Udaan பார்த்தேன். எனக்கு பிடித்த பல விமர்சகர்கள் 2010 ஆண்டின் சிறந்த திரைப்படங்களில் ஒன்று என்று கூறியிருந்ததால் ஆர்வம் அதிகமாக இருந்தது. படம் பிடித்திருந்தது. தந்தையாக வரும் ரோநித் ராயின் நடிப்பு மற்றும் பாத்திர படைப்பு மிகவும் பிடித்திருந்தது. ஆனால், இந்தி தெரியாததால் என்னவோ, கதை நாயகன் கூறும் கவிதைகள் என்னை ஈர்க்கவில்லை. ஆனால் கண்டிப்பாக பார்க்க வேண்டிய ஒரு இந்திய indie movie.
Updates from சந்தோஷ் குரு RSS Toggle Comment Threads | Keyboard Shortcuts
-
சந்தோஷ் குரு
-
சந்தோஷ் குரு
The Kids Are All Right படம் பாத்தேன். எனக்கு மிகவும் பிடித்தது. ஹாலிவுட் சினிமாவை எல்லாரும் என்ன கிழித்தாலும் அங்கிருந்து வரும் சில indie திரைப்படங்கள் மனதை கொள்ளை கொள்கின்றன
-
சந்தோஷ் குரு
மன்மதன் அம்பு பாத்தேன். கவிதைன்னாலே தள்ளி நிக்கிற ஆள் நான், இதுல கமலோட கவிதைன்னா காத தூரம் ஓட வேண்டும் போல இருக்கு. இந்த லைவ் சவுண்ட் எழவால கொஞ்ச நஞ்ச வசனமும் புரியல. மாதவன் நடிப்பு புடிச்சிருந்தது. அபூர்வமாக வரும் சில crazy mohan வசனம் புடிச்சிருந்தது. ஆனா overall படம் சரியான மொக்கை.
-
Raj
-
ரவி
நீல வானம் பாட்டு உத்தியை இங்கிருந்து சுட்டார்களா?
-
-
ரவி
விதி இன்னும் ரொம்ப வலியதா இருக்கும் போலயே
விவேக், அப்துல் கலாம்.. வகை “கவிஞர்கள்” தொல்லை தாங்க முடியல… -
ரவி
படத்தை ஓட்டி ஓட்டிக் கூட பார்க்க முடியவில்லை. எரிச்சலாக வருகிறது. கமல் உள்ளிட்ட பல நடிகர்கள் தேங்கி விட்டதாகத் தோன்றுகிறது. இவர்களை முழுமையாக ஆட்டுவிக்கக்கூடிய இயக்குநர்களைத் தவிர யாராலும் காப்பாற்ற முடியாது.
-
-
சந்தோஷ் குரு
ஈசன் படம் பாத்தேன். சசிகுமார் படம் என்று எதிர்பார்த்து பொய் நொந்து நூலாகி வெளியே வந்தேன். முதல் பகுதிக்கும் இரண்டாவது பகுதிக்கும் சம்பந்தமே இல்லாத உணர்வு. அனைவரும் நன்றாக நடித்திருந்தாலும், திரைக்கதை மிக தொய்வாக இருந்தது.
-
ரவி
இப்படி போய் மாட்டிக்கிட்டீங்களே
எல்லா விமர்சனங்களும் மோசமாகவே வந்திருந்தன.. பல இயக்குநர்களும் “இரண்டாம் திரைப்படச் சொதப்பல் நோயில்” மாட்டிக் கொள்கிறார்கள்.. லிங்குசாமியின் ரன், சுசீந்திரனின் நான் மகான் அல்ல, கௌதம் மேனனின் காக்க காக்க போல சில விதிவிலக்குகள் மட்டுமே காண முடிகிறது-
சந்தோஷ் குரு
என்ன சொல்ல , விதி வலியது.
-
ரவி
படம் பார்த்தேன். சுப்பிரமணியபுரம் எடுத்த அதே இயக்குநரின் படம் என்று நம்ப முடியவில்லை. இத்தனைக்கும் இரண்டு ஆண்டுகள் பொறுத்திருந்தே எடுத்தார்
-
-
-
-
சந்தோஷ் குரு
மைக்கேல் போலன் எழுதிய Food Rules என்ற புத்தகம் படித்தேன். பல nutritionistகளிடம் பேசி, ஆராய்ந்து, மிக எளிமையாக உணவு உண்ணும் சில விதிகளை கொடுத்துள்ளார். அருமையாக இருந்தது. எனக்கு மிகவும் பிடித்த சில விதிகள் “If it is from a plant eat it, if it is made in a plant throw it”, “The whiter the bread, sooner you will be dead”. ஜங்க் உணவு பற்றி அப்பா அம்மா எவ்வளவு தடவை சொல்லியும் அறிவிக்கு எட்டாதது, அமெரிக்காவில் உள்ள ஒரு பத்திரிக்கையாளர் சொல்லிதான் உரைக்குது. ஒருவேளை எனக்கு தான் வயசு ஆயிடுச்சோ.
-
ரவி
அவர் குறிப்பிடும் அனைத்து விதிகளையும் தர முடியுமா?
-
-
சந்தோஷ் குரு
பெங்களூரில் உள்ள ஒரு காஃபி கடையில் அமர்ந்திருந்த அனுராக் காஷ்யப் கிட்ட சும்மா பேச்சு கொடுத்திருக்கிறான் என் நண்பன் ஒருவன். மிகவும் எளிமையாக, இயக்குநர் என்ற பந்தா ஏதும் இன்றி அரட்டை அடித்திருக்கிறார். அப்போது, வழக்கம் போல் அவரிடம், சமீபத்தில் அவர் பார்த்ததில் மிகவும் கவர்ந்த படம் பற்றி கேட்ட போது, 13 Tzameti என்ற படத்தினை பற்றி சொல்லியிருக்கிறார். அடுத்த சில நாட்களிலே தரவிறக்கி பார்த்தேன். எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நான் பார்த்த சமீபத்திய Suspense படங்களில் மிகவும் சுவாரசியமான திரைப்படம். கண்டிப்பாக அனைவருக்கும் பரிந்துரைக்கிறேன்.
-
சந்தோஷ் குரு
அண்மையில் ஒசாமு டெசுகா (Osamu Tezuka) எழுதிய புத்தா என்ற எட்டு பாகம் கொண்ட நூலை படித்தேன். எட்டு பாகம் என்றதும் முழிக்கவேண்டாம்
. அது ஒரு கிராஃபிக் நாவல். நம்மூர் மொழியில் காமிக்ஸ். ஆகையால் மின்னல் வேகத்தில் படித்துமுடிக்க முடிந்தது. அட்டகாசமான படைப்பு இது. புத்தர் பிறந்த காலகட்டத்தினை அருமையாக விவரித்து அவருடைய வளர்ச்சி, கொள்கைகளை மிக எளிதாக, ஒரு பள்ளி செல்லும் மாணக்கன் கூட புரிந்து கொள்ளும் வகையில் எழுதப்பட்ட புத்தகம். காமிக்ஸ் மூலம் இலக்கியம் கூட படைக்கமுடியும் என்பதை இப்போது தான் தெரிந்துகொள்கிறேன். புத்தர் பற்றியும் பவுத்தம் பற்றியும் சிறுவர்களுக்கு (பெரியவர்களும் கூட தான்)அறிமுகம் செய்ய ஏற்ற புத்தகம் இது. கண்டிப்பாக must-read என்று கூறுவேன்.-
mayooresan
எங்க வாங்கினீங்க??
-
சந்தோஷ் குரு
http://flipkart.com ல் வாங்கினேன். http://ebay.in இன்னும் நல்ல குறைவான விலையில் கிடைக்கிறது.
-
-
-
சந்தோஷ் குரு
அட்டகாசமான திரைப்படம் ஒன்று சமீபத்தில் பார்த்தேன், The girl with the dragon tattoo. கலக்கலாக இருந்தது. துவக்கத்திலிருந்து இறுதிவரை சற்றும் தொய்வில்லாமல் சென்ற படம் இது. சுவீடன் சமூகத்தின் மீதான விம்ர்சனத்தை நம்மீது திணிக்காமல், அதன் பிரச்சினையினை ஒரு துப்பறியும் கதையின் வழியாகக் காட்டி அசத்தியது இந்த திரைக்கதையின் சிறப்பு. இந்த படத்தைப் பார்த்துவிட்டு Steig Larsson எழுதிய மற்ற நாவல்களின் திரையாக்கத்தினை பார்க்க ஆவலாக இருக்கிறேன்.
-
karthickbala
ஆம் சந்தோஷ். மிகவும் அருமையான படம். இந்த படத்தை திரைப்பட கல்லூரி மாணவர்களுடன் சேர்ந்து பார்த்தேன். படம் முடிந்த பிறகு அவர்கள் திரைகதையையும், காட்சிகளையும் ஆராய்ந்த விதத்தை கண்டு வியந்தேன்.
-
சந்தோஷ் குரு
அப்படியா. நாம் திரைப்பட கல்லூரி மாணாக்கன் அல்ல, இருப்பினும், எனக்கு எப்போதுமே அதை போன்ற ஒரு ஆய்வு-விவாதத்தில் பங்கு கொள்ள வேண்டும் என்ற ஆவல் உண்டு. ஆனால் வாய்ப்பு தான் அமையவில்லை.
-
-
ரவி
படம் முழுக்க cliches என்றாலும் ஆர்வத்தோடு பார்க்க முடிந்தது. கொலைக்குப் பிறகும் ஒவ்வொரு ஆண்டும் பதனப்படுத்தபட்ட பூக்கள் வருவதைச் சொல்லும் போதே முடிச்சு அவிழ்ந்து விட்டது. அடுத்த இரண்டு பாகங்களைத் தரவிறக்கிக் கொண்டிருக்கிறேன்.
-
ரவி
இப்படத்தின் இரண்டாம் பாகம் பார்த்தேன். முதற்பாகத்தின் தரம், விறுவிறுப்பு இல்லை. வழக்கமான இரண்டாம பாகச் சொதப்பல் தான்
-
-
சந்தோஷ் குரு
Sherlock Holmes படம் பார்த்தேன். கலக்கலா இருந்துச்சு (சப் டைட்டிலோட பாத்ததுல முழு படமும் புரிஞ்சுது
). படத்தில் பிண்ணனி இசை மிகவும் அருமை.-
கார்த்திக்
அப்படின்னா இந்த பாட்டு உங்களுக்கு ரொம்ப பிடிக்கும் http://www.youtube.com/watch?v=RWCV5wpMJJM
-
சந்தோஷ் குரு
செமையாக இருந்துச்சு இந்த பாட்டு. இந்தப் பாட்டுக்காகவே நான் படத்துல டைட்டில் முடியற வரை பாத்தேன்
-
கார்த்திக்
இந்த பாட்டுல முதல்ல வர்ற வாத்தியம் வயலினா? நெட்டில் தேடினால் அப்படி தான் தெரிகிறது. அனால் வயலினிலிருந்து இப்படியொரு இசை வருமென்று நான் எதிர்ப்பாக்கல.
எப்பவுமே ஒரு சோகத்தின் வெளிப்பாடாகவே வயலின் இசையை பாவித்து வந்த்தேன்
-
-
-
ரவி
வழக்கமா புத்தகம் படிக்கிறவங்களுக்கு அதைப் படமாக்கும் போது அவ்வளவு நிறைவா இருக்காது. ஆனா, புத்தகத்தில உள்ளதோட Holmesஐ செம கலக்கலா காட்டி இருக்காங்க. எனக்கு மிகவும் பிடிச்ச பகுதி Holmes மல்லுக்கட்டுற இடம் தான்.. அப்ப வர்ற பின்னணி இசையைக் கேட்டுட்டே இருக்கலாம்….
-
mayooresan
தொடக்கத்தில் ஹோல்ம்ஸ் ஓடி வரும் காட்சியும் பொலீஸ் வண்டி பின்னால் வரும் காட்சிகளும் பின்ணனியும் அருமை.. ரகுமான் கொஞ்சம் இதுகளையும் கற்றால் நல்லம்.. எத்தனை நாளைக்குத் தான் காட்டுச் சிறுக்கி என்று பாடுவார்
-
-
சந்தோஷ் குரு
ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இரண்டாவது பகுதி எனக்கு பிடித்திருந்தது. அனைவரும் பொன்னியின் செல்வன் தரும் படிமத்தை வைத்துக்கொண்டு சோழர்களை (செல்வாவின் பாணியில் ச்ச்சோளர்கள்
) இழிவுபடுத்திவிட்டனர் என்று காட்டுகத்தல் கத்திக்கொண்டு இருக்கின்றனர். கல்கி சோழர்களை, திரைப்பட இயக்குநர் விக்கிரமனின் படத்திலுள்ள நல்லவர்கள் போல படைக்க creative liberty இருக்கும் போது, செல்வா அவருடைய பாணியில் செய்தால் மட்டும் பொங்குவது எதற்காக?. நம் காலத்து தமிழ்த் தாத்தாவான சுஜாதா கூட கணையாழியின் கடைசிப்பக்கங்களில், சோழர்கள் பற்றிய நம் படிமம் சரியா என்று பல ஆண்டுகளுக்கு முன்னே எழுதியிருக்கிறார், Burton Stein என்பவரின் புத்தகத்தினை பற்றி விவரிக்கும் போது. நம் மனத்தில் உள்ள கற்பனையான சோழர் பிம்பத்தினை வேறு ஒருவர், தன் கற்பனையால் மாற்றினால், வெகுண்டு எழுபவர்களுக்கும் , சத்ரபதி சிவாஜி-வரலாற்று ஆய்வு-வன்முறை-கலகம் என்று இறங்கும் சிவசேனைகளுக்கும் என்ன வேறுபாடு?-
புருனோ
சுஜாதாவின் நடுநிலைமை சந்தேகத்திற்கு அப்பாற்பட்டது !!
அதாவது அவர் எந்த நிலை என்பது அயோத்தியா மண்டபம் போன்ற கதைகளின் மூலம் தெளிவானது தானே
இந்த கட்டுரையிலும் கடைசிவரியில் அவர் என்ன கூறியுள்ளார் என்று பாருங்கள்.
லெமூரியா சரடு !!
ஏன் இந்த அவசரம். இதன் மூலம் அவர் என்ன கூற வருகிறார்
லெமூரியா என்பது உண்மையில்லை என்று வலிந்து நிருபிக்க அவருக்கு என்ன அவசரம்
என்ன ஆத்திரம்
-
புருனோ
அடுத்தாக, சோழர்கள் ” விக்ரமன் பட நல்லவர்கள்” என்று கல்கியும் கூறியதில்லை, அகிலனும் கூறியதில்லை, பாலகுமாரனும் கூறியதில்லை.
சொல்லப்போனால் சோழர்களை பற்றி சுஜாதா கூட ஒரு கதை எழுதியிருக்கிறார். அதில் கூட அவர்களை விக்ரமன் பட நல்லவர்களாக காட்ட வில்லை
-
புருனோ
தேவதை என்று ஒரு படம் வந்தது. அது கூட வரலாறும் சமகாலமும் சார்ந்த படம் தான்.. அதை யாரும் இந்த அளவு போட்டு தாக்க வில்லை என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்
அருந்ததி என்று ஒரு படம் வந்தது..அது கூட பேண்டசி தான். முதுகெலும்பை வைத்து தான் கொல்ல முடியும் என்று கதை இருந்த போது கூட யாரும் லாஜிக் கேள்வி கேட்க வில்லை
ஆனால் இந்த படத்தை ஏன் போட்டு பிராண்டுகிறார்கள் என்றால், இங்கு ஒன்றுமே புரியவில்லை
புதை குழியை ஹெலிகாப்டர் வைத்து தாண்ட முடியாதா போன்ற கேள்விகளை வேண்டுமானால் பேண்டசி என்று ஒதுக்கி விடலாம். ஆனால் அதை விட பல அடிப்படை அபத்தங்கள் உள்ளன
முடிந்தால் யாராவது விளக்கவும்
1. ஆண்ட்ரியாவை ஏன் அழைக்கிறார்கள்
2. ரிமா ஏன் பார்த்திபனுடன் உடலுறவு வைக்க விரும்புகிறாள் (எப்படியும் படை வைத்து தானே அழிக்க போகிறார்கள்)
3. ஏன் மேஜர் ரவி மட்டும் சேட்டலைட் போன் வைத்துள்ளார். அனைவரும் ஆளுக்கொன்று வைத்திருக்கலாமே
இது போன்ற பல அபத்தங்கள் உள்ளன
-
சந்தோஷ் குரு
// 1. ஆண்ட்ரியாவை ஏன் அழைக்கிறார்கள் // – ஏன்னா அவருக்குத்தான் அந்த பாண்டிய தளபதி எழுதிய குறிப்பினை interpret பண்ணும் திறமை உள்ளது.
// 2. ரிமா ஏன் பார்த்திபனுடன் உடலுறவு வைக்க விரும்புகிறாள் // – Why not? பார்த்திபனின் நம்பிக்கையினை பெறுவதற்காக இருக்கலாம் இல்லையா? 300 என்ற படத்தில் கன்னி ஒருத்தியை நிர்வாணமாக்கி, அவள் மூலம் வருங்காலத்தை பற்றி அறிவார்கள் Spartanஇன பெருசுகள். அப்போது ஏன் நிர்வாணம் என்று கேட்பதில்லை. ஏன் என்றால் அது ஒரு கற்பனையோ அல்லது எதோ ஒரு தொன்மமோ அல்லது ஒரு எழவோ.
3. சாட்டிலைட் போன் என்று explicitஆக சொல்லலையே. அவர் போன் (ஐபோன் போல உள்ளது) செய்கிறார், சாட்டிலைட்டினைக் காட்டுகின்றார்கள், simple GPSஆக கூட இருக்கலாமே. மற்ற மூவர், பாம்பினில் இருந்து தப்பிக்கும் போது எடுத்தவர மறந்துவிட்டார்களோ என்னவோ
-
புருனோ
ரிமா, பார்த்திபனின் இருப்பிடத்தை தெரிந்து கொண்டு ராணுவம் மூலம் தான் போரிடுகிறார்கள்
அப்படி இருக்க ஏன் உடலுறவிற்கு அழைக்க வேண்டும்
வெறுமனே தூது என்று சொன்னால் போதுமே
-
-
-
புருனோ
படம் வெளிவந்தபின்னர் இது தான் இந்த என் படத்தின் கதை என்று சமீபத்தில் எந்த இயக்குனராவது கூறியதாக நினைவுள்ளதா
–
அந்த அளவு ஜெர்க் அடிக்கும் திரைக்கதை இது
-
ரவி
சோழர்களை எப்படி காட்டுகிறார்கள் என்பது எனக்குப் பிரச்சினை இல்லை. twist வைக்கிறேன் பேர்வழி என்று தொடர்பே இல்லாமல் இருக்கும் இரண்டாம் பாதி, இரண்டாம் பாதியின் சொதப்பலான திரைக்கதை, கதைக்குத் தேவையில்லாத வன்முறை / காமம் தான் எரிச்சல் அடைய வைத்தது.
சோழர்கள் – பாண்டியர்கள் – கார்த்தி என்று எவர் பக்கமும் மனம் சாயாமல் போனதே இயக்குநரின் தோல்வி.
முதல் 20 நிமிடத்தில் சோழர்களை அறிமுகம் செய்து, கார்த்தியை அவர்கள் அணியில் சேர்த்து, சோழர்களை வளமானவர்களாகவும் காட்டி இருந்தால் படம் ஓடி இருக்கும். The Last Samurai போல. எப்படி வேண்டிமானாலும் எடுக்க செல்வாவுக்கு உரிமை உண்டு. ஆனால், எதை எடுத்தாலும் ஒழுங்கா எடுத்தா தான் படம் ஓடும்
-
புருனோ
//. எப்படி வேண்டிமானாலும் எடுக்க செல்வாவுக்கு உரிமை உண்டு. ஆனால், எதை எடுத்தாலும் ஒழுங்கா எடுத்தா தான் படம் ஓடும்//
கண்ணாபின்னாவென்று வழிமொழிகிறேன்
படம் வெளிவந்தபின்னர் இது தான் இந்த என் படத்தின் கதை என்று சமீபத்தில் எந்த இயக்குனராவது கூறியதாக நினைவுள்ளதா
அது தான் செல்வராகவன் தன் படத்திற்கு தானே தந்த விமர்சணம் !!!
-
neela vanam song superb and kamal kavithai um nalla than irukum… lyrics supera ah irukum. kadavul mela namikai illatha yenna madhiri ullavangalu ku pudikum..