ச. முகமது அலி எழுதி இயற்கை வரலாறு அறக்கட்டளை ( 04259 – 253252 ) வெளியிட்ட “பாம்பு என்றால்?” நூல் படித்தேன். இந்தியாவில் நான்கு வகை பாம்புகளுக்கு மட்டுமே நஞ்சு உண்டு என்பது முக்கிய செய்தி. திரும்பத் திரும்பத் துணுக்குத் தோரணங்களாக வரும் செய்திகள் அலுப்பு தந்தாலும், இயற்கை ஆர்வத்தில் கைக்காசும் பெரும் உழைப்பும் செலுத்தி வெளியிடப்படும் இத்தகைய முயற்சிகள் பாராட்டுக்குரியன.