Updates from சந்தோஷ் குரு RSS Toggle Comment Threads | Keyboard Shortcuts

  • சந்தோஷ் குரு 2:16 pm on January 12, 2010 Permalink | Reply
    Tags:   

    இந்தியாடுடே இதழில் கமலஹாசன் பரிந்துரைத்த சிலபடங்களை பார்க்க துவங்கியுள்ளேன். Red Cliff (மொத்தம் நான்கு மணி நேரம் ஓடும் இரு பாகங்கள் கொண்ட படம்) என்ற திரைப்படம் பார்த்தேன். பல மசாலா படங்கள் கொடுத்த John Woo இயக்கியிருக்கிறார். தமிழில் ”மகா யுத்தம்” என்ற பெயரில் சென்னையில் ஓடுகிறது. முடிந்தால் கண்டிப்பாக பார்க்கவும், நல்ல ஒரு வரலாற்று ஆக்‌ஷன் திரைப்படம். நம் தொன்மத்தில் கூறும் சக்ரவியூகம் போல சீனாவில் உள்ள யின்-யாங் போர் உத்தி இந்த படத்தில் பயன்படுத்துகிறார்கள். கலக்கலாக உள்ளது. நம்மூர் ஷங்கரின் பிரம்மாண்டம் எல்லாம் John Woo முன்னால் பச்சா :-) .

     
    • ரவி 10:53 am on January 16, 2010 Permalink | Reply

      கமல் பரிந்துரைத்த முழுப் பட்டியல் கிடைக்குமா?

      • சந்தோஷ் குரு 1:35 pm on January 19, 2010 Permalink | Reply

        அது இந்தியாடுடே இதழ் அல்ல, சண்டே இந்தியன்

        What kind of world cinema do you like?

        If I mention only Citizen Kane, I would be leaving out Seventh Seal. Even if I select 60 films like Citizen Kane and Seventh Seal, I would still be leaving out some great modern films. There is a film called Magnolia, an American classic. And No Country for Old Men. Then there is Goya’s Ghosts. It was widely seen only in Europe, not in other parts of the world. There is another American movie called One False Move, which was released 15 years ago and it hardly had any takers. There are so many other movies. John Woo’s Red Cliff is such a grandiose movie.

        (அவருடைய நேர்காணல் இங்கே)

  • சந்தோஷ் குரு 11:39 am on January 9, 2010 Permalink | Reply
    Tags:   

    கடந்த இரண்டு நாட்களாக என் நண்பன் மூலம் (அவனுக்கு தெஹல்கா வழியாக) அறிமுகமான, குழலி மாணிக்கவேல் என்ற எழுத்தாளரின் எழுத்துக்கு அடிமையாகியிருக்கிறேன். வழக்கமான பாணி சிறுகதை அல்ல இவருடையது, இருந்தும் மறுபடி மறுபடி வாசிக்கவைக்கும் வசீகரம் கொண்டிருக்கிறது இவர் எழுத்து. இவருடைய இரு சிறுகதைகளும் (1,2), வலைப்பதிவு மட்டுமே எனக்கு அறிமுகம். ஆனால் கண்டிப்பாக இவருடைய முதல் சிறுகதை தொகுப்பினை படித்தே ஆகவேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டிருக்கேன்..

     
    • ரவி 10:02 pm on January 11, 2010 Permalink | Reply

      பேரிலேயே ஒரு ஈர்ப்பு இருக்கே ! இன்னும் ஆங்கிலச் சிறுகதைகள் படிக்கத் தொடங்கல. நல்லா புரியுற மாதிரி எழுதுற நாலு பேர் சொல்லுங்க :)

      • புருனோ 2:30 am on January 12, 2010 Permalink | Reply

        O.Henry
        Conan Doyle
        Jeffrey Archer
        Fredrick Forysth

        என்று ஆரம்பிக்கலாம்

  • சந்தோஷ் குரு 11:23 am on January 9, 2010 Permalink | Reply
    Tags:   

    The Baader Meinhof Complex என்ற ஜெர்மன் மொழிப்படம் பார்த்தேன். நம் மாவோயிஸ்ட் இயக்கம் போல, பல ஆண்டுகளுக்கு முன் ஜெர்மனியினை உலுக்கிய ரெட் ஆமி ஃபேக்‌ஷன் (RAF) பற்றிய திரைப்படம். அருமையாக இருந்தது என்று சொன்னால் அது வழக்கமான புகழுரை. வரலாற்றை முடிந்தவரை நடுநிலையாகவும், ஆச்சரியம் குறையாமல் தந்த ”ஒக்காமக்கா” திரைப்படம். Downfall படத்தில் ஹிட்லராக வந்து அசத்திய Bruno Ganzயை ஒரு காவலதிகாரியாக இதில் கண்டது நல்ல ஆச்சரியம்.

     
  • சந்தோஷ் குரு 10:08 pm on January 4, 2010 Permalink | Reply
    Tags:   

    இந்த வருட புத்தகக் கண்காட்சியில் “குடிபோதை: புனைவுகள் தெளிவுகள்” என்ற கட்டுரைத் தொகுப்பினை வாங்கினேன். புத்தக அட்டையில் ஆசிரியர்கள் பெயர் எதுவும் இல்லை. வீட்டுக்கு வந்தவுடன் அதைப் பார்த்து மறுகணமே, என் மனைவியும், என் தம்பியும், “யாரு உன் சாரு நிவேதிதா எழுதுன புக்கா” என்று கேட்கிறார்கள். சாருவின் ஒரு எழுத்தும் முழுதாக படிக்காதவர்கள் அவர்கள். எப்படி இப்படி ஒரு இமேஜ் பில்டப் பண்ணினாரு சாரு.

     
  • சந்தோஷ் குரு 2:44 pm on September 29, 2009 Permalink | Reply
    Tags:   

    பொக்கிஷம் படம் பார்த்தேன். எனக்கு பிடித்திருந்தது. இந்த படத்தைப்பற்றி விரிவாக எழுத ஆசை எனக்கு. நிசமாலுமே சேரன் கோடம்பாக்கத்தின் ஒரு அபூர்வ படைப்பாளிதான்.

     
  • சந்தோஷ் குரு 1:55 pm on September 29, 2009 Permalink | Reply
    Tags: ,   

    கமலின் ஐம்பதாண்டு திரையுலக பிரவேசத்தை முன்னிட்டு, கமலதாரா ஸ்தோத்திரம், ஹாசர் அந்தாதி, கமலா சகஸ்ரநாமம் வெளியீட்டு விழா. உபயம்: விஜய் டி.வி. மறக்காமல் இன்று இரவு 8:30க்கு பாருங்கள். இல்லையென்றாலும் பரவாயில்லை இரவு 10:30க்கு ஒரு தடவையும், மறுநாள் காலை 11:00க்கும், மதியம் 2:30க்கும் கூட பார்க்கலாம். அதையே ஒரு மாதம் கழித்து “கமல் – விஜய் கோல்டன் மொமண்ட்ஸ்” என்று நிகழ்ச்சியில் ஒவ்வொரு மாதமும் பார்த்துக்கொண்டே இருக்கலாம். உலக நாயஹ நமோ நமோ.

     
  • சந்தோஷ் குரு 12:50 pm on September 10, 2009 Permalink | Reply
    Tags:   

    ரீதிகௌளை பித்து கொஞ்ச நாட்கள் முன்பு பிடித்திருந்தது. மறுபடியும் அது துவங்கியுள்ளது. நான் அறிந்த ரீதிகௌளை ராக திரைப்பாடல்களை இங்கு பதிகிறேன். உங்களுக்கு வேறு பாடல்கள் தெரிந்தால் பின்னூட்டவும்.

    கண்கள் இரண்டால் – சுப்ரமணியபுரம்
    கல்கோண உதட்டுக்காரி – ஒரு பொண்ணு ஒரு பையன்
    அழகான ராட்சசியே – முதல்வன்
    சுடும் நிலவு – தம்பி
    சின்ன கண்ணன் அழைக்கிறான்
    தீண்ட தீண்ட – துள்ளுவதோ இளமை
    தலையை குனியும் தாமரையே – (படம் பெயர் எனக்கு தெரியவில்லை)
    ராமன் கதை கேளுங்கள் – சிப்பிக்குள் முத்து

    ஜெயா தொலைக்காட்சியில் ரீதிகௌளை பற்றிய ஒரு அறிமுகம்

     
  • சந்தோஷ் குரு 1:49 pm on September 7, 2009 Permalink | Reply
    Tags:   

    சென்னையில் இருந்து சோளிங்கர், அங்கிருந்து பெங்களூருக்கு நான் செலவழித்த பேருந்து கட்டணம் மொத்தம் 180 ரூபாய். பெங்களூர் கிருஷ்ணராஜபுரத்தில் இருந்து என் வீட்டுக்கு செல்ல ஆட்டோவுக்கு அளித்த கட்டணம் 150 ரூபாய் :-)

     
    • ரவி 3:12 pm on September 7, 2009 Permalink | Reply

      அரிசி கிலோ ஒரு ரூபாய். சிறுநீர் கழிக்க 2 ரூபாய்.

    • R.Arokiasamy 10:20 pm on September 16, 2009 Permalink | Reply

      govt. gives 1rs. rice. but urinal 2rs .its too bad.

  • சந்தோஷ் குரு 3:49 pm on September 4, 2009 Permalink | Reply  

    நெருங்கிய நண்பனொருவன் ”வாழும் கலை” வணிகர் ரவிசங்கரின் தீவிர பக்தன். சில நாட்களாக ஆளை காணவில்லை, இரண்டு நாட்கள் முன்பு பார்த்தால் மொட்டை அடித்து கொண்டு இருக்கிறான். என்னவென்று விசாரித்தால், அவன் பூணூல் அணிந்து பார்ப்பனனாக மாறிவிட்டானாம் (அவன் பார்ப்பனனும் அல்ல, பூணூல் அணியும் பழக்கமும் அவனுக்கு இல்லை). ஏனென்று கேட்டால், ருத்ரமும் காயத்ரி மந்திரமும் கற்றுக்கொள்ள ஆசை வந்தது, cross belt இல்லை என்றால் கற்றுக்கொள்ள கூடாதாமே, அதனால் மாறிவிட்டேன், கோத்திரமும் மாறிவிட்டது என்கிறான். நான் அதிர்ச்சியினை சமாளித்துக்கொண்டு, உங்க ரவிசங்கர் ருத்ரம், மந்திரம் எல்லாம் சொல்வரா என்றேன். “ஆம்” என்றான். அவர் பூணூல் அணிகிறாரா என்றேன். டேய் அவர் எல்லாம் செயிண்ட்டுடா அவர் எதுக்கும் அதையெல்லாம் போடணும்னு என்னை மடக்குகிறான்.

    எங்க போய் முட்டிகிறதுன்னு தெரியல.

     
    • ரவி 4:21 pm on September 4, 2009 Permalink | Reply

      //எங்க போய் முட்டிகிறதுன்னு தெரியல.//

      மோதி விளையாடு படம் ஓடும் திரையரங்க வாசலில் :)

  • சந்தோஷ் குரு 1:53 pm on September 4, 2009 Permalink | Reply
    Tags: குறும்பதிவு   

    அண்மையில் ஒரு தொலைக்காட்சி நேர்காணலில், இயக்குநர் சேரனிடம் \ஒருவர் “நீங்க இவ்ளோ கஷ்டப்பட்டு, கடின உழைப்புக்குபின் பொக்கிஷம் போல ஒரு படம் எடுக்குறீங்க. ஆனா எவனோ ஒருத்தன் ப்ளாக்குல பொக்கிஷம் வந்து இந்த கொரியன் படம் மாதிரியும் தாய்வான் படம் மாதிரியும் இருக்குன்னு எழுதுறானே” என்று ஆவேசமாகக்கேட்டதைப் பார்த்து எனக்கு சிரிப்பு தான் வந்தது. இதைபோலவே கந்தசாமி கந்தல் ஆனதும் இதனால் தான் என்றும் பேச்சு நிலவுகிறது (எவ்வளவு உண்மை என்று தெரியவில்லை).

    பத்திரிக்கைகளில் வரும் விமர்சனங்களையும், சம்பந்தப்பட்ட செய்திகளும், பில்டப்புகளும் பெரும்பாலும் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர்களின் marketing எந்திரங்களுக்கு கட்டுக்குள் உள்ளது. வலைப்பதிவுகள் அந்த கட்டுக்குள் இல்லை என்பதாலையா. அப்படி என்றால் இனி வருங்காலங்களில் பணம் செலவழித்து இவர்களே வலைப்பதிவு, பின்னூட்டம் என்று பல்கிபெருகி market செய்ய முயல்வார்கள் என்று எண்ணுகிறேன்.

     
    • என். சொக்கன் 2:36 pm on September 4, 2009 Permalink | Reply

      சாத்தியமுள்ள கற்பனைதான்!

      ஒரு கோரிக்கை – இந்த உளறல் டாட் காம் URL எல்லாம் ரொம்ப நீளமா இருக்கு – ட்விட்டர்ல நேரடியா பேஸ்ட் செய்யமுடியலை, இதுக்கு ஏதாச்சும் செய்யக்கூடாதா?

      • என். சொக்கன்,

      பெங்களூர்.

      • ரவி 3:18 pm on September 4, 2009 Permalink | Reply

        சுட்டிக்காட்டியதற்கு நன்றிங்க. prakash சொன்னபடி tweetmeme button நீட்சி போட்டிருக்கேன்.

        wp.me shorturl ( http://en.blog.wordpress.com/2009/08/14/shorten/ ) வசதி விரைவில் தனித்தள வலைப்பதிவர்களுக்கு கிடைத்தால், உடனே உளறலில் செயல்படுத்தி விடுவோம்.

    • prakash 3:04 pm on September 4, 2009 Permalink | Reply

      //இனி வருங்காலங்களில் பணம் செலவழித்து இவர்களே வலைப்பதிவு, பின்னூட்டம் என்று பல்கிபெருகி market செய்ய முயல்வார்கள் என்று எண்ணுகிறேன்//

      அப்படிச் செய்தால், அது ஒரு கம்பெனியின் பி.ஆர். ரிலீஸ் போலத்தான். கால்காசுக்கு மதிப்பில்லை. என்ன செய்வார்கள் என்றால், influence உள்ள வலைப்பதிவாளர்களை விலைக்கு வாங்க முயல்வார்கள். இப்பவே, IT products, gadgets ஸ்பேசில், இவர்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. pay-per-post, pay-per-review என்கிற மாடல்களில்.

      insider information இன் படி, கந்தசாமியும், பொக்கிஷமும், வலைப்பதிவு விமர்சனங்களால், பெருத்த அளவு டேமேஜ் அடைந்தது உண்மைதான். ஆனால், watchable என்கிற அளவில் இருக்கும் படங்களை, வலைப்பதிவு விமர்சனங்கள் கவிழ்த்து விட முடியாது. உதாரணம், தசாவதாரம், அயன்.

      • ரவி 3:22 pm on September 4, 2009 Permalink | Reply

        //insider information இன் படி, கந்தசாமியும், பொக்கிஷமும், வலைப்பதிவு விமர்சனங்களால், பெருத்த அளவு டேமேஜ் அடைந்தது உண்மைதான்.//

        அட :) அந்த அளவுக்கு தமிழ் வலைப்பதிவுகளுக்கு செல்வாக்கு இருக்கா ! ஆர்க்குட், டுவிட்டர் பங்களிப்பும் இருக்கலாம். செல்பேசி, குறுந்தகவல் பெருக்கத்தால் முதல் காட்சி முடிந்தவுடனே அவரவர் நண்பர்களுக்குத் தெரிவித்து விடுவது முக்கிய காரணமா இருக்கலாம்.

        //watchable என்கிற அளவில் இருக்கும் படங்களை, வலைப்பதிவு விமர்சனங்கள் கவிழ்த்து விட முடியாது. உதாரணம், தசாவதாரம், அயன்.//

        + 1. உண்மை. எல்லா படத்தையும் ரொம்ப அறிவாளித்தனமா உலகத் திரைப்பட அளவுக்கு விமர்சிப்பது தப்பு. அயன், தசாவதாரம் படங்களுக்கு இரு வகையான விமர்சனங்கள் வந்தன. நானே தமன்னாவுக்காக ரெண்டு முறை பார்த்தேன் :)

        அப்புறம், எங்க அக்கா பையனுக்குப் பிடிக்காத ஒரே நடிகர் கமல். பிடிக்காத ஒரே படம் – தசாவதாரம். ரசினி அளவுக்கு கமல் இளைஞர்கள், குழந்தைகளைக் கவரவில்லையோ?

      • சந்தோஷ் குரு 3:33 pm on September 4, 2009 Permalink | Reply

        // insider information இன் படி, கந்தசாமியும், பொக்கிஷமும், வலைப்பதிவு விமர்சனங்களால், பெருத்த அளவு டேமேஜ் அடைந்தது உண்மைதான்//

        உண்மையிலே ஆச்சரியமாத்தான் இருக்கு. அவ்ளோ influence வலைப்பதிவுகளுக்கு இருக்கா என்ன. சில நூறு ப்ளாக் வாசகர்களா சில கோடி மக்களின் ரசனையினை influence செய்கிறார்கள்.

      • ரவி 4:28 pm on September 4, 2009 Permalink | Reply

        //அப்படிச் செய்தால், அது ஒரு கம்பெனியின் பி.ஆர். ரிலீஸ் போலத்தான். கால்காசுக்கு மதிப்பில்லை. என்ன செய்வார்கள் என்றால், influence உள்ள வலைப்பதிவாளர்களை விலைக்கு வாங்க முயல்வார்கள்.//

        இதுவும் ஒரு கட்டத்துக்கு மேல மக்கள் கண்டு கொள்வாங்க. இணையம் இப்ப ரொம்ப decentralised ஆகிட்டிருக்கு. ஓரளவுக்கு மேல ஒரு சில ஆட்கள் மட்டும் செல்வாக்கு செலுத்த இயலாது.

    • prakash 3:07 pm on September 4, 2009 Permalink | Reply

      //ட்விட்டர்ல நேரடியா பேஸ்ட் செய்யமுடியலை// சொக்கன், அப்படியே எடுத்து ஒட்டினா, டிவிட்டர், தானாவே, bit.ly shortening service மூலமா சுருக்கிக்குமே,

      @ரவி : twitthis plugin மாதிரி ஒண்ணு போட்டுவிட்டா வசதி.

      • என். சொக்கன் 5:46 pm on September 4, 2009 Permalink | Reply

        நான் ட்விட்டர் நேரடியாக அவர்களுடைய வலைதளத்தில் பயன்படுத்துகிறேன். ஆகவே, சுருக்கம் ‘Submit’ செய்தபிறகுதான் நடக்கும், அதற்குமுன்னால் உளறல் URLகள் 140 எழுத்து தாண்டிவிடுவதால் நாமே சுருக்கவேண்டியிருக்கிறது

    • ரவி 4:22 pm on September 4, 2009 Permalink | Reply

      உண்மையில் வலைப்பதிவில் எழுதுபவர்களாவது அவை நாகரிகத்துக்காக கொஞ்சம் பார்த்து எழுதுகிறார்கள். மொக்கையான படங்களுக்குத் திரையரங்கில் பார்வையாளர்கள் கொடுக்கும் விமர்சனங்களை மானமுள்ள இயக்குநர்கள் கேட்க முடியாது :) சில மொக்கைப் படங்களை சகித்துக் கொள்ள முடிவதே பார்வையாளர்கள் இப்படி மாற்றி மாற்றி ஓட்டிக் கொண்டு பார்ப்பதால் தான் :)

    • ரவி 4:26 pm on September 4, 2009 Permalink | Reply

      //இந்த கொரியன் படம் மாதிரியும் தாய்வான் படம் மாதிரியும் இருக்குன்னு எழுதுறானே//

      டிவிடி, தனியார் தொலைக்காட்சிகள் வரவுக்குப் பிறகு நிறைய உலகப் பட அறிமுகம் பரவி இருக்கு. நாள்கூலித் தொழிலாளிகள் கூட காட்சிக் கோணத்தை அலசி எது உண்மை, எது வரைகலைன்னு பேசுறதைக் கேட்டிருக்கேன்.

      //அவ்ளோ influence வலைப்பதிவுகளுக்கு இருக்கா என்ன.//

      செல்வாக்கு இருக்குன்னு சொல்ல முடியல. வலைப்பதிவுகள், ஆர்க்குட் குழும உரையாடல்களை சமூக மனநிலையின் எதிரொலிப்புன்னு வேணா சொல்லலாம். இணையம் வர வரைக்கும் அப்படி பதிவாகும் சுதந்திரமான ஊடகம் எதுவும் பெரிசா இருக்கல.

    • karthi 4:46 pm on September 4, 2009 Permalink | Reply

      வலைப்பதிவுகளுக்கு செல்வாக்கு கொஞ்சம் இருக்கத்தான் செய்யும். ஆனால், இந்த தாக்கம் நகர் புரங்களை கொஞ்சம் அதிகமாகவும் ..கிராம புரங்களை கொஞ்சமாகவும் தாக்கும். “யான் பெற்ற இன்பம் ” என்பதுபோல் மக்கள் செல்போன் மூலம் “பாக்கவே செய்யாதே சுத்த வேஸ்ட் ” என்று கமெண்ட் உடனே கொடுக்கிறார்கள் .. மேலும், படம் ரொம்ப நல்ல இருந்தால் மட்டுமே தியேட்டார்ரில் போயி படம் பார்க்கிறார்கள். இதற்கு விமர்சனம் உதவுகிறது.

      • ரவி 3:20 pm on September 7, 2009 Permalink | Reply

        நல்ல படம் இன்னும் நல்லா ஓடவும் மட்டமான படம் சீக்கிரமாவே ஊத்திக்கவும் எல்லா வகையான விமர்சனங்களும் உதவுதுன்னு வைச்சுக்கலாமா :)

        வெளிநாட்டு திரையரங்க வருவாயில் இணைய விமர்சனங்கள் கூடுதல் தாக்கத்தை ஏற்படுத்தலாம்னு நினைக்கிறேன். அங்க இணையம் பரவி இருக்கு. வழமையான தமிழ்நாட்டு ஊடகங்கள் ஏற்படுத்தும் பரபரப்பு குறைவு. 10 அல்லது 20 டாலர் கட்டி படம் பார்க்கும் முன் கண்டிப்பா ஒரு முறை விமர்சனம் படிக்கத் தோணும்.

      • கலை 5:56 pm on September 7, 2009 Permalink | Reply

        சிலபேர் ரொம்ப மொக்கையாவே படம் இருக்கும்னு நிச்சயமா தெரிஞ்சிருந்தாலுமே கூட, அதை சொல்லிட்டே, அப்புறமா திரையரங்கில போய் படம் பார்க்கிறாங்களே :)

        • ரவி 8:08 pm on September 7, 2009 Permalink | Reply

          என்ன பண்ணுறது சில பேர் வாழ்க்கை அந்தப் படத்தை விட மொக்கையா இருக்கலாம் :)

    • கார்த்திக் 6:42 pm on September 5, 2009 Permalink | Reply

      இதுல, ராம நாராயணன் ஒண்ணு கண்டுபிடுச்சுட்டாரு. நிறைய படங்கள, ஒரே நேரத்துல வெளிடுறதால தான் தோல்வியடையுதாம்.

      தரமான படமெடுத்தா எல்லா படமும் தான் ஓடும். இல்லையா?

      • ரவி 3:18 pm on September 7, 2009 Permalink | Reply

        அவர் சொல்லுறதுல ஒரு இது இருக்கு. என்ன மொக்கை படம் போட்டாலும் பார்க்க என்றே சில கூட்டம் இருக்கு. 2 வாரம் படம் ஓடினா கூட போட்ட காசை எடுத்துடலாம். எடுத்துக்காட்டுக்கு, பொழுது போக்குக்கு வேற வழி இல்லாத மக்கள் தொகை மிகுந்த திருப்பூரில் வார இறுதிகளில் எல்லா திரை அரங்குகளும் நிறையும். ஆனா, ஏகப்பட்ட படங்கள் வந்து குவியுறதால் இந்த வருவாயும் சிதறது. திரைப்படச் சந்தையும் supply and demand விதிகளுக்கு உட்பட்டது தானே.

c
compose new post
j
next post/next comment
k
previous post/previous comment
r
reply
e
edit
o
show/hide comments
t
go to top
l
go to login
h
show/hide help
shift + esc
cancel