Tagged: அரசியல் RSS

  • ரவி 12:10 pm on November 22, 2009 Permalink | Reply
    Tags: , அரசியல்   

    “ஒரு விதியும் இல்லை” என்பதே அரசியலில் உள்ள ஒரே விதி.

     
  • கார்த்திக் 11:06 am on October 15, 2009 Permalink | Reply
    Tags: , , அரசியல்   

    http://thatstamil.oneindia.in/news/2009/10/15/tn-rajapakse-just-joked-says-thirumavalavan.html

    News:

    என்னை அறிமுகம் செய்த போது பிரபாகரனுடன் இருந்திருந்தால் செத்திருப்பீர்கள் என்று இலங்கை அதிபர் ராஜபக்சே நகைச்சுவையாக அதை கூறினார். நானும் அதை நகைச்சுவையாக எடுத்துக் கொண்டேன் என்றார் திருமாவளவன்

    Comment:

    உன்ன நாங்களும் நகைச்சுவையாக தான் நினைக்கிறோம்

     
  • ரவி 1:04 am on May 3, 2009 Permalink | Reply
    Tags: , மக்களாட்சி, முதலாளி ஆட்சி, , அரசியல்   

    எந்த முதலாளி வேண்டும் என அடிமைகளைக் கேட்பது போல் இருக்கிறது இந்திய மக்களாட்சித் தேர்தல்.

     
    • மணிகண்டன் 1:06 pm on May 3, 2009 Permalink | Reply

      ரவி, வாழ்க்கையிலே படிப்பு, வேலை எல்லாத்துலையும் compromise பண்ணி கொள்ளும் நாம், அரசியல்ல மட்டும் மிகவும் idealistic.

      • ரவி 9:48 pm on May 3, 2009 Permalink | Reply

        உண்மையில் அரசியலில் தான் அதிகம் சமரசம் செய்து கொள்கிறோம். ஈழப் பிரச்சினையை மட்டும் அடிப்படையாக கொண்டால், நான் எந்த பெரிய கட்சிக்குமே வாக்களிக்க முடியாது. ஆனால், வாக்களிக்கத் தான் வேண்டும். தவிர, தனி வாழ்க்கை முடிவுகள் நம்மை மட்டுமே பாதிக்கும். ஆனால், அரசியல் முடிவுகள் நம்மையும் எல்லாரையும் பாதிப்பதால் அதில் கூடுதலாக எதிர்ப்பார்ப்பது தவறில்லையே?

  • Mubaarak 6:30 am on April 26, 2009 Permalink | Reply
    Tags: , , அரசியல்   

    ஜெயலலிதாவின் தமிழீழம் பற்றிய பேச்சைக்கேக்கும்போது நல்லாத்தான் இருக்கு. நம்பலாமா? ஜெ’ நினைத்தால் நிச்சயம் செய்வார். உண்மையிலேயே அப்படி நினைத்துத்தான் சொன்னாரா?

     
    • யாத்ரீகன் 6:53 am on April 26, 2009 Permalink | Reply

      காங்கிரஸ்,திமுக-விற்கு எதிரான வாக்கு பதிவு செய்யும் நேரம்.. அதே நேரத்தில் மக்களுக்கு பிடித்த மாதிரி கூவிவிட்டாலே தேர்தலில் ஜெயித்துவிடலாமென தப்பான அபிப்பிராயம் உருவாகிவிடக்கூடாது.. ஓட்டு போடப்போகும் சாமானிய மக்கள் என்ன செய்யப்போகிறார்கள் !!! :-(

    • ரவி 11:28 am on April 26, 2009 Permalink | Reply

      செயலலிதாவின் பேச்சு, நிலைப்பாடு எல்லாம் தேர்தல் தந்திரம் என்பதில் எள் அளவும் சந்தேகமில்லை. உண்மையான தமிழுணர்வாளர்களுக்கு இப்படி திடீரென்று தான் ஞானோதயம் வருமா?

      சில மாதங்கள் முன்பு தான் “போர் என்று வந்தால் மக்கள் சாகத் தான் செய்வார்கள்” என்றிருந்தார். தேர்தலில் வென்ற பின் “தமிழீழம் வேண்டும். ஆனால், புலிகள் தீவிரவாதிகள். அவர்கள் இல்லாமல் மலரட்டும்” என்பார். நடக்குமா?

      ஒரே ஒரு ஆறுதல். தேர்தலில் வென்றாலும் காங்கிரசோடு நெருங்குவதற்கு வாய்ப்புகள் குறைவாக இருக்கலாம். சோனியாவை எதிர்ப்பதில் மட்டும் இது வரை நிலை மாறாமல் இருக்கிறார்.

      இரட்டை இலைக்கு வாக்களிக்கலாமா என்று சிந்திப்பேன் என்று கூட கனவிலும் நினைத்தது இல்லை. எங்கள் தொகுதியில் ப.சிதம்பரம் நிற்கிறார் !!!

    • ஸ்ரீ 11:42 am on April 26, 2009 Permalink | Reply

      ஜெயாவின் பல காமெடிகளில் இதுவும் ஒன்று… என்னவோ ஈழம் அமைவது இந்திய அரசியல்வாதிகளின் கையில் இருப்பது போல ஒரு உளரல். இந்த தேர்தல் அச்சுறுத்தலே திமுக காங்கிரசை அசைக்க முடியவில்லை, தேர்தல் முடிந்தபின் ஈழம் மறக்கப்படும். ஜெயலலிதா தேசியவாதியாவார், கலைஞர் மீண்டும் தமிழன தலைவர் ஆவார். ஜெய்ஹிந்த்

    • சுந்தர் 7:50 pm on April 26, 2009 Permalink | Reply

      இனி இந்தியாவிலுள்ள அரசுகளால் எதையும் செய்து விட முடியாது. செயலலிதா தேர்தல் வெற்றிக்காக மட்டுமே இப்படிச் சொல்கிறார். ஒருவேளை, இந்திய தேர்தலுக்காகத் தான் இலங்கை தனது இறுதிக் கட்ட தாக்குதலை “மெள்ள” நடத்துகிறதோ? மே 14-ல் கொலைவெறித் தாக்குதல் நடக்க வாய்ப்புண்டு.

  • புருனோ 4:26 am on April 23, 2009 Permalink | Reply
    Tags: , , அரசியல்   

    மாபா பாண்டியராஜனை விட சரத் பாபு எந்த விதத்தில் உயர்ந்தவர் ??

     
    • ரவி 1:06 pm on April 23, 2009 Permalink | Reply

      உயர்ந்தவரோ இல்லையோ கவர்ச்சிகரமானவர் என்பதாலே இவ்வளவு வெளிச்சம். குடிசை வீடு, இட்டிலிக் கடை, படித்து விட்டுத் தொழில், இளைஞர், நேரடியாக அரசியலில் குதிக்கிறார் என்று விக்ரமன் படப் பாட்டு போல இருப்பதால்…

      • புருனோ 8:04 pm on April 23, 2009 Permalink | Reply

        இப்பொழுது அவர் குடிசை வீட்டில் இருக்கிறாரா. ஏதோ மாதம் பல லட்சம் சம்பாதிப்பதகாக கூறுகிறார்கள்

        சரத் பாபுவை போல் பாண்டியராஜனும் 1992ல் 60,000 ருபாய் முதலீட்டில் தனது நிறுவனத்தை ஆரம்பித்தவர்தான்.

        • ரவி 10:44 pm on April 23, 2009 Permalink | Reply

          பழசை மறக்காமல் இப்போதும் பழைய வீட்டில் இருக்கிறார் என்று சொல்கிறார்கள். எவ்வளவு இலட்சம் ஈட்டுறார்னு தெரியல. நான் சொல்வது என்னவென்றால் ஊடகங்களுக்கு கவர்ச்சியான ஆள் தேவை. அந்த வகையில் பாண்டியராசனை விட சரத்பாபு ஒரு media darling. அவ்வளவு தான்.

          • புருனோ 3:32 am on April 24, 2009 Permalink | Reply

            அவர் ஊடகஅன்பிற்குரியவர் என்பதால் தான் இவ்வளவு கூத்தும் என்பது தான் என் கருத்து

            (அல்லது ஊடகஇனியவர்) – டார்லிங் என்ற சொல்லிற்கு பொருத்தமான தமிழ் பதம் எது)
            http://ta.wiktionary.org/wiki/darling

            • ரவி 11:30 am on April 25, 2009 Permalink

              சரியாப் போச்சு.. அவர் விசயகாந்த் கட்சியில் இருக்கிறார்னு தெரியும். ஆனால், விருதுநகர்ல போட்டி இடுறார்னு நீங்க இன்னொரு வலைப்பதிவில் குறிப்பிட்டுத் தான் தெரியும். விசயகாந்த்தும் தன்னை மட்டும் முன்னிறுத்தாமல் இது போன்ற ஆட்கள் களத்தில் இருப்பதைக் குறிப்பிட்டிருக்கலாம்.

  • ரவி 9:10 pm on February 14, 2009 Permalink | Reply
    Tags: , பதவி, , அரசியல்   

    இலங்கை அரசுக்கு எதிர்ப்பு காட்டி வணிகர்கள் ஒரு நாள் வேண்டுமானால் அடையாள கடை அடைப்பு நடத்தலாம். தொழிலையே விட்டு விட்டுப் போராட முடியாது. அதே போல், அரசியல்வாதிகளும் பதவியை விட்டு விட்டுப் போராட முடியாது.

     
  • ரவி 10:17 am on January 18, 2009 Permalink | Reply
    Tags: , , அரசியல்   

    நண்பர்கள் சிலர் என் அரசியல் கொள்கைகளுக்கு முற்றிலும் மாறாக அருவருக்கத்தக்க நிலைப்பாடுகளைக் கொண்டிருக்கையில் நட்பு பெரிதா கொள்கை பெரிதா என்று எண்ண வைக்கிறது.

     
    • புருனோ 10:48 pm on January 18, 2009 Permalink | Reply

      அனைத்து கொள்கைகளிலும் உங்களை போல் மற்றொருவர் கிடைக்க மாட்டார் :) :)

      பெரும்பாலான கொள்கைகளில் ஒரே போல் சிந்திப்பவர்கள் கிடைக்கலாம்

  • ரவி 3:58 am on January 7, 2009 Permalink | Reply
    Tags: , , , பசி, அரசியல்   

    கோடிகள் திருடுபவனைக் கும்பிட்டுவிட்டு பசிக்குத் திருடுபவனை அடிப்பது என்ன நியாயம்?

     
    • புருனோ 11:56 am on January 7, 2009 Permalink | Reply

      ராமலிங்க ராஜா பாவம்

      அவரை ஆளாக்கு மாத்தி மாத்தி சாத்துறீங்களே

    • ரவி 2:20 am on January 8, 2009 Permalink | Reply

      இல்ல அவரை நினைச்சு எழுதல. அப்பப்ப திருடர்களை மின்கம்பத்தில் கட்டி வச்சு அடித்த செய்திகளைப் பார்க்கையில் இந்த நினைப்பு வரும். சாமுராய் படத்தில விக்ரம் காவலர்களிடம் அடி வாங்கும் போது “என்னிக்காச்சும் ஊழல் செஞ்ச அரசியல்வாதிகளை இப்படி அடிச்சிருக்கீங்களா”ன்னு கேப்பாரே..

    • Mubaarak 3:23 pm on February 27, 2009 Permalink | Reply

      ரவி, உங்க உளறல்களுக்கு ரொம்பவே விசிறியாயிட்டேன். ரொம்பவே நல்லா எழுதறீங்க. இன்னொரு உளறல படிச்சிட்டு நீண்டே நேரமா யோசிச்சிட்டே இருந்தேன். இனி உங்கள விடமாட்டேன். :-)

      சினேகபூர்வம்,
      முபாரக்

    • ரவி 3:24 am on February 28, 2009 Permalink | Reply

      பாராட்டுக்கு நன்றி முபாரக்.

  • ulagam 9:33 am on September 23, 2008 Permalink | Reply
    Tags: , , அரசியல்   

    யாரு தப்பு பண்ணாங்க? விஜயகாந்தா? வடிவேலுவா? http://balachandar.net/poll278-2008-09-23.html

     
  • mayooresan 11:33 pm on September 22, 2008 Permalink | Reply
    Tags: , , , அரசியல்   

    வடிவேல் விசயகாந்து கலக்கல் காமடி. பல ஆண்டு வாழ்க இவர்கள் புகழ்.

     
    • புருனோ 11:42 am on September 23, 2008 Permalink | Reply

      இன்றைய நாளிதழ்களில் (ஆங்கில நாளிதழ்கள் உட்பட) இது குறித்து வந்த செய்தி தலைப்பு தான் காலை உணவகத்தில் அனைவரையும் சிரிக்க வைத்துக்கொண்டிருந்தது

  • ரவி 6:58 pm on August 5, 2008 Permalink | Reply
    Tags: தலைமை, , தொண்டு, அரசியல்   

    வாரிசு, சாதி, திரையுலகம் சாரா அடுத்த வலுவான சமூக / அரசியல் தலைவர் தமிழகத்துக்கு எப்போது கிடைப்பார் :(

     
    • bsubra 7:23 pm on August 5, 2008 Permalink | Reply

      திருமா போன்று இன்னொரு அலை அடிக்காமலா போகும்?

      வாரிசு – தவிர்க்க முடியாதது :)

      (இதெல்லாம் இல்லாமல் ஆரம்பித்த லோக் பரித்ராண் போன்றவர்கள் கூட உருப்படியாய் எதுவும் கொள்கை வைத்திருக்கவில்லையே?)

    • ரவி 7:49 pm on August 5, 2008 Permalink | Reply

      பாலா – திருமா போன்றவர்கள் இன்னும் ஒரு குறுகிய வட்டத்தைத் தாண்டி வர இயலவில்லை. நான் எதிர்ப்பார்ப்பது காமராசர், பெரியார் போல கட்சி வட்டங்களைத் தாண்டி ஒட்டு மொத்த தமிழ் மக்களையும் ஈர்க்கக்கூடியவர்கள்.

    • புருனோ 1:54 am on August 6, 2008 Permalink | Reply

      2018ல்

      எப்படி என்று கேட்ககூடாது. (கேட்டால் எனக்கு தெரியாது :) :) :) ) அது வரை பொருத்திருந்து பாருங்கள்.

  • புருனோ 11:24 am on July 31, 2008 Permalink | Reply
    Tags: ஏமாற்றம், , பல்டி, , ஒகேனக்கல், காவேரி, , குட்டிக்கரணம், அரசியல்   

    என்ன நடந்தாலும் தமிழர்கள் ரஜினியை புறக்கணிக்க மாட்டார்கள், என்று தமிழர்களின் பெருந்தன்மையை (இளிச்ச வாய்த்தனத்தை) சரியாகவே கணித்தது

    ரஜினி மட்டுமல்ல
    தயாரிப்பாளரும் கூடத்தான்.

    சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் உள்ள ஒரு கட்சி (2002ல் தொடர்வண்டி துறையின் இணையமைச்சர் உள்ள கட்சி) எதிர்த்தாலும் தமிழகத்தில் பாபா வெளியிடப்பட்டது. ஓடியது. படம் தோல்வி அடைந்ததற்கு படமும் ஒரு காரணம்தான்

    தமிழக அரசியல் கட்சியை 2002ல் கண்டு கொள்ளாத ரஜினி, கர்நாடகத்தில் டெபாசிட் கூட பெற முடியாத ஒருவரை கண்டு 2008ல் காலில் விழுந்து சரணடைந்தது, அதுவும் அவர் போற்றி புகழும், அவரது அரசியல் குரு தினமும் வாழ்த்தும் பா.ஜ.க ஆளும் மாநிலத்திலேயே அவரது படத்தை வெளியிட முடியாத நிலைமை.
    ஏன் என்று ரஜினி ரசிகர்கள் தான் கூற வேண்டும்

    பா.ம.க என்ன செய்யப்போகிறது என்று பார்க்க வேண்டும்

    இத்ன் மூலம் தெரிவது என்ன வென்றால் நான் எதிர்பார்த்ததை விட, நான் கணித்ததை விட ரஜினி ஒரு சிறந்த அரசியல் வாதி !!!

    ஆனால்…..

    என்ன நடந்தாலும், ஏது நடந்தாலும், குசேலன் தமிழகத்தில் ஓடினாலும் ஓடாவிட்டாலும் , கருநாடகத்தில் ஓடினாலும், ஓடாவிட்டாலும், நிதர்சணமான (சிலருக்கு கசப்பான) உண்மை. ரஜினியின் அரசியல் சகாப்தம் 31-07-2008 உடன் முற்றிலும் முடிந்து போய்விட்டது…. (அதாவது தமிழக அரசியல் சகாப்தம்)… 2004 நாடாளுமன்ற தேர்தலிலேயே குற்றுயிராகத்தான் இருந்தது வேறு விஷயம். தீவிர சிகிச்சை பிரிவிலிருந்த ரஜினியின் அரசியல் வாழ்க்கையின் முச்சு குழாயை ரஜினியே நிறுத்து விட்டது நகைமுரண்.

    தன்னை ஒரு அரசியல் வாதியாக நீக்கமற பறைசாற்றும் ஒரு சம்பவமே ஒருவரின் அரசியல் வாழ்விற்கு சாவு மணி அடிப்பது விநோதம் தான்

    வாழ்க்கையும் விநோதம் தான்

     
c
compose new post
j
next post/next comment
k
previous post/previous comment
r
reply
e
edit
o
show/hide comments
t
go to top
l
go to login
h
show/hide help
esc
cancel