேரம். உங்கள் படிக்கும் வேகம் என்ன?

     
    • கலை 3:32 pm on September 18, 2009 Permalink | Reply

      //உங்கள் படிக்கும் வேகம் என்ன?//

      முன்பானா very fast. இப்போ அதையெதுக்கு சொல்ல, hehehehe :)

  • ரவி 9:58 pm on September 12, 2009 Permalink | Reply
    Tags: நூல், , the toyota way   

    The Toyota way: 14 management principles from the world’s greatest manufacturer
    By Jeffrey K. Liker
    படித்தேன். ஒவ்வொரு தொழில் முனைபவரும் கண்டிப்பாகப் படிக்க வேண்டிய நூல். தொழிலுக்கு மட்டுமல்ல வாழ்க்கைக்கும் எப்படி பயன்படுத்தலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். சப்பானியர்கள் பண்பாட்டிலேயே ஊறி உள்ள தொழில் நேர்த்தி பற்றி இன்னும் நிறைய படிக்க வேண்டும்.

     
  • ரவி 11:58 pm on August 26, 2009 Permalink | Reply
    Tags: நூல், , காட்டுயிர், கானுறை வேங்கை   

    தியோடர் பாசுக்கரன் எழுதிய கானுறை வேங்கை படித்தேன். புனைவல்லா தமிழ்ப் படைப்புகள் விரும்புவோர் கண்டிப்பாகப் படிக்க வேண்டும். தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள காட்டுயிர் ஆர்வலர்களான செல்வா, கார்த்திக் பாலா, சிவக்குமார், சுந்தர்.. தூண்டுதலால் காட்டுயிர் ஆர்வம் துளிர் விடத் தொடங்கியுள்ளது.

     
    • சந்தோஷ் குரு 5:28 pm on August 27, 2009 Permalink | Reply

      புத்தக அறிமுகத்துக்கு நன்றி ரவி. தியோடர் பாஸ்கரனின் கட்டுரைகளும் பத்திகளும் நாமறியாத பல தகவல்களை ஆர்வமூட்டும் வகையில் அறிமுகப்படுத்துவை. இந்தப் புத்தகத்தினை என்னுடைய queueவில் சேர்த்துக்கொள்கிறேன் :-)

  • ரவி 2:37 am on August 24, 2009 Permalink | Reply
    Tags: நூல், , , rich dad poor dad   

    Rich Dad Poor Dad படித்தேன். புத்தக்கத்தைப் பற்றி பல விமர்சனங்கள் இருந்தாலும், நான் ஏற்கனவே எண்ணிப் பார்க்கும் சிலவற்றை நினைக்க வைத்தது. “பணத்தைச் சேமித்துப் பணக்காரனாக முடியாது” என்பது அதில் ஒன்று.

     
  • ரவி 11:14 am on July 14, 2009 Permalink | Reply
    Tags: நூல், இன்னும் பிறக்காத தலைமுறைக்காக   

    சு. தியோடர் பாசுக்கரன் எழுதிய “இன்னும் பிறக்காத தலைமுறைக்காக” படித்தேன். படித்த மாத்திரத்தில் சூழல், காட்டுயிர் மீது ஆர்வம் கொள்ள வைக்கிறது. பல இதழ்களில் வந்த கட்டுரைகளை அப்படியே போட்டிருக்கிறார்கள். ஒரே கருத்துகள் திரும்பத் திரும்ப வருவது அலுப்பு.

     
  • ரவி 11:24 am on June 26, 2009 Permalink | Reply
    Tags: a study in scarlet, நூல், , sherlock holmes   

    Sherlock Holmes தோன்றும் A Study in Scarlet படித்தேன். அட! அட! அட! இன்று முதல் தான் Sherlock Holmes ரசிகனப்பா !

     
    • புருனோ 7:40 pm on June 26, 2009 Permalink | Reply

      அதை விட அவரது சிறுகதைகள் சிறப்பாக இருக்கும் வாசித்து பாருங்கள். அனைத்தும் இணையத்தில் இருக்கின்றன

    • புருனோ 7:56 pm on June 26, 2009 Permalink | Reply

      • ரவி 10:02 pm on June 26, 2009 Permalink | Reply

        நன்றி புருனோ. sherlock holmes தொகுப்பு நூல்களை வாடகை நூலகத்தில் இருந்து எடுத்து வந்திருக்கிறேன். இணையத்தில் படிப்பதை விட இலகுவாக இருக்கும். கட்டாயம் நீங்கள் குறிப்பிட்ட சிறுகதைகளையாவது படிக்கிறேன்.

        • புருனோ 4:51 am on June 27, 2009 Permalink | Reply

          நூலாக படிப்பது மிகவும் சுவாரசியமானது.

      • ரவி 5:26 am on June 29, 2009 Permalink | Reply

        நீங்கள் சொன்னது போல் புதினத்தை விட சிறுகதைகள் இன்னும் அருமை. தமிழில் இது போல் சிறுகதைகள் எழுதும் எழுத்தாளர்கள் உள்ளனரா? தமிழின் சிறந்த துப்பறியும் கதை எழுத்தாளர்கள் யார் யார்?

        • புருனோ 6:23 am on June 29, 2009 Permalink | Reply

          // தமிழின் சிறந்த துப்பறியும் கதை எழுத்தாளர்கள் யார் யார்//

          நடிகையின் கதையை துப்பறிந்து எழுதுபவர்கள்

    • சாத்தான் 6:58 am on July 3, 2009 Permalink | Reply

      ரவி, எனக்கென்னவோ ஷெர்லக் ஹோம்ஸை விட அகதா க்றிஸ்டியின் ப்வாரோ (Poirot) கதைகள் சுவையாக இருக்கின்றன. நீங்கள் அவசியம் அகதா க்றிஸ்டி படிக்க வேண்டும். தமிழில் கண்ணதாசன் பதிப்பகம் படுமோசமான சில அகதா க்றிஸ்டி மொழிபெயர்ப்புகளை வெளியிட்டிருக்கிறது. தொடாதீர்!

      • ரவி 9:05 am on July 3, 2009 Permalink | Reply

        பரிந்துரைத்ததற்கு நன்றிங்க. கண்டிப்பா agatha christy கதைகளை ஆங்கிலத்திலேயே படித்துப் பார்க்கிறேன்.

  • ரவி 6:02 am on June 24, 2009 Permalink | Reply
    Tags: , நூல், புதுமைப்பித்தன்   

    காஞ்சனை, செல்லம்மாள், கந்தசாமிப்பிள்ளையும் கடவுளும் உட்பட்ட சில புதுமைப்பித்தன் சிறுகதைகள் படித்துப் பார்த்தேன். நானும் இனி ஒரு தமிழ் இலக்கிய வாசகன் என்று சொல்லிக் கொள்ளலாம் தானே ;)

     
c
compose new post
j
next post/next comment
k
previous post/previous comment
r
reply
e
edit
o
show/hide comments
t
go to top
l
go to login
h
show/hide help
esc
cancel