ரிச்சுர்டு இசிட்டால்மேன். கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்டோர் பேர் கூடி இருப்பார்கள். இவ்வளவு கூட்டம் வரும் என நான் எதிர்பார்த்திருக்கவில்லை. நிறைய கல்லூரி இளைஞர்கள். ஆசிரியர்கள் அழைத்து வந்திருக்கக்கூடும். மூன்று மணிக்குத் தொடங்க வேண்டிய கூட்டும் நான்கு மணிக்குத் தொடங்கி ஆறு மணிக்கு மேல் நீண்டது. அவரது பேச்சில் கவர்ந்த விசயங்கள்:
- வெட்ட வெளி அரங்கில் மிகத் தீவிரமாகப் பேசிக் கொண்டிருந்தார். ஒரு பட்டாம்பூச்சி அவரைக் கடந்து போனது. அதைக் கண்டு குழந்தை போல் மகிழ்ந்து பேசினார். இதற்கும் அவரது அறிவார்ந்த கேள்வி நோக்குக்கும் ஏதும் தொடர்பு உள்ளதா? (inquisitive geek என்பதைத் தமிழில் எப்படிச் சொல்வது?)
- ஒரு மாணவர் இது மகாத்மை காந்தி பிறந்த மண் என்று பேசத் தொடங்கினார். இடைமறித்த இசிட்டால்மேன், “நான் இதை டாக்டர் அம்பேத்கார் பிறந்த மண் எனச் சொல்வேன்” என்றார் !
- கேள்வி: “பணியாற்றும் பெருநிறுவனங்கள் கட்டற்ற மென்பொருள்களை வாடிக்கையாளருக்குத் தருவதில்லை. பெரும்பான்மையோர் இத்தகைய நிறுவனங்களிலேயே வேலை செய்கிறார்கள். என்ன செய்யலாம்?”. பதில்: “வேலையை மாற்றிக் கொள்ளுங்கள்”