ராமு : ஏண்டா அந்த மருந்து கடைக்காரரை எல்லாரும் போட்டு கும்முறாங்க
சோமு : அவர் என்ன மருந்து வித்தாலும் சூப்பரா இருக்குடா. பாராசிட்டமாலும் சூப்பரா இருக்கும், அமாக்சியும் சூப்பரா இருக்கு, சயனைடும் சூப்பரா இருக்கு,
ராமு : இதுல என்னடா பிரச்சனை
சோமு : ஆனா என்ன, என்ன மருந்துன்னு லேபிளில இருக்காது, கொஞ்சம் சாப்பிட்டு தான் தெரிஞ்சுக்கனும்
ராமு : இப்ப வித்துட்டிருக்கிறது என்ன
சோமு : நான் சாப்பிட்டு பாக்கல, ஆனா எல்லாரும் சொல்றத வைச்சு பாத்த, சயனைட் போலிருக்கு. அதான் இந்த அளவு அடி விழுகுது…
ராமு : சயனைட் விக்குறது தப்பா ??
சோமு : நிறைய பேர் சயனை விக்கிறாங்க…. ஆனா அதெல்லாம் நல்லா இல்ல…. இங்க சயனைட் நல்லா இருக்கிறது தான் பிரச்சனைன்னு நினைக்கிறேன். அது தவிர..
ராமு : அது தவிர
சோமு : இவர் வாழைப்பழத்துக்கு நடுவுல சயனைட் வைச்சு விக்காருன்னு வேற சொல்றாங்க…..
ராமு : ??
Prabhu Rajadurai 9:37 pm on September 22, 2009 Permalink |
Have I understood this post correctly?
Is this your blog Dr.Bruno?
புருனோ 10:01 pm on September 22, 2009 Permalink |
நான் தான் சார்
http://www.payanangal.in தவிர இங்கும் எழுதுவது உண்டு
கேபிள் சஙக்ர் 6:23 am on September 23, 2009 Permalink |
haa..haa.. உங்கபாயின்ட் ஆப் வியூவே தனிதான்.
கலை 2:01 pm on September 23, 2009 Permalink |
ஒன்றுமே புரியவில்லையே…….
கலை 5:39 pm on September 23, 2009 Permalink |
இப்ப புரிஞ்சுக்கிட்டேன்
Peer 9:33 pm on September 24, 2009 Permalink |
அவர் வாழைப்பழ வியாபாரியா சயனைட் வியாபாரியா? இல்ல.. ஒன்லி வியாபாரியா?
புருனோ 8:17 pm on September 25, 2009 Permalink |
அவர் வியாபாரி மட்டுமே
ஆனால் என்ன விற்றாலும் தரமாக விற்பார்
அவர் வாழைப்பழம் விற்க அவருக்கு உரிமை உள்ளது போலவே சயனை விற்கவும் அவருக்கு உரிமை உள்ளது. அது அவரது இஷ்டம். நீங்கள் வாங்கா விட்டால் அவர் விற்கமாட்டாரே !!
அவர் வாழைப்பழத்தை விற்பதை பாராட்டவது போல் சயனைட் விற்பதை விமர்சிக்கவும் நமக்கு உரிமை உள்ளது.. இப்படி விமர்சித்தால் தான் அடுத்த முறை அவர் சயனைட் விற்க தயங்குவார் !!
இதைத்தவிர முக்கிய விஷயம்
அவர் இந்த முறை சயனைட் விற்றதால் அவரது வியாபார திறமையை விமர்சிப்பது எப்படி அறிவற்றதனமோ அதே போல் அவர் விற்றதாலேயே அது சயனைட் இல்லை, வாழைப்பழம் தான் என்று சப்பை கட்டு கட்டுவது முழு அயோக்கியத்தனம்
புரிகிறதா