இன்று அறுவை அரங்கில் காதில் விழுந்த சில தத்துவங்கள்
1. செருப்பாணியை அடிக்க சம்மட்டி எதுக்கு
2. பொண்டாட்டி நாத்தம் புருசனுக்கு தெரியாது
3. uselessன்னு யார் வேணா சொல்லலாம், பொண்டாட்டியை தவிர
இன்று அறுவை அரங்கில் காதில் விழுந்த சில தத்துவங்கள்
1. செருப்பாணியை அடிக்க சம்மட்டி எதுக்கு
2. பொண்டாட்டி நாத்தம் புருசனுக்கு தெரியாது
3. uselessன்னு யார் வேணா சொல்லலாம், பொண்டாட்டியை தவிர
இரவுப்பேருந்தில் பயணத்தின் போது ஒருவர் மட்டும் ஓட்டுநரிடம் சண்டை போட்டு சிறுநீர் கழிக்க இறங்குவார். அதுவரை அவரை புழுபோல் பார்த்துக் கொண்டிர்ந்தவர்களும் கீழே இறங்கி அதையே செய்து முடிப்பார்கள்.. யாராவது ஒருவர் ஏதாவது செய்வார்கள் என்று எதிர்பார்த்து இருப்பார்கள்.. துயரம் என்னவென்றால் அனைவரும் அதையே நினைப்பதுதான்.
“யாரவது” செய்வார்களா என ஒரு சாரரும், “ஏன் செய்யவேண்டும் என ஒரு சாரரும் இருந்து விடுவதால்..அடுத்த தலைமுறையில் ரவி போன்றவர்களால் என்ன செய்தீர்கள் என்ற நியாமான கேள்வி எழுப்பப்படும்
Life for a desi kid without siblings in US is like a Tamil blogger who has only angrezi followers in Twitter.
கோழியை கொல்ல அரசு அனுமதி தேவையில்லை
புலியை கொல்லக்க்கூடாது
ஏன் என்று யோசித்தீர்களா
–
அது போல் மாமரத்தை வெட்ட அரசு அனுமதி தேவையில்லை
சந்தன மரத்தை வெட்ட அனுமதி தேவை
(விக்கியை) வளர்க்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது. ஆனால் அந்த பிள்ளையின் நிறமியிலேயே பல குறைகள் இருப்பதால் (அவனது மூத்த சகோதரன் வளர்ந்தவுடன் அந்த குறைகள் வெளிபட்டுவிட்டனவே !!!) கூடவே இன்னொரு பிள்ளையையும் (நால்) வளர்ப்பது அவசியம் என்பது என் கருத்து.
மேலும் ஒரு பிள்ளை கிடைத்தால் அவனையும் வளர்க்க வேண்டும்
–
இங்கு வேண்டாம் குடும்ப கட்டுப்பாடு
கண்மருத்துவர் காது மருத்துவம் பார்க்க மாட்டார் என்றால் அந்த ஊருக்கு ஒரு காது மருத்துவர் தேவை என்பதை மறுக்க மாட்டீர்கள்தானே
கண் மருத்துவர் காது மருத்துவம் பார்க்க வில்லை என்ற நிலையில் நம்ம ஊருக்கு புதிதாக வரும் காது மருத்துவரை வரவேற்க வேண்டுமா இல்லையா
விக்கியில் முடியாத பல கட்டுரைகளை எழுத நாலில் இடம் உள்ளது என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.
-
நால் விக்கியை விடவும் அதிகம் வீச்சு பெற வாய்ப்புள்ளது
விக்கி என்பது கர்நாடக சங்கீதம் என்றால் நால் என்பது திரையிசை
திரையிசை கர்நாடக சங்கீத்தை replace செய்ததா இல்லையா என்ற கேள்வி வேறு
திரையிசை, கர்நாடக இசை இவற்றில் எதன் வீச்சு அதிகம் என்ற கேள்வி வேறு
சட்டை இறுக்கமாக உள்ளது என்று கூற தையல் தெரிந்திருக்கவேண்டும் என்றோ, குழம்பில் உப்பு அதிகமாக உள்ளது என்று கூற சமையல் தெரிந்திருக்கவேண்டும் என்றோ அவசியம் கிடையாது
தூங்குபவர்களை எழுப்ப முடியும். தூங்குவது போல் நடிப்பவர்களை எழுப்ப முடியாது. (மேலும் விபரங்களுக்கு http://nanopolitan.blogspot.com/2008/08/at-glance-2008-jee-results.html )
“தீ சுடும் என்பதை தீக்குள் விரலை விட்டுதான் தெரிந்து கொள்ளவேண்டும் என்பதில்லை. அடுத்தவன் சூடு பட்டதை பார்த்தே தெரிந்து கொள்ளலாம்”
ரவி 7:49 am on August 5, 2008 Permalink |
இந்தத் தத்துவத்தை நிறைய பேர் முன்னாடியே சொல்லிட்டாங்க. இதை bruno quote என்ற போட்ட பதிப்புரிமை மீறலை வன்மையாக கண்டிக்கிறேன்
ரவி 10:13 am on August 6, 2008 Permalink |
தமிழ் வலைப்பதிவு அறிவுசீவிகள் யாரும் இதைக் கண்டு கொள்ளவில்லையே ஏன்? இது மாதிரி முன்பு உங்களுக்கு ஒரு கேள்வி வந்தது. அதன் நியாயத்தை இப்போது உணர்கிறேன்!
புருனோ 11:56 am on August 6, 2008 Permalink |
//இது மாதிரி முன்பு உங்களுக்கு ஒரு கேள்வி வந்தது//
இது தானே
http://payanangal.blogspot.com/2008/04/blog-post_06.html
ரவி 12:11 pm on August 6, 2008 Permalink |
ஆமா