Tagged: தமிழீழம் RSS Toggle Comment Threads | Keyboard Shortcuts

  • யாத்ரீகன் 7:33 am on April 26, 2009 Permalink | Reply
    Tags: தமிழீழம்   

    தமிழர்கள் எளிதாய் உணர்ச்சிவசப்படுபவர்கள் என்பது பாரதிராஜாவின் “பட்ட உடைப்பு” குரலுக்கு எழுந்த ஆதரவு ஆவேசக்குரல்களே சாட்சி.. அந்நேரத்தில் சரியாய் சிந்தித்த அமீருக்கு வாழ்த்துக்கள்.. எதிர்ப்பை சரியாய் பதிவு செய்யவேண்டும், அழுத்தமாய் பதிவு செய்ய வேண்டும், மறுக்கா/மறைக்கவியலா வண்ணம் செய்யவேண்டும்..

     
    • ரவி 11:30 am on April 26, 2009 Permalink | Reply

      //அந்நேரத்தில் சரியாய் சிந்தித்த அமீருக்கு வாழ்த்துக்கள்//

      ஆமாம். அமீர் இவ்வளவு நிதானமாகச் சிந்தித்தது வியப்பாக இருக்கிறது. ஆனால், உடைத்தாலும் திருப்பிக் கொடுத்தாலும் யாருக்கும் உறைக்கப் போவதில்லை :(

  • யாத்ரீகன் 7:09 am on April 26, 2009 Permalink | Reply
    Tags: தமிழீழம்   

    கவிஞர் தாமரையின் பேச்சை கேட்டுக்கொண்டிருக்கிறேன்.. அங்கு கேட்கும் கைதட்டலுக்கு அர்த்தம் என்ன ? அதுதான் பெரும்பான்மையான தமிழக சப்தமா ?!

     
    • ரவி 11:29 am on April 26, 2009 Permalink | Reply

      //அதுதான் பெரும்பான்மையான தமிழக சப்தமா ?!//

      ஆமா. ஈழப் பிரச்சினையில் பரம்பரை தி.மு.க காரர்களே வெறுத்துப் போய் இருக்கிறார்கள்.

      • ஸ்ரீ 2:51 am on April 27, 2009 Permalink | Reply

        ஈழப் பிரச்சனை இந்த தலைவர்கள் பயப்படுவது போல தேர்தலில் எதிரொலிக்காது. ஈழத்துக்கு மத்தியில் நாம் திருமங்கலத்தை காணவில்லையா? இப்படித்தான் மும்பாய் குண்டு வெடிப்பு பாஜக அலை என்றனர். அது இன்னமும் கரைக்கு வரவில்லை! வாக்காளர்கள் ஊழல்படுத்தப்பட்டபின் அரசியல்வாதிகளுக்குள் வித்தியாசம் காணுவதில்லை. எல்லோரும் காந்தியைப்போவே தெரிகின்றனர்

  • Mubaarak 6:37 am on April 26, 2009 Permalink | Reply
    Tags: , தமிழீழம்   

    Independent Tamil Eelam only solution, we will fight to attain it: Jayalalitha

    http://www.tamilnet.com/art.html?catid=13&artid=29171

     
  • Mubaarak 6:30 am on April 26, 2009 Permalink | Reply
    Tags: , , தமிழீழம்   

    ஜெயலலிதாவின் தமிழீழம் பற்றிய பேச்சைக்கேக்கும்போது நல்லாத்தான் இருக்கு. நம்பலாமா? ஜெ’ நினைத்தால் நிச்சயம் செய்வார். உண்மையிலேயே அப்படி நினைத்துத்தான் சொன்னாரா?

     
    • யாத்ரீகன் 6:53 am on April 26, 2009 Permalink | Reply

      காங்கிரஸ்,திமுக-விற்கு எதிரான வாக்கு பதிவு செய்யும் நேரம்.. அதே நேரத்தில் மக்களுக்கு பிடித்த மாதிரி கூவிவிட்டாலே தேர்தலில் ஜெயித்துவிடலாமென தப்பான அபிப்பிராயம் உருவாகிவிடக்கூடாது.. ஓட்டு போடப்போகும் சாமானிய மக்கள் என்ன செய்யப்போகிறார்கள் !!! :-(

    • ரவி 11:28 am on April 26, 2009 Permalink | Reply

      செயலலிதாவின் பேச்சு, நிலைப்பாடு எல்லாம் தேர்தல் தந்திரம் என்பதில் எள் அளவும் சந்தேகமில்லை. உண்மையான தமிழுணர்வாளர்களுக்கு இப்படி திடீரென்று தான் ஞானோதயம் வருமா?

      சில மாதங்கள் முன்பு தான் “போர் என்று வந்தால் மக்கள் சாகத் தான் செய்வார்கள்” என்றிருந்தார். தேர்தலில் வென்ற பின் “தமிழீழம் வேண்டும். ஆனால், புலிகள் தீவிரவாதிகள். அவர்கள் இல்லாமல் மலரட்டும்” என்பார். நடக்குமா?

      ஒரே ஒரு ஆறுதல். தேர்தலில் வென்றாலும் காங்கிரசோடு நெருங்குவதற்கு வாய்ப்புகள் குறைவாக இருக்கலாம். சோனியாவை எதிர்ப்பதில் மட்டும் இது வரை நிலை மாறாமல் இருக்கிறார்.

      இரட்டை இலைக்கு வாக்களிக்கலாமா என்று சிந்திப்பேன் என்று கூட கனவிலும் நினைத்தது இல்லை. எங்கள் தொகுதியில் ப.சிதம்பரம் நிற்கிறார் !!!

    • ஸ்ரீ 11:42 am on April 26, 2009 Permalink | Reply

      ஜெயாவின் பல காமெடிகளில் இதுவும் ஒன்று… என்னவோ ஈழம் அமைவது இந்திய அரசியல்வாதிகளின் கையில் இருப்பது போல ஒரு உளரல். இந்த தேர்தல் அச்சுறுத்தலே திமுக காங்கிரசை அசைக்க முடியவில்லை, தேர்தல் முடிந்தபின் ஈழம் மறக்கப்படும். ஜெயலலிதா தேசியவாதியாவார், கலைஞர் மீண்டும் தமிழன தலைவர் ஆவார். ஜெய்ஹிந்த்

    • சுந்தர் 7:50 pm on April 26, 2009 Permalink | Reply

      இனி இந்தியாவிலுள்ள அரசுகளால் எதையும் செய்து விட முடியாது. செயலலிதா தேர்தல் வெற்றிக்காக மட்டுமே இப்படிச் சொல்கிறார். ஒருவேளை, இந்திய தேர்தலுக்காகத் தான் இலங்கை தனது இறுதிக் கட்ட தாக்குதலை “மெள்ள” நடத்துகிறதோ? மே 14-ல் கொலைவெறித் தாக்குதல் நடக்க வாய்ப்புண்டு.

  • ரவி 6:15 pm on August 1, 2008 Permalink | Reply
    Tags: , கொசோவோ, தமிழீழம்,   

     
c
compose new post
j
next post/next comment
k
previous post/previous comment
r
reply
e
edit
o
show/hide comments
t
go to top
l
go to login
h
show/hide help
shift + esc
cancel