Updates from bsubra RSS
-
02:18:32 pm on December 9, 2008 |
மரங்கள், செடிகள் காய்க்காமல், பூக்காமல் இருந்தால், கிராமப்புறங்களில் சில சடங்குகளைச் செய்வார்களாம், அப்போது அவை உடனடியாகப் பூத்துவிடுமாம். இதைத்தான் ‘தோஹதம்’ என்கிறார்கள்.
உதாரணமாக, அசோக மரம் அல்லது மகிழ மரம் பூக்கவேண்டுமென்றால், பெண்கள் அதனைக் காலால் உதைப்பார்கள், இன்னும் சில மரங்களை விளக்குமாறால் அடிப்பார்கள், பிரியங்குக் கொடியை தினமும் பெண்கள் தொட்டு அதைக் கனிவாகப் பார்ப்பதால் அது பூக்கும், மந்தாரக்கொடியைப் பூக்கச்செய்ய அதனருகே சென்று அதைக் கடுமையாகத் திட்டவேண்டும்.
இப்படிதான், இந்துமதி ஒரு அசோக மரத்தை தோஹதம் செய்ய நினைத்தாளாம், அதற்காக, அந்த மரத்தின் பக்கத்தில் சென்று காலால் உதைத்தாளாம். ஆனால், அசோக மரம் இந்துமதி தன்னை வாழ்த்துவதாக நினைத்துக் கொண்டுவிட்டதாம்
- ராமனின் தாத்தா :: என். சொக்கன்
படித்தால் மாந்திரீக எதார்த்தம் மாதிரி இருக்கிறது.
மரங்கள் என்பது நெடிந்து உயர்ந்த ஊடகங்களையும் செடிகள் சிற்றிதழ்களையும் குறிக்கலாம்.
மனிதர்கள் காய்ந்த பழமாக முதிர்ச்சி அடையாமல் இருந்தால் காலால் உதைப்பது போல் அவதூறு கட்டுரை எழுதி நிலைக்குக் கொணருவது, விளக்குமாற்றுப் பார்வை, கல்லூரி பயிற்சி என்னும் கனிவான பார்வை, சாம, தான, பேத, தண்ட முறையில் தடியாலடித்துப் பழுக்க வைக்கிறார்கள்.
சிலர் திட்டினால் கூட ‘மோதிரக் கையால் குட்டு’ என்று மகிழ்ந்து விடுகிறார்கள் மக்கள்.
-
07:54:04 am on December 9, 2008 |
1988-ல் உலக சமாதானத்துக்காகப் போராடிய 10,000 ஐ.நா. சமாதான வீரர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. இந்தப் போரில் 700 வீரர்கள் சமாதானத்தை நிறுவுவதற்காக மாண்டார்கள். இவர்கள் பாகிஸ்தான், ஈராக், ஈரான், சைப்பிரஸ், லெபனான் போன்ற நாடுகளை போரிலிருந்து காப்பாற்றினார்கள்.
- அ.முத்துலிங்கத்தின் நேர்காணல்
-
01:24:05 pm on December 7, 2008 |
இசை என்றால் அது மகாராஜபுரம் சந்தானத்தோடும் கங்குபாய் ஹங்கலோடும் முடிந்து விடுவது எவ்வளவு துர்பார்க்கியமான நிலைமை. இந்திய எழுத்தாளர்களின் இசை ரசனை இந்திய நிலப்பரப்பை விட்டு சற்றே இடதுபக்கம் திரும்பாதது பெருமாளுக்கு மிகுந்த வியாகூலத்தைத் தரும் விஷயம்.
அல்ஜீரியப் பாடகனான Cheb Mami. ஃப்ரெஞ்சு பாடகனான Le Forestier. கேமரூன் பாடகனான Ibrahim Hama Dicko. இவர்களுக்குப் பிறகு மாலி தேசத்துப் பாடகனான Ibrahim Hama Dicko (தட்டச்சுப் பிழை அல்ல; மீண்டும் அதே பெயர் வந்துள்ளது!)வின் ஒரு சோகமானப் பாடலைப் போட்டு அதன் அர்த்தத்தையும் சொன்னான் எபி.
இப்ராஹீம் திக்கோவின் குரல் Bamana மொழியில் உள்ளத்தை உருக்குவதாக இருந்தது. அடுத்து, ‘சொப்பன வாழ்வில் மகிழ்ந்தே சுப்ரமணிய ஸ்வாமி உனை மறந்தார் அந்தோ…’ என்ற எம்.கே தியாகராஜ பாகவதரின் பாடலைப் போட்டான் எபி. அதையடுத்து Penny Penny என்ற தென்னாஃப்ரிக்கப் பாடல்களின் ஸூலூ பாடல்கள்.
- ராஸ லீலா : சாரு நிவேதிதா
-
10:19:39 am on December 3, 2008 |
கணணித் திரையில் செய்திகளாகப் படித்து விட்டோ புத்தகங்ளைப் படித்துவிட்டோ கட்டுரைகள் எழுதுவதால் எதனையுமே சாதிக்க முடியாது என்பதே முப்பதாண்டுகள் புலம் பெயர் மாற்று அரசியலின் படிப்பினையாக இருந்துள்ளது.
:::
போராட்டாத்தை போராடுபவர்களிடம் விட்டு விடுங்கள். உங்களிடம் போராடுவதற்கான ஒரு மாற்று வழி இருக்கிறது என்றால், அந்த வழியை களத்தில் மக்களிடம் காட்டுங்கள்.
ராணுவப்பாதையில் வெகுதூரம் சென்றுவிட்ட ஒரு இயக்கம் பாதையை மாற்றுவது கடினமானது.
போரில் வெற்றி பெற்ற பிறகே அரசியல் சாத்தியம். போரில் இரு தரப்புமே வெல்லமுடியாத நிலையில், சர்வதேச அங்கீகாரமுள்ள பெரும்பான்மை இன அடிப்படையிலான தேசிய அரசிற்குத்தான் அரசியல் ரீதியான தீர்வை நோக்கி நகரும் பொறுப்பு அரசியல் ரீதியாகவும், அறவியல் ரீதியாகவும் அதிகம் இருக்கிறது.
-
10:34:12 am on December 2, 2008 |
எழுதியவர்: அரவிந்தன் நீலகண்டன்
பாசிஸத்தையும் நாசியிஸத்தையும் இணைப்பவை
1) தனிமனிதனை அழித்து தலைமைக்கு அடிபணிய வைக்கும் தன்மை
2) ஜனநாயக வெறுப்பு
3) மாற்றுக்கருத்துகளை அழிக்க வன்முறையை பயன்படுத்துதல்
4) ஒரு கட்சி ஆட்சி முறை. ஆகியவை.
நாசிகளின் தனி ‘சிறப்பு’ அவர்களின் இனவாத வெறுப்பியல்.
-
09:47:59 am on November 18, 2008 |
டவுன்லோடிட்டு பார்த்த திரைப்படத்தை விமர்சிப்பது, நண்பனின் டாவுக்கு மார்க் போடுவதற்கு ஒப்பாகும் என்றார் ஃபிகரின் அப்பாவாகிய விநியோகஸ்தர்.
-
04:50:56 am on November 14, 2008 |
“The bloody massacre in Bangladesh quickly covered over the memory of the Russian invasion of Czechoslovakia, the assassination of Allende drowned out the groans of Bangladesh, the war in the Sinai Desert made people forget Allende, the Cambodian massacre made people forget Sinai, and so on and so forth until ultimately everyone lets everything be forgotten.”
- Kundera
-
11:34:17 am on November 12, 2008 |
உனக்கு சொரணை இருக்கிறதா என்று கேட்டுவிட்டான். இருக்கிறது என்று சொல்ல முடியவில்லை. எல்லாவற்றையும் பார்த்து கவிதை மட்டுமே எழுதிக் கொண்டிருப்பதால். -ந.முத்து (’இருக்கு’ தொகுப்பிலிருந்து)
நன்றி: அவியல் 12.11.2008
-
10:11:44 am on November 12, 2008 |
- டிவியின் முன்னால் அசையாத உருளைகிழங்கு போல் இருந்தவன்.
- வாஸ்து பிரகாரம் டிவியை தென்மேற்கு மூலையில் வைக்காதீர்கள், அப்புறம் சொர்க்கம் தொடர் சீக்கிரம் முடிந்துவிடும் என்று சொல்லுமளவிற்கு டிவியின் ஆதிக்கம் பெருக
- பௌர்ணமி காலத்தில் துல்லியமாகவும் அமாவசை காலத்தில் புள்ளி புள்ளியாகவும் படம் தெரிகிறது என்றெல்லாம் லூனார் காலண்டர் வகுத்து வைத்திருந்தோம்.
-
02:18:19 pm on November 10, 2008 |
அறிமுகமில்லாத இருவர் உரையாடிக் கொண்டிருக்கும் அபத்தமாக நுழைந்து ஏதோ பேசுவது, அசட்டுத்தனமாக சிரிப்பது, தாழ்வுணர்ச்சியுடன் செயல்படுவது என்று ஒரு சராசரி இந்தியக் குணத்தை இவர் இயல்பாக வெளிப்படுத்தினாலும் நமக்குத்தான் சங்கடமாக இருக்கிறது.
- மூத்திரம் முட்டும் நகைச்சுவை
-
01:39:43 pm on November 10, 2008 |
நண்பரின் நக்கல் நறுக்
எல்லாருக்கும் ஏதோ குருட்டுத்தனம் இருக்கும், இவருக்கு இடது கண்ணில் ஒரு பக்கம் பார்வை தெரியாது என்று வைத்துக் கொள்வோம் என்று விட்டு விட்டேன். அவர் கண், அவருக்குக் குருட்டுத்தனம், நமக்கென்ன? அதைக் கட்டுரையாக எழுதி நம் மேல் திணித்தால், படிக்காமல் இருந்து விட்டால் போகிறது.
-
09:04:14 am on September 17, 2008 |
ஒபாமாவும் மெகயினும் (ஹில்லரியும்தான்) சேர்ந்து ஏறக்குறைய முக்கால் பில்லியன் டாலர்களை இதுவரை தேர்தல் களத்தில் செலவழித்துள்ளார்கள். இது செஞ்சிலுவை சென்ற வருடம் மீட்பு நடவடிக்கைகளில் செலவழித்ததை விட பன்மடங்கு அதிகம்.
அமெரிக்காவை கடன் கடலில் இருந்து மீட்பிக்க எது தேவை?
-
12:57:21 pm on September 16, 2008 |
மின்னஞ்சலில் கிடைத்த விவாதக் கருத்து:
“புரட்சி என்று நாடுபவர்கள் கருத்தளவிலும், அமைப்பளவிலும் செயல் திறன் போதாத மக்கள்.
பல கோடி மக்களின் வாழ்வில் நெருப்பைக் கொட்டி கருக அடித்த ஒரு பெரும் செயலை — புரட்சி என்று கொண்டாடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றன.
நம் தனிமனித இயலாமைகளை மக்கள் திரள் இயலாமையாக மாற்றி நம்மை அடியோடு திருத்தினால்தான் நம் வாழ்வு மாறும் என்ற நிலை போலவே சமுதாயமும் என்று கருதும் ஒரு வித கிட்டப் பார்வை இது (myopia).
உடோபியாவுக்குக் கடும் எதிரி மயோபியா.
அதே நேரம் உடோபியக் கனவுக்கு மக்கள் பலியாகாமல் தவிர்த்துப் பாதுகாப்பதும் மக்களின் மயோபியாதான்.”
-
03:50:58 am on August 27, 2008 |
விரிவான பதிவு — பயணங்கள்: புருனோ Bruno: “புள்ளியியல், குட்டை பாவாடை, ஏ.ஐ.ஐ.எம்.எஸில் 49 குழந்தைகளின் மரணம் – ஊடகங்களில் சொல்லப்படாத உண்மை என்ன”
வளராத நாடுகளில் FDA ஒப்புதலுக்காக முதற்கட்ட சோதனை நடத்தப்படுகிறது என்று வாசித்த நினைவு.
ஆனால், தீர்வு எதுவுமில்லாத புற்றுநோயால் பாதிக்கப்பட்டவருக்கு மருந்து உடனடியாக வேண்டும். அதனால், இந்த மாதிரி சோதனைகளில் கலந்து கொள்ளவேண்டும் என்பதற்காகவே, தங்களுடைய பெயர்/பணம்/அதிகாரம் போன்றவற்றை உபயோகித்து உள்ளே நுழைவதை கேள்விப்பட்டிருக்கிறேன்.
முழுமையான சிகிச்சை இன்னும் கண்டுபிடிக்காத நிலையில் இறந்து போனால், அது அந்த சோதனையின் தோல்வியாகாது.
தடுப்பூசி போட்டதால் இறந்த சிறுமி, இலவச முகாமில் கண் பார்வை இழப்பு, அப்பல்லோவில் விஜிக்கு தவறான சிகிச்சை — போன்ற செய்திகளே கவனம் ஈர்க்கின்றன.
அமெரிக்காவில் தீராத நிலையில்தான் மருந்தை நாடிப் போகுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்துவது பிடித்திருக்கிறது.
குழந்தை பிறந்தவுடன் போடப்படும் MMR போன்ற தடுப்பூசிகள் தேவையில்லை என்பதை விளக்கும் துண்டறிக்கையை கொடுக்கிறார்கள். அதன் பிறகு ‘நிஜமாகவேப் போட்டுடலாமா?’ என்று கேட்டு, அதனால் நிகழப்போகும் (& நிகழக்கூடிய) பாதிப்புகளை வாய்வழியாகவும் விளக்கி, அதன் பின் போடுகிறார்கள்.
ஊசி போடும்போது, ‘இந்த ஊசியால் எந்தவித லாபமும் இல்லை; ஆனால் கெடுதல் வர சான்ஸ் இருக்கு!’ என்றால் எத்தனை பேர் இந்தியாவில் பொடுவார்கள்? எவ்வளவு நோய்கள் பெருகக் கூடும்? அதனால்தானோ என்னவோ, படித்தவர்/பாமரர் என்று எவருக்கும் எதுவும் அறுவுறுத்துவதேயில்லை.
ரவி ஸ்ரீனிவாசின் மூலமாக தொடர்புள்ள சுட்டி: The New England Journal of Medicine :: NEJM — A New Colonialism? — Conducting Clinical Trials in India
-
08:44:59 pm on August 4, 2008 |
பா ராகவன் :: யுவர்ஸ் ஒபீடியன்ட்லி
இருக்கும் வரை எட்டிப் பார்க்காத அக்கறைகளும் அனுதாபங்களும், இறந்தபின் எல்லோருக்கும் எப்படியோ வந்துவிடுகிறது. மரணம் ஒரு நல்ல மருந்து. உயிரோடு இருக்கும் பலரின் மனநோய்களை அது சட்டென்று குணப்படுத்திவிடுகிறது
(குதிரைகளின் கதை தொகுப்பு)
-
08:31:00 pm on August 4, 2008 |
பா ராகவன் :: மூன்று காதல்கள்
அரச மரத்தடியில் கொண்டு வைத்த பிள்ளையார் சிலை போல், மாற்றங்களற்றுப் போனது வாழ்க்கை. எப்போதாவது சில்லறை விழும். சிலர் வணக்கிப் போவார்கள். பிழைப்பில் கலவரம் ஏற்பட்டால் தூக்கி, நீரற்ற கிணற்றில் போட்டு விடுவார்கள்.
(குதிரைகளின் கதை தொகுப்பு)
-
08:14:05 pm on August 4, 2008 |
இரண்டே அறைகள் கொண்ட வீடு :: யுவன் சந்திரசேகர்
தற்காலத் தமிழிலக்கியத்தில் வந்து சேர்ந்திருக்கும் புதிய போக்குகள், எழுத்தாளர்களெல்லாம் பத்தியாளர்களாக உருமாறிக் கொண்டிருக்கும் ரசவாதம், கவிதைகளில் பெரும் தேக்கம் வந்து சேர்ந்திருப்பது, புத்தகங்கள் மிக அதிக எண்ணிக்கையில் பிரசுரமாவதும் அவற்றைப் பற்றி மிகையான கூறுகளில் விளம்பரங்களும் மதிப்புரைகளும் வெளியாகி, அப்பாவி வாசகனைக் கடுமையான ஏமாற்றத்துக்குள்ளாக்குவதும், ஜனநாயகமயமாகும் எல்லாத்துறையிலும் இயல்பாகவே பதர்கள் அதிகரித்துவிடுவது என்று அலைந்து கொண்டிருந்தது பேச்சு.
இசைத்துறையும் விதிவிலக்கில்லை என்றும் சாஸ்திரிய சங்கீதமும் திரைப்பட பாடல்களும் கூட இந்த ஸ்திதிக்கு வந்து சேர்ந்துவிட்டன என்றும் நாங்கள் இருவரும் சேர்ந்து கண்டுபிடித்தோம்.
(வார்த்தை - ஜூன் 2008)
-
03:27:23 am on August 4, 2008 |
யூலை 19ல் ஒஸ்லோவில் இடம்பெற்ற பிறந்தநாள் வைபவம் ஒன்றில் கலந்துகொண்டிருந்த போதே இச்சம்பவம் இடம்பெற்றது.
“சிங்கள மக்கள் எல்லோரையும் இனவாதிகள் என்ற சொல்வதை தவறு” என்று நோர்வேயில் உள்ள வெளிநாட்டு ஊடகவியலாளர் அமைப்பின் (Foreign Press Association) உறுப்பினர் நடராஜா சரவணன் அங்கு தன் கருத்தை தெரிவித்திருக்கிறார்.
குட்டி என்று அறியப்பட்ட பத்மநாதன் என்பவரே மக்கள் மத்தியில் வைத்து இக்கொடூரமான செயலைச் செய்துள்ளார்.
முழு விவரம் - இனியொரு… » செய்திகள்/ஆய்வுகள்: “புலிகளால் தாக்கப்பட்ட புகலிட ஊடகவியலாளர்”
-
07:13:57 pm on July 23, 2008 |
எந்தத் தளத்துக்குப் போனாலும், அங்கே புள்ளிவிவரம் பார்க்க எனக்குப் பிடிக்கும். இங்கே எத்தனை பேர் வராங்க, எப்படி என்பதெல்லாம் அறிவது எக்காலம்
-
02:09:52 pm on July 23, 2008 |
நான் சட்ட அமைச்சரானால்:
1. மந்திரியாக பதவியேற்பதற்கு குறைந்தபட்சம் இரண்டாண்டுகளாவது லோக் சபா எம்.பி. ஆக இருத்தல் அவசியம்
2. எம்.எல்.ஏ, எம்.பி.க்கள் இரு முறைகளுக்கு மேல் ஒரே தொகுதியில் இருந்து தேர்தலில் நிற்க முடியாது.
3. இருபது ஆண்டுகளுக்கு மேல் தொடர்ச்சியாக மந்திரி பதவி/எம்.எல்.ஏ/எம்.பி ஆக இருக்க முடியாது. கட்டாய ஓய்வு தரப்படும்.
ஆகிய சட்டங்கள் அமலாக்கப்படும்.