உளறல்

Updates from ரவி RSS

  • 11:01:38 pm on December 4, 2008 | 0 | # |
    Tags: , , , ,

    1: திராவிட அரசுகளின் ஆட்சியில் தமிழ் வளரவில்லையே?

    2: தமிழ் எழுதப்படிக்கத் தெரிந்தவர்கள் கூடியுள்ளனரே?

    1: எழுதப்படிக்கத் தெரிவது கல்வி வளர்ச்சியே. மொழி வளர்ச்சி இல்லை.

    2: ஆங்கில அறிவு கூடியதால் தான் தமிழன் கூடிய வாய்ப்புகள் பெற்றுள்ளான். தமிழன் வளராமல் தமிழ் வளர்ந்து புண்ணியமில்லை.

    1: *#&??!!!

     
  • 10:56:06 pm on December 4, 2008 | 0 | # |
    Tags: , ,

    நடுத்தர, மேல்தட்டு மக்கள் தொடக்க கல்வி முதலே ஆங்கிலத்தில் பயில்கிறார்கள். உயர் கல்வி வரை வரும் அடித்தட்டு மக்களுக்கு பயிற்று மொழி ஆங்கிலம். கல்வி மொழியாக இல்லாத மொழிகளின் வாழ்நாள் எவ்வளவு? :(

     
  • 09:48:31 pm on December 4, 2008 | 0 | # |
    Tags: ,

    * மழைநேரத்தில் போதிய பயணிகள் இல்லை என்று இரண்டு நாளாக தனியார் பேருந்துகள் ஊர்ப்பக்கம் வரவில்லை. அரசு பேருந்துகள் வழக்கம் போல் இயங்கின.

    * 10,000 முன்பணம் கட்டிச் சேர்ந்த தனியார் மருத்துவமனையில் அவசரத்துக்கு 200 ரூபாய் குறைகிறது என்று மகப்பேற்றுக்குப் பிந்தைய மருந்துகள் தர மறுத்தார்கள்.

     
  • 05:39:39 am on December 3, 2008 | 1 | # |
    Tags: , , , ,

    சம்பளம் பெற்று கடமையைச் செய்யும் காவலர்கள், படையினர் தீவிரவாதிகளை எதிர்க்கொண்டு இறந்து தியாகி ஆகிறார்கள். இதற்கு முன் நிகழ்ந்த தீவிரவாதத் தாக்குதல்களில், இந்தியாவில் பிறந்த ஒரே குற்றத்துக்காக, குப்பைத்தொட்டி அருகிலும் இரயில் குண்டுவெடிப்புகளிலும் இறந்து போன முகமற்ற எண்ணற்றோரின் பெயர் என்ன? படையினருக்கும் தாசு விடுதியில் உயிரிழந்தோருக்கும் வரிந்து கட்டி அஞ்சலி செலுத்துவோர் இதற்கு முன் எங்கே போய் இருந்தனர்?

     
  • 05:30:23 am on December 3, 2008 | 0 | # |
    Tags: , ,

    பிறர் நம் மேல் வைத்திருக்கும் அன்பை அளப்பது / அறிவது எப்படி? அளக்க இயலுமா?

     
  • 05:28:58 am on December 3, 2008 | 0 | # |
    Tags: ,

    தமிழ்நாட்டில் வாழும் தமிழ் இந்துக்கள் பிறரை விரும்பும் அளவு: ரோமக் கத்தோலிக்கர்கள் > பிற சமயத்தினர் > (இசுலாமியர்கள் அல்லது புதிதாய் கிறித்தவத்துக்கு மாறி தங்களையும் மாறச் சொல்பவர்கள்) என்று உள்ளதோ?

     
  • 05:35:52 am on December 1, 2008 | 0 | # |
    Tags: ,

    R. K. Laxman வரைந்த கேலிச்சித்திரங்களின் தொகுப்பான Brushing up the years - A Cartoonist’s History of India 1947 to the Present படித்தேன். சித்திரங்கள் மூட்டிய சிரிப்பு குறைவு தான். ஆனால், இந்திய அரசியல் வரலாற்றை சுவையாக அறிந்து கொள்ள முடிந்தது.

     
  • 04:50:16 am on December 1, 2008 | 0 | # |
    Tags: ,

    நம்ம நாட்டில் புரட்சி வருமான்னு கேக்குறவங்க கிட்ட நிலைமை அந்த அளவு மோசமாகலைன்னு சொல்வதுண்டு. ஒவ்வொருத்தன் வாழ்க்கையும் ரொம்ப மோசமா பாதிக்கப்படும்போது தான் போராட்டம், புரட்சி எல்லாம் வரும்னு நினைக்கிறேன்.

     
  • 11:29:32 am on November 29, 2008 | 5 | # |
    Tags: , ,

    தனியார் பாலை விட மக்கள் ஆவின் பாலை விரும்புகிறார்கள். தனியாரை விட கூடுதலாக அரசு, கூட்டுறவு விளை பொருட்களை மக்கள் விரும்பும் வேறு பொருட்கள் என்னென்ன? airtel, reliance ஐக் காட்டிலும் bsnl broadband பரவாயில்லை என்கிறார்கள். பின்னாளில் bsnl தரம் விலை போகலாம் !

     
  • 11:22:55 am on November 29, 2008 | 0 | # |
    Tags: , ,

    மும்பை தாக்குதல் பரபரப்புக்கு காரணங்கள்:

    ஊடகத்தினர் முன்னிலையில் திகில் படம் போன்ற நேரடித் தொடர்த் துப்பாக்கித் தாக்குதல். வெளிநாட்டவர், மேட்டுக்குடி வகுப்பினர் சிறைப்பிடிப்பு, கொலை. கடல்வழி ஊடுறுவல். முகம் காட்டிய தீவிரவாதிகள்.

    ???

     
  • 11:12:41 am on November 29, 2008 | 0 | # |
    Tags: ,

    ராமன் தேடிய சீதை பார்த்தேன். மூன்று கதைகளை ஒன்றாக இணைத்த விதம் பிடித்தது. தாராளமாக ஒரு முறை பார்க்கலாம்.

     
  • 11:22:45 pm on November 27, 2008 | 0 | # |
    Tags:

    அம்மா சொன்ன கலைச்சொல்: வாழ்க்கையில் நிலை குற்றல் = settling in life !!

     
  • 11:21:30 pm on November 27, 2008 | 0 | # |
    Tags: , , ,

    130+ பேர் உயிர் இழந்த மும்பை தீவிரவாதத் தாக்குதல், காவலர் எதிர்த்தாக்குதல் குறித்த தினமலர் செய்தியின் தலைப்பு: நேருக்கு நேர் - டுமீல்.. டுமீல் ஊடக அறம், மனிதநேயம் எல்லாம் கிலோ எத்தனை ரூபாய் :(

     
  • 11:19:08 pm on November 27, 2008 | 0 | # |
    Tags: , , ,

    போக்கிரி படத்தில் “நான் ஒரு தடவை முடிவு செஞ்சிட்டா என் பேச்சை நானே கேட்க மாட்டேன்” அப்படின்னு அதிரடி வசனம் வருது. அவர் பேச்சை அவரே கேக்காட்டி அப்புறம் வேற யார் கேப்பா ;)என் பேச்சையே நான்“னு இருந்திருக்கணும்.

     
  • 10:18:57 pm on November 27, 2008 | 1 | # |
    Tags:

    நண்பர்கள் எதைச் சொன்னாலும், “இதை எல்லாம் வலைப்பதிவுல எழுதீடாதடா” என்று சேர்த்துச் சொல்லியே வதைக்கிறார்கள் :( அட.. இதையும் எழுதித் தொலைக்கிறேனே ! எழுத்தாளரின் வாழ்க்கையில் இதெல்லாம் சகசமப்பா :)

     
  • 10:15:48 pm on November 27, 2008 | 0 | # |
    Tags: ,

    பேருந்தில் செல்கையில் இரயில் பயணங்களில் போட்டார்கள். ஒவ்வொரு காட்சியிலும் வரும் ராசேந்தரின் அடுக்கு மொழி உரையாடல்கள் கடுப்பேற்றுகின்றன. இப்படி சோகப் படங்கள் போட்டுப் பயணிகளைக் கொல்லாமல், பேருந்து நடத்துநர்கள் கொஞ்சம் கலகலப்பான படமாகப் போடலாம்.

     
  • 12:00:41 am on November 26, 2008 | 0 | # |
    Tags: ,

    வேலை செய்து பணம் சேர்த்த பிறகு, கொஞ்சம் விவசாயம் செய்து பார்க்க வேண்டும் என்று சொன்ன நன்கு படித்த 4,5 நண்பர்களையாவது கண்டேன். பொழுது போக்காகச் செய்வதற்கு விவசாயம் நல்ல தெரிவு தான். பிழைப்பாகச் செய்ய?

     
Next Page »