ஒரு கிரிக்கெட் ரசிகனாக இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை வென்றது மகிழ்ச்சி. ஆனால், ஊடகங்கள், அரசு துறைகள், அரசியல்வாதிகள், வணிகர்கள் முதலியோர் இந்தியாவின் ஆகச் சிறந்த சாதனை போல, இதனை தேசபக்தி இயக்கமாக மாற்றப் பார்ப்பது கடுப்படிக்கிறது. கிரிக்கெட்டுக்குக் கிடைக்கும் முக்கியத்துவம் ஏன் மற்ற விளையாட்டுகளுக்குக் கிடைப்பதில்லை என்று யோசிக்கத் தொடங்கினால், கிரிக்கெட்டுக்கும் தேச பக்திக்கும் உள்ள தொடர்பு என்ன என்று புலப்படும்.
Tagged: இந்தியா RSS Toggle Comment Threads | Keyboard Shortcuts
-
ரவி
-
ரவி
//I would rather hire somebody in US/Canada. I will consider job bids from the Philippines. I have absolutely no interest in working with companies from India. Too many bad past experiences.//
இது போன்று அடிக்கடி http://www.elance.com பக்கங்களில் காண இயல்கிறது.
இந்திய நிறுவனங்களின் நம்பகத்தன்மை கேள்விக்குள்ளாவது ஏன்?
-
யாத்ரீகன்
Contd. அர்த்தமில்லாத சடங்குகளில் நம்பிக்கை இல்லாத மணமகன் அப்படி தன்னோட திருமணத்தை நம்ம ஊர்ல நடத்த முடியாது,தேவையில்லாம அதுக்கு வருந்தி, வருத்தப்படவைத்து, கடைசியில் அந்த சடங்குகளில் மனமகனையே பங்கு பெற வைக்கும் கூட்டம்தான் நம்ம ஊர்ல
-
மணிகண்டன்
யாத்ரீகன், கல்யாண சடங்கு மட்டும் தான் சொல்றீங்களா ? கல்யாணத்தையே சொல்றீங்களா ?
-
ரவி
நிறைய விசயங்களை மணமக்கள் மட்டுமல்ல, அவர்களது பெற்றோர்கள் கூட முடிவு செய்ய முடியாது
குடும்ப பெரிசுகள், நிகழ்வுக்கு வரும் ஊர் பெரிசுகள் முடிவு செய்யும். சடங்கு தவிர்ப்பு சில வேளை ஒரு குறிப்பிட்ட இன, மொழி, சமய புறக்கணிப்பாகவும் மட்டுமே இருக்கிறது. அதாவது இங்கு புறக்கணிப்பு என்பது முழுக்க பகுத்தறிவு அடிப்படையில் மட்டும் இல்லை.
சடங்குக்கு நமக்குப் பொருள் தெரியாவிட்டாலும், ஒரு காலத்தில் ஏதேனும் பொருள் இருந்திருக்க வேண்டும். பல பண்பாட்டு, வரலாற்று, இனக்குழு அடிப்படை உடையவை. தாலி கட்டுவது, மஞ்சள் பூசுவது, குடத்தில் நெல் வைப்பது போன்ற பல சடங்குகள் தமிழர் தொல் வழக்கம் என்று இராம. கி அவர்கள் பதிவில் கண்ட நினைவு. நமக்குப் பொருள் தெரியவில்லை என்பதற்காக எல்லாவற்றையும் முற்றாக புறக்கணிக்க வேண்டுமா? பொருள் தேட முனையலாம்
-
-
யாத்ரீகன்
http://bit.ly/1atTb4 ஒருவழியா உருப்படியா ஒரு விவாதப்பொருள்.. நீங்க எல்லோரும் என்ன நெனைக்குறீங்க ?! ரொம்ப ரொம்ப சிக்கலான விஷயம், எது பண்ணுவது, எது கூடாதுன்னு முடிவு பண்ற உரிமை யார்கிட்ட மணமகனா/மணமகளா/இருபக்க பெற்றோர்களா ?
-
ulagam
இன்று
——
பங்கு சந்தை 2000 புள்ளிகளை தாண்டி உயர்ந்தது..மத்தியில் காங்கிரஸின் ஆட்சி மறுபடியும் வந்ததால் இந்த உயர்வு. நிலையான ஆட்சி அமைய மக்கள் வாக்களித்துள்ளனர்
——
பிரபாகரன் உயிருடன் இருக்கின்றாரா? இலங்கை அரசு 25 வருட போரை முடிவுக்கு கொண்டுவந்துவிட்டதா..? எதுவும் தெரியவில்லை. பல இடங்களில் வெவ்வேறு செய்திகள்.
—— -
ரவி
இந்தியாவை விட வளர்ந்த ஐரோப்பிய நாடுகள் 100 ஆண்டுகளாவது முன்னோக்கி உள்ளன. நாம் நுட்பத்தில் விரைவாக எட்டிப்பிடிக்கலாம். ஆனால், சமூகச் சமத்துவம், மனப்பான்மையில் அவர்களை எட்டிப்பிடிக்க நூறாண்டுக்கும் மேல் ஆகும்
-
புருனோ
அங்கு கல்வி பரவலாக்கப்பட்டு நூறு ஆண்டுகள் ஆகிவிட்டன. இங்கு இப்பொழுது தானே ஆரம்பித்துள்ளோம்
-
-
vinavu
அமெரிக்கா திவால்: டவுசர் கிழிந்த்து!
அமெரிக்கா திவாலாகிவருகிறது என்பதை ஒரு தற்காலிக பின்னடைவாக மட்டுமே பலரும் எழுதுகின்றனர். உண்மையான பிரச்சினை என்ன, இது உலகம் முழுவதும் பாதிப்பு ஏற்படுத்துவது ஏன், இதனால் எத்தனை கோடி மக்கள் வாழ்விழக்கப்போகிறார்கள் என்பதையெல்லாம் ஒருங்கிணைந்த முறையில் இக்கட்டுரை விளக்குகிறது. சூதாட்ட பொருளாதரமும் அது ஏற்படுத்தும் தவிர்க்க இயலாத அழிவும்தான் இன்றைய முதலாளித்துவப் பொருளாதாரம். அதை ஆய்ந்து சொல்கிறது இந்தக் கட்டுரை. தமிழிலும், ஆங்கிலத்திலும் இத்தகைய கண்ணோட்டத்தோடு எழுதப்படும் கட்டுரைகள் அரிது என்பதால் நண்பர்கள் இக்கட்டுரையை பலருக்கும் அறிமுகப்படுத்துமாறும் உங்கள் கருத்துக்களை தெரிவிக்குமாறும் கோருகிறோம். தமிலிஷ் இணையத்தில் இக்கட்டுரைக்கு நீங்கள் வாக்களிப்பதன் மூலம் பலருக்கும் இக்கட்டுரை போய்ச் சேருவதற்கு உதவி செய்ய முடியும்.
-
mayooresan
http://specials.rediff.com/money/2008/sep/05slide7.htm
அதிக ஊழல் உள்ள மாநிலமாக தமிழகம்
prakash 1:40 am on August 4, 2009 Permalink |
பொதுவா IT/ITES வேலைகளிலே மட்டும் தான் இப்படி. ஏன்னா,
ஒவ்வொரு வேலைக்கும் தனித்தனியான skill set தேவை ங்கறது நம்ம ஆட்களுக்குப் புரிவதே இல்லை. உதாரணமாக ஒரு portal மாதிரியான இணையத்தளத்தை நிர்மாணம் செய்யறதுக்கு concept, visualization ( in the architecture level) , design, development, implementation, testing, commercial run என்று பல படிகள் இருக்கின்றன. இதிலே ஒரு துறையிலே விற்பன்னர், தன்னால் மற்ற எல்லாவற்றையும் பார்த்துக் கொள்ள முடியும் என்று அபத்தமாக நம்பி, costing பற்றிய அறிவே இல்லாமல், quote செய்து , அரைகுறை வேலை செய்து மொத்த்மாகச் சொதப்புவது நம்ம ஆட்களுக்குக் கை வந்த கலை.
remote working இலே, நேரடியாக கஸ்டமர்களைச் சந்தித்து . ‘உண்டக்கட்டி’ வாங்க வேண்டிய அவசியமில்லை என்பதால், வந்தா மலை, போனா மசுரு என்கிற அளவில் தான் பெரும்பாலானவர்கள் இருக்கிறார்கள். இந்த ஆட்டிட்யூட், நம்ம பரம்பரைச் சொத்து. எந்த ஜெனெடிக் எஞ்சினீயரிங் விற்பன்னராலும் இதை மாற்றி அமைக்க முடியாது.
புருனோ 1:53 am on August 4, 2009 Permalink |
1. வட இந்தியர்களின் curt (அதாவது impolite) பதில்கள் – அதில் பலவற்றிற்கு காரணம் அவர்களின் முட்டாள்தனம் என்பது வேறு விஷயம்
2. Punctuality (இல்லாதது) – 10ஆம் தேதி அவர்கள் திறப்பு விழா நடத்த வேண்டிய தளத்தின் வேலையை 9 மாலை தான் ஆரம்பிப்பது
3. Testing கிடையாது – வேலை முடிந்த பிறகு அவர்கள் தான் செய்வார்கள் (எதாவது பிரச்சனை என்றால் பார்த்துக்கொள்ளலாம்)
4. ந்மது வேலையை எளிதாக்க வேண்டும் என்பதற்காக requirments gathering நிலையிலேயே உட்டாலக்கடி வேலைகள்
சித்தார்த் 2:05 am on August 4, 2009 Permalink |
நான் சென்னையில் வேலை செய்துகொண்டிருந்த நிறுவனம் அமெரிக்காவிற்கு ஆள் அனுப்பும் (bodyshopping) வேலையும் செய்து வந்தது. ஒருவர் வந்தார். ஜாவா தொடங்கி சி++ வரை எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் என்றது சிவி. நேர்காணலில் தான் தெரிந்தது, அவருக்கு ஃபோட்டோஷாப் மட்டுமே தெரியும் என்று. ஆனாலும் நம்பிக்கையுடன் சொன்னார், விசா வர 3 மாசமாவது ஆகுமில்ல? அதுக்குள்ள கத்துப்பேன் என்று. சில வாரங்கள் கழித்து அவரது விசா பேப்பர்கள் தயாராகிக்கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சியாக இருந்தது.
இப்போது நான் வேலை செய்த நிறுவனம் மூடப்பட்டு விட்டது. ஆனால் அந்த நபர் அங்கே என்ன செய்கிறார்?
கார்த்திக் 2:07 am on August 4, 2009 Permalink |
சினிமா அறிவில்லாத தயாரிப்பாளர்கள் எப்படி சினிமாவை சீரழிக்கிறார்களோ, அது மாதிரி மென்பொருள் துறையிலும் நிறைய மார்கெட்டிங் மேதாவிகள் இருந்து கொண்டு சீரழிகிறார்கள். அவர்கள் பிழைப்பதே வாய்ப் பேச்சினால் தான். மற்ற படி, அவர்களுக்கு outlook தவிர வெறு ஒன்றும் தெரியாது. டாக்டர் சொன்ன மாதிரி, இதில் வட இந்தியர்களின் பங்கு மகத்தானது.
என் குழுவிலும் கொஞ்ச பேர் இப்படி இருக்கிறார்கள். ஏதாவது பிரச்சனை என்றால், ஒரு மீட்டிங் ரூமில் புகுந்து கொண்டு பொழுதை கழிப்பது தான் இவர்களுக்கு தெரியும். எங்க product-ஐ கூட கண்ணால் பாக்காத சில பேர், அது பற்றிய முக்கிய முடிவுகளை எடுக்கும் அதிகாரத்தில் இருக்கிறார்கள்.
எந்த துறையிலும் சரி, அடிமட்ட தொழிலாளிக்கும் வசம் முடிவெடுக்கும் உரிமை கொடுக்காவிடில், கடைசியில் இப்படி தான் முடியும்.
புருனோ 2:26 am on August 4, 2009 Permalink |
//எந்த துறையிலும் சரி, அடிமட்ட தொழிலாளிக்கும் வசம் முடிவெடுக்கும் உரிமை கொடுக்காவிடில், கடைசியில் இப்படி தான் முடியும்.//
முத்தான வார்த்தைகள்
Mano 2:58 am on August 4, 2009 Permalink |
ஒரு பொருளின் தரம் விலைக்கு ஏற்ற மாதிரி மாறும். பிரகாஷ் சொல்லுவது மாதிரி எல்லா பொருளுக்கும் ஒரே விலை எப்படி சாத்திய மாகும்? ஒரு HTML வெப்சைட் பண்ணுவதற்கு 10k-50K elance ல போடுறாங்க , இதுல concept , design, UI, development, testing , usability testing, user acceptence test வேற பண்ணுமா? இல்ல நாம பண்ணுறதா சொன்னாலும் அவனுக்கு யோசிக்க தெரியாதா ? இந்த மாதிரி எல்லா process பண்ணுற கம்பெனி 10 டைம்ஸ் அதிகமா quote பண்ணுவாங்க. அவங்க கிட்ட ப்ராஜெக்ட் கொடுக்க வேண்டியது தான?
டாக்டர். புருனோ கம்ப்யூட்டர் துறையை பற்றி பேசுவதற்கு முன்னர், கொஞ்சம் தெரிந்து பேசி இருக்கலாம். தனுஷ் படத்துல சாப்ட்வேர் கம்பெனி பத்தி பேசுற மாதிரி இருக்கு. வட இந்தியர்கள பத்தி சைக்கிள் காபல வாரி விடுறாரு! தப்பா எடுத்துகாதிங்க டாக்டர்
simple probability. இந்தியர்கள் அதிகமான எண்ணிக்கையில் இருப்பதால் , தவறும் அதிகமாக வெளி காடப்படும். உதாரணத்திற்கு
100 indian projects with 10% defaulters – 10 failed projects
10 Phillipina projects with same 10% defaulters make it to 1 failed project.
ஒரு பக்கத்தில இந்தியன் freelancers மேல தப்பு இருந்தாலும் , ப்ராஜெக்ட் outsource pannuranvanga தான் முக்கியமான காரணம் . எவளோ குறைச்சு காசு தரமோ , அவளோ லாபம்னு நினைக்குறாங்க . இந்த attitude வெச்சிகிட்டு இந்தியன் சரி இல்ல , சைனா காரன் சரி இல்லன்னு சொல்லுறது
புருனோ 4:53 pm on August 4, 2009 Permalink |
//டாக்டர். புருனோ கம்ப்யூட்டர் துறையை பற்றி பேசுவதற்கு முன்னர், கொஞ்சம் தெரிந்து பேசி இருக்கலாம். தனுஷ் படத்துல சாப்ட்வேர் கம்பெனி பத்தி பேசுற மாதிரி இருக்கு//
1. என்ன தெரிய வேண்டும் என்று நினைக்கிறீர்கள்.
2. அல்லது இந்த துறையில் எவ்வளவு வருடம் அனுபவம் இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்
3. அல்லது நான் கூறியதில் எது நடக்க வில்லை என்று கூறுங்கள்
நான் முதலில் ஒரு (Billing / Stock) மென்பொருள் எழுதி அதை (ருபாய் 400க்கு) “விற்று” 15 வருடங்கள் ஆகிறது நண்பரே – foxbaseல்
foxbase என்று ஒன்று இருந்தது (dbaseக்கு தம்பி, foxproவிற்கு அண்ணன்) உங்களுக்கு தெரியுமா ?? – தப்பா எடுத்துக்காதீங்க – நீங்கள் எவ்வளவு ஆண்டுகளாக இந்த துறையில் இருக்கிறீர்கள் என்று தெரிந்து கொள்ளலாமா
ஐ.ஐ.டியில் படித்தவர்கள் அல்லது இன்பொசிசில் வேலை செய்பவர்கள் மட்டும் தான் இத்துறையை பற்றி தெரிந்தவர்களா
–
நான் சொன்ன அறியாமை காரணமான curt (அதாவது impolite) பதில்கள் என்பதற்கு நீங்கள் கூறியது நல்ல் உதாரனம் என்பது வேறு விஷயம்
கார்த்திக் 10:58 pm on August 4, 2009 Permalink |
Foxbase?? கேள்வி பட்டதே இல்ல. நான் முதலில் எழுதிய கோட், dbase & Foxpro தான். Database-ஐ மையமாக வைத்தே கோட் செய்ய வேண்டும். சுமார் 10 வருடங்கள் முன்பாக பள்ளி விடுமுறையில் பயின்றது. இப்போதெல்லாம் Foxpro-வை பயன்படுத்துகிறார்களா என்று தெரியவில்லை.
டாக்டருக்கு கோட் செய்யவும் தெரியுங்கிறது நல்ல விசயம். இது மாதிரி நாங்களும் மருத்துவ தொழிலை ஒரு ஹாபியாக பயில நினைத்தால், போலி டாக்டர் என்ற பட்டம் தான் மிஞ்சும்
புருனோ 3:32 am on August 5, 2009 Permalink |
முறைப்படி பயின்று விட்டு code எழுதுவதில் எந்த தப்புமில்லை.
// இது மாதிரி நாங்களும் மருத்துவ தொழிலை ஒரு ஹாபியாக பயில நினைத்தால், போலி டாக்டர் என்ற பட்டம் தான் மிஞ்சும் //
மருத்துவம் என்பது hobby அல்ல என்று உங்களுக்கு தெரியாதா
mano 12:32 am on August 5, 2009 Permalink |
நீங்க 15 வருஷத்துக்கு (ஒரு மூணு தலைமுறை
) முன்னாடி பண்ணி இருந்த amateur job ku பாராட்டுகள் ! அதெல்லாம் geeky days. இப்போலாம் அது matured industry ஆயிடுச்சு நண்பரே. உங்களோட technology skill set பத்தி நான் கமெண்ட் பண்ணல. நம்ம software business practices பத்தி பேசும்போது, எதுக்கு software technologies பத்தி பேசி topica dilute பண்ணனும் ?
//என்ன தெரிய வேண்டும் என்று நினைக்கிறீர்கள்.//
ஒரு companyku வேலை கொடுப்பதற்கு முன்னால் அவர்களோட practices quality certifications கேக்கணும் .
உங்களுக்கு CMMI , மேலும் பல quality certifications பத்தி தெரிய வேணும்
//அல்லது இந்த துறையில் எவ்வளவு வருடம் அனுபவம் இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்//
அனுபவம் என்பது வருடத்தில் இல்லை. புரிந்து கொள்ளுவது , நடை முறை படுத்துவதில் உள்ளது. நீங்க CMMI அல்லது சமமான தரத்தில் உள்ள software companyla வேலை பார்த்து இருந்தால் இதெலாம் தானாக புரிய வரும் .
//அல்லது நான் கூறியதில் எது நடக்க வில்லை என்று கூறுங்கள்//
ஹிஹி
Punctuality – இதெலாம் எல்லா எடத்துலயும் சொல்லுறது தாங்க. private practice முடிச்சுட்டு ,gov doctors லேட்டா தான் வராங்க. மேலோட்டமா பேசின இப்படிதான் இருக்கும்
//Testing கிடையாது //
காசு குறைவா கொடுத்து வேலை முடிக்க சொன்னா ! அதுக்கு நான் சொன்ன மாதிரி எல்லா process practice பண்ண கம்பனிக்கு போக சொல்லுங்க. கொஞ்சம் budget அதிகமா ஆனாலும் வேலை சுத்தமா இருக்கும் .
// requirements gathering நிலையிலேயே உட்டாலக்கடி வேலைகள் //
அதனால இத பாஸ் பண்ணி விடுறேன்
உட்டாலக்கடி – அப்படினா எனக்கு பிரியல
ரொம்ப நன்றி டாக்டர் , இன்னிக்கு ஆன்லைன் quota முடிஞ்சு போச்சு !
புருனோ 3:37 am on August 5, 2009 Permalink |
//Punctuality – இதெலாம் எல்லா எடத்துலயும் சொல்லுறது தாங்க. private practice முடிச்சுட்டு ,gov doctors லேட்டா தான் வராங்க. மேலோட்டமா பேசின இப்படிதான் இருக்கும் //
மேலோட்டமாக பேசுவது உங்கள் தொழில் முறை என்றால் அதற்கு என்னால் ஒன்றும் செய்ய முடியாது
அது உங்கள் பாடு, உங்களை நம்புபவர்கள் பாடு
என் தொழில் எதையும் தீர்க்கமாக செய்வது
அரசு மருத்துவர்களின் வேலை நேரம் என்னவென்று உங்களுக்கு தெரியுமா
தெரிந்தால் கூறுங்கள் பார்ப்போம்
புருனோ 3:44 am on August 5, 2009 Permalink |
//உங்களுக்கு CMMI , மேலும் பல quality certifications பத்தி தெரிய வேணும் ஒரு companyku வேலை கொடுப்பதற்கு முன்னால் அவர்களோட practices quality certifications கேக்கணும் .//
Gov doctors வேலை நேரம் என்னவென்றே தெரியாமல் அவர் வேலைக்கு தாமதமாக வருவதாக ‘பொய் கூறுவது’ எந்த certificationல் வருகிறது என்று தெரியவில்லை.
தெரிந்தால் கூறவும்
–
அப்படியே இந்திய அரசு மருத்துவர்களின் எத்தனை சதம் private practise பண்ணுகிறார்கள் என்று தெரியுமா
–
நாம் செய்யப்போகும் விஷயம், அல்லது பேசும் விஷயம் பற்றி எந்த அடிப்படை தகவலும் இன்றி, அதை தெரிந்து கொள்ள கூட முயற்சி செய்யாமல், வாய்க்கு வந்ததை எல்லாம் உளறிக்கொட்டுவது தான் software business practices ஆ….
–
Recap of the first reason I told : வட இந்தியர்களின் curt (அதாவது impolite) பதில்கள் – அதில் பலவற்றிற்கு காரணம் அவர்களின் முட்டாள்தனம் என்பது வேறு விஷயம்
–
Punctuality கிடையாது என்றும் Testing கிடையாது என்றும் நான் கூறிய கருத்துக்களை துறையில் உள்ளவரே சரி என்று இங்கு கூறிவிட்டார்
புருனோ 4:29 am on August 5, 2009 Permalink |
நீங்கள் முதலில் கூறியது
//டாக்டர். புருனோ கம்ப்யூட்டர் துறையை பற்றி பேசுவதற்கு முன்னர், கொஞ்சம் தெரிந்து பேசி இருக்கலாம். //
நீங்களே இப்பொழுது கூறுவது
//உங்களோட technology skill set பத்தி நான் கமெண்ட் பண்ணல. நம்ம software business practices பத்தி பேசும்போது, எதுக்கு software technologies பத்தி பேசி topica dilute பண்ணனும் ?//
நீங்கள் முதலில் கூறியதற்கு தான் நான் பதில் கொடுத்தேன்
நீங்கள் முதலிலேயே டாக்டர். புருனோ software business practices பற்றி பேசுவதற்கு முன்னர், கொஞ்சம் தெரிந்து பேசி இருக்கலாம்.
என்று கூறியிருந்தால் நான் விளக்கம் அளித்திருக்க முடியுது
–
அதே நேரம் ”கம்ப்யூட்டர் துறையை” என்றால் அதில் technology skill set கிடையாது என்றும் software technologies கிடையாது என்றும் software business practices மட்டும் தான் உண்டு என்றும் நீங்கள் கூறும் வரை எனக்கு தெரியாது
mano 10:13 am on August 5, 2009 Permalink
//private practice முடிச்சுட்டு ,gov doctors லேட்டா தான் வராங்க. மேலோட்டமா பேசின இப்படிதான் இருக்கும்
ஹிஹி //
ஒரு உதாரணத்திற்கு சொல்லுவது உங்கள் மனதை இப்படி பாதிக்குதே
இப்படிதான் மற்றவர்களுக்கும் இருக்கும்.
புருனோ 10:32 am on August 5, 2009 Permalink
உதாரணத்திற்கு பொய் சொல்ல கூடாது பாஸ்
இப்படி அடிப்படை விபரம் கூட தெரியாமல், தெரிந்தது போல் காட்டிக்கொள்வது (உதாரணம் போலி ரெஸ்யூம்) முக்கிய பிரச்சனை என்பது எனது வாதம்
மருத்துவர்கள் வேலை நேரத்திற்கு வருகிறார்களா, வேலை நேரம் முடிந்த பின்னரும் இருக்கிறார்களா என்பது வேறு பிரச்சனை
ஆனால் வேலை நேரத்திற்கு வரவில்லை என்று கூறும் உங்களுக்கு வேலை நேரம் எதிலிருந்து எதுவரை என்பதே தெரியாது என்பது தான் அடிப்படை கோளாறு
அதை தெரிந்து கொள்ள நீங்கள் முயற்சிக்கவில்லை என்பது அடுத்த சோகம்
அதை தெரிந்து கொள்ளாமலேயே நீங்கள அதை வைத்து விவாதம் செய்வது தான் உச்சக்கட்ட நகைச்சுவை –> இதைத்தான் நான் வட இந்தியர்களின் curt (அதாவது impolite) பதில்கள் – அதில் பலவற்றிற்கு காரணம் அவர்களின் முட்டாள்தனம் என்பது வேறு விஷயம் என்று சுட்டிக்காட்டியிருந்தேன் !!! –> அதில் முட்டாள்தனம் என்ற வார்த்தையை விட அறியாமை என்ற வார்த்தை சரியாக பொருந்தும் என்று நினைக்கிறேன்
மற்றப்படி, நான் கூறிய punctuality இல்லாதது, மற்றும் testing இல்லாதது ஆகியவை சரியான கருத்துக்கள் என்று நீங்களே சொல்லிவிட்டீர்கள்
ரவி 9:18 pm on August 5, 2009 Permalink |
கல்லூரிக்கே போகாமல் தனி ஆர்வத்தில் பயின்று உலகின் முன்னணி இணைய, கணினி சேவை நிறுவனங்களை உருவாக்கி இருக்கிறார்கள். எந்த ஒரு துறையைப் பற்றி உரையாடவும் ஒன்று அத்துறையில் முழு நேர பணியாற்ற வேண்டும். அல்லது, அத்துறையின் வாடிக்கையாளனாக இருக்க வேண்டும். புருனோ போன்றவர்கள் அரசு மருத்துவத் துறையில் கணினி மயமாக்கத்தில் பெரிதும் ஈடுபட்டிருப்பதால், நிச்சயம் இந்திய தகவல் தொழில் சேவை நிறுவனங்களிடம் வாடிக்கையாளர்களாக உறவாடிய அனுபவம் நிறைய இருக்கும்.
புருனோ 2:02 am on August 6, 2009 Permalink |
ஆமாம் ரவி
சாப்பாட்டில் உப்பில்லை என்று சமையல்காரரும் (சேவை அளிப்பவர்) சொல்லலாம் சாப்பிடுபவரும் (வாடிக்கையாளர்) சொல்லலாம்
இப்பொழுது ரவி நற நற என்று பல்லை கடிப்பது ஏன் என்று புரியாதவர்கள் http://111.118.215.7/~ularal/%e0%ae%8e%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81/ பார்க்கவும்
bsubra 6:18 am on August 4, 2009 Permalink |
—இந்தியர்கள் அதிகமான எண்ணிக்கையில் இருப்பதால் , தவறும் அதிகமாக வெளி காடப்படும்.
எவளோ குறைச்சு காசு தரமோ , அவளோ லாபம்னு நினைக்குறாங்க . —
Nice take on the issue.
Buyers tend to go with the cheapest bidder for a commodity which is not well defined.
ரவி 9:09 pm on August 5, 2009 Permalink |
இந்திய நிறுவனங்களின் குறைகளாக அனைவரின் கருத்துகளுடன் உடன்பாடு உண்டு. அதே வேளை, மனோ சொல்லுவதும் முக்கியமான விசயம். சில வெளிநாட்டவர்கள் “அடிமாட்டு விலையும் வேணும், பாலும் நல்லா கறக்கணும்” என்று எதிர்ப்பார்ப்பது முறையில்லை. சில வேளை, வெளிநாட்டுவர்களை விட உள்நாட்டவர்களுக்கே கூடுதலாக விலை வைத்து செய்ய இயலும் நிலையும் இருக்கிறது.
இன்னொன்று நான் கவனித்தது, குறைவான விலைக்குச் செய்வதாலேயே, காலனித்துவக் கால மனப்பான்மையுடன், மதிப்பளிக்காமல் வேலை ஏவுவதையும் காண இயல்கிறது. நிச்சயம் அவர்களின் உள்ளூர் நிறுவனங்களிடனம் அவர்களால் இப்படி பேசி வேலை வாங்க இயலாது.
elanceல் சில்லறை வேலை போடுபவர்கள் நிறைய பேர் http://www.fourhourworkweek.com/ போன்ற புத்தகங்களைப் படித்து விட்டு வருகிறார்கள். இந்த நூலில் மூன்றாம் உலக நாடுகளைப் பற்றிக் குறிப்பிடும் தொனி எனக்கு அவ்வளவாய் உவப்பாய் இல்லை.
புருனோ 10:39 am on August 6, 2009 Permalink |
//இன்னொன்று நான் கவனித்தது, குறைவான விலைக்குச் செய்வதாலேயே, காலனித்துவக் கால மனப்பான்மையுடன், மதிப்பளிக்காமல் வேலை ஏவுவதையும் காண இயல்கிறது.//
அரசு பள்ளி, அரசு மருத்துவமனை போல் !!
ரவி 6:50 am on August 11, 2009 Permalink |
//அரசு பள்ளி, அரசு மருத்துவமனை போல் !!//
உண்மை சுடுகிறது
ரவி 9:13 pm on August 5, 2009 Permalink |
வேலையை வெல்வதில் குறைவான விலையும் ஒரு முக்கிய காரணி. ஆனால், அது மட்டுமே ஒரே காரணி இல்லை. மிக கூடுதலான விலை, அதே வேளை நல்ல தரமான, மதிப்பு கூடிய வேலை செய்பவர்களை நாடுபவர்களும் நிறைய இருக்கிறார்கள். குறைவான விலை மட்டுமே குறியாக இருப்பவர்களை இயன்றவரை தவிர்த்து வருகிறேன். மதிப்பு நாடி வருபவர்களிடம் தொழில் உறவுகளை வளர்த்துக் கொள்வது நல்லது என நினைக்கிறேன். நாம் எவ்வளவு மதிப்பு தருகிறோம் என்பது நம் கையில் உண்டு. ஆனால், விலை அப்படி இல்லையே?