முன்பு எம்.ஜி.ஆர்., ரஜினி, என்று நாயகர்களுக்காக படம் பாக்க போனோம்.
அப்புறம், விழிப்புணர்வு வந்து மணி, சங்கர், கௌதம் மேனன் என்று இயக்குனர்களுக்காக படம் பார்க்க போனோம்
ஆனால் இந்த இரு வகையினராலும் வெற்றியை நிரந்திரமாக கொடுக்க முடிவதில்லை.
சினிமா ஒன்றும் விளையாட்டல்ல, வெற்றி, தோல்வி சகஜம் என்று சொல்ல.
கதை, திரைக்கதை, பொழுதுப்போக்கு அம்சம் – இவற்றில் ஏதேனும் ஒன்றாவது வலுவாக இருந்து, சரியான திட்டமிடல் இருந்த்தால் தான் வெற்றி கிடைக்கும்.
அப்படியில்லாமல் ஏனோ தானோவென்று படம் எடுக்கும் வரையில், so called மசாலா இயக்குனர்களும், so called Best Indian இயக்குனரும் (மணிரத்னம்) ஒன்று தான்.
தான் மட்டும் ரசிக்கும் படியே படம் எடுத்துக் கொண்டிருந்தால், எதுக்கு தியேட்டருல ரிலீசு பண்ணணும்?
கோவையில் இரண்டு சிறுவர்களைக் கடத்திக் கொன்ற நிகழ்வாகவும் இருக்கலாம். அஞ்சாதே படமே சிறுவர் கடத்தலைப் பற்றியது தானே..படம் வரட்டும் பார்ப்போம்..