இரா. நடராசன் எழுதிய ஆயிசா படித்தேன். ஒரே ஒரு சிறுகதையை மட்டும் ஒரு நூலாக பல பதிப்புகள் வெளியிடும் அளவுக்குப் புகழ் பெற்றிருக்கிறது. இந்தியக் கல்வி முறை எப்படி செக்கு மாடுகளை உருவாக்கவும் அறிவுக்கூர்மை உள்ள மாணவர்களைத் தண்டிக்கிறது என்பதைப் பற்றியும் சொல்கிறது. தமிழ்த் திரைப்படங்கள் போல சோகம் தளும்ப முடித்தது எனக்குக் கொஞ்சம் ஏமாற்றம் தான். நல்ல வேளை, எனக்குப் பள்ளியில் மிக நல்ல ஆசிரியர்கள் கிடைத்தார்கள் !