Tagged: புத்தகம் RSS Toggle Comment Threads | Keyboard Shortcuts

  • ரவி 8:13 pm on January 17, 2012 Permalink | Reply
    Tags: கூழாங்கற்கள் பாடுகின்றன, , புத்தகம்   

    சென் கவிதைகள் பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வத்தில் எசு. இராமகிருசுணன் எழுதிய கூழாங்கற்கள் பாடுகின்றன படித்தேன். அங்கங்கு தயிர்மை நடை உறுத்தினாலும், பரவாயில்லை. வழ வழா விளக்கங்களைத் தவிர்த்து இன்னும் நிறைய கவிதைகளை எடுத்துக் காட்டி இருந்தால் நன்றாக இருக்கும்.

     
  • mayooresan 3:47 pm on October 4, 2011 Permalink | Reply
    Tags: , புத்தகம்   

    Do the Right Thing புத்தகம் வாசித்தேன். South West விமான சேவையின் முன்னாள் நிறைவேற்று அதிகாரி எழுதிய புத்தகம். தொழில் முனைவர்கள், குறிப்பாக புதிய தொழிலை ஆரம்பிப்போர் வாசிக்க வேண்டிய புத்தகம். ஹிட்லர் முறையில் வேலை வாங்கும் காலம் மாறி விட்டது, நிறுவனத்திற்காக வேலைப் படையணி உணர்வு பூர்வமாகச் செயற்பட வேண்டும் என்பதைக் கூறும் புத்தகம். ஆரம்பத்தில் சிறப்பாக இருந்தாலும் போகப் போக அலுப்படித்து விட்டது.

     
    • ரவி 11:44 am on October 7, 2011 Permalink | Reply

      எனக்கும் பல தொழில்முனைவு புத்தகங்கள் பாதி படிக்கையிலேயே அலுக்கத் தொடங்கி விடுகிறது.

      சில நல்ல நூல்களின் தொகுப்பு இங்கு கிடைக்கிறது:

      http://sivers.org/book

  • ரவி 7:43 pm on September 3, 2011 Permalink | Reply
    Tags: trust agents, புத்தகம்   

    Trust Agents படித்தேன். புதிய பொருளாதாரத்தில் ஒவ்வொருவரும் நம்பிக்கைக்கு உரியவர்களாகவும் தொடர்புகளை வளர்த்துக் கொள்வதன் மூலமும் வெற்றி பெற முடியும் என்கிறார்கள். ஏற்கனவே இணையத்தில் புரண்டு எழுபவர்களுக்கு புதிதாகப் பெரிதும் இருக்காது. பக்கத்துக்குப் பக்கம் டுவிட்டர், பேசுபுக் என்று இருப்பது அலுப்படிக்கிறது.

     
  • ரவி 5:33 pm on September 3, 2011 Permalink | Reply
    Tags: உயிர்மை, , பதிப்புத் துறை, புத்தகம்   

    கிருசுணன் ரஞ்சனா எழுதிய “இப்போது அவை இங்கு வருவது இல்லை” படிக்க முயன்றேன். ஒவ்வொரு பத்தியிலும், எண்ணற்ற இலக்கணப் பிழைகள் மலிந்துள்ளதால் படிக்கப் படிக்கத் தலைவலியும் எரிச்சலுமே மிஞ்சின. முக்கியமான ஒருமை-பன்மை வேறுபாடுகள், சந்தி இலக்கணத்தைக் குழி தோண்டிப் புதைப்பது போலவே பலரும் செயல்படுகின்றனர். அச்சில் உள்ளது எல்லாம் சரி என்று நினைக்கும் மனப்பாங்கு உள்ளதால், வருங்காலத்தில் தமிழ் இலக்கணத்தைச் சிதைப்பதில், மறக்கடிப்பதில் போய் தான் முடியும். எழுத்தாளருக்கு எழுதத் தெரியாவிட்டாலும், பதிப்பகத்தின் தொகுப்பாசிரியர் என்ன செய்கிறார்? உயிர்மை பதிப்பகம் என்பதற்குப் பதில் தயிர்மை பதிப்பகம் எனச் சொல்லலாம்.

     
  • ரவி 7:44 pm on October 17, 2010 Permalink | Reply
    Tags: good to great, தன் முன்னேற்றம், , புத்தகம்,   

    Jim Collins எழுதிய Good to Great படித்தேன். சாதாரணமாக இயங்கிக் கொண்டிருக்கும் நிறுவனங்கள் எப்படி காலத்தைக் கடந்த நிறுவனங்களாக மாறுகின்றன என்பதை ஐந்தாறு ஆண்டுகள் ஆய்வு செய்தி எழுதி இருக்கிறார். கண்டிப்பாகப் படிக்க வேண்டிய நூல்.

     
  • ரவி 5:31 pm on October 9, 2010 Permalink | Reply
    Tags: linchpin, , , புத்தகம்   

    Seth Godin எழுதிய Linchpin படித்தேன். எங்கிருந்தாலும் நாம் ஒரு அச்சாணி போல இருக்க வேண்டும் என்கிறார். தற்காலக் கல்வி முறை எப்படி ஒரு மிகப் பெரிய மோசடி என விளக்குகிறார். செய்யும் தொழிலை கலையாகப் பார்த்து, உலகுக்கான பரிசாக அளிக்க வேண்டும் என்கிறார். புத்தகம் கொஞ்சம் வழா வழா கொழ கொழா தான். ஆனால், கரு முக்கியமானது. அவருடைய வலைப்பதிவைப் படிப்பவர்களுக்குப் புதிதாக ஏதும் இருக்காது.

     
  • ரவி 11:24 pm on May 31, 2010 Permalink | Reply
    Tags: பனி மனிதன், , புத்தகம்   

    அக்கா மகளுக்குப் பரிசு தருவதற்காக செயமோகன் எழுதிய பனி மனிதன் வாங்கினேன். அவதார் திரைப்படத்தில் வரும் நாவிக்கள் போல பனி மனிதர்கள் இருக்கிறார்கள் !! 10, 15 ஆண்டுகளுக்கு முன்பு தினமணிச் சுடரில் தொடராக வெளிவந்த போது இரசித்துப் படித்த புத்தகம். இன்றும் கதை நினைவில் இருக்கிறது.

     
  • சந்தோஷ் குரு 2:19 pm on May 31, 2010 Permalink | Reply
    Tags: புத்தகம்   

    அண்மையில் ஒசாமு டெசுகா (Osamu Tezuka) எழுதிய புத்தா என்ற எட்டு பாகம் கொண்ட நூலை படித்தேன். எட்டு பாகம் என்றதும் முழிக்கவேண்டாம் :) . அது ஒரு கிராஃபிக் நாவல். நம்மூர் மொழியில் காமிக்ஸ். ஆகையால் மின்னல் வேகத்தில் படித்துமுடிக்க முடிந்தது. அட்டகாசமான படைப்பு இது. புத்தர் பிறந்த காலகட்டத்தினை அருமையாக விவரித்து அவருடைய வளர்ச்சி, கொள்கைகளை மிக எளிதாக, ஒரு பள்ளி செல்லும் மாணக்கன் கூட புரிந்து கொள்ளும் வகையில் எழுதப்பட்ட புத்தகம். காமிக்ஸ் மூலம் இலக்கியம் கூட படைக்கமுடியும் என்பதை இப்போது தான் தெரிந்துகொள்கிறேன். புத்தர் பற்றியும் பவுத்தம் பற்றியும் சிறுவர்களுக்கு (பெரியவர்களும் கூட தான்)அறிமுகம் செய்ய ஏற்ற புத்தகம் இது. கண்டிப்பாக must-read என்று கூறுவேன்.

     
  • ரவி 3:30 pm on May 8, 2010 Permalink | Reply
    Tags: , , புத்தகம்   

    பல்லவி எழுதிய சீனா:விலகும் திரை படித்தேன். அருமையான மொழிபெயர்ப்பு நூல். சீனா பற்றி பல்வேறு மட்டங்களிலான புரிதலை மேம்படுத்தியது.

     
    • கலை 3:57 am on May 9, 2010 Permalink | Reply

      தலைப்பைப் பார்த்தால் புத்தகம் வாசிக்க வேண்டும்போல் உள்ளது.

    • சந்தோஷ் குரு 4:24 pm on May 11, 2010 Permalink | Reply

      சமீபத்தில் படித்த தமிழ் புத்தகத்தில் எனக்கு மிகவும் பிடித்த புத்தகம் இது. பயணக்கட்டுரை போன்ற நடையும், சீனா பற்றிய பல செய்திகளை விரிவான பார்வையில் தந்த ஒரு நல்ல புத்தகம். இதை போன்று சுவையான அதே சமயம் செறிவான பலதுறைகளைப் பற்றி தமிழில் புத்தகம் வந்தால் ஆங்கிலத்தில் படிப்பதைவிட தமிழில் படிப்பதற்கே முன்னுரிமை கொடுப்பேன் :-)

      • ரவி 9:52 pm on May 11, 2010 Permalink | Reply

        ஆமாம், இந்த வகையில் கிழக்கின் நேரடிப் புத்தகங்களை விட மொழிபெயர்ப்புப் புத்தகங்களை நம்பிப் படிக்கலாம் :)

  • ரவி 10:12 pm on April 28, 2010 Permalink | Reply
    Tags: , what the dog saw, , புத்தகம்   

    What the Dog Saw படித்தேன். சிந்திக்க வைக்கும் கட்டுரைகளின் தொகுப்பு. தாராளமாகப் படிக்கலாம்.

     
c
compose new post
j
next post/next comment
k
previous post/previous comment
r
reply
e
edit
o
show/hide comments
t
go to top
l
go to login
h
show/hide help
shift + esc
cancel