Updates from bsubra RSS Toggle Comment Threads | Keyboard Shortcuts

  • bsubra 10:15 am on June 16, 2009 Permalink | Reply
    Tags: Angle, , BR, Camera, China, , Directors, , Karnan, Location, , Observations, Paval, Photography, Shots   

    Is ter any Chinese movie, without a single wide angle shot.. கேமரா மேதை கர்ணன் shud hav been in China
    - http://twitter.com/paval/status/2045969138

     
  • bsubra 10:13 am on June 16, 2009 Permalink | Reply
    Tags: Alms, Beg, Beggars, Ezhaam Ulagam, God, , , Naan Kadawul, Narain, Pray, Prayers, , Sins, Temples   

    எல்லாரும் பிச்சைக்காரனுக்கு காசு போடறது எதுக்கு? புண்ணியம் தேட. இவனுங்க அத்தனை பேரும் உள்ளுக்குள்ளே பாவம் பண்ணிருக்கானுங்க.
    - http://twitter.com/narain/status/2074713782

     
  • bsubra 10:12 am on June 16, 2009 Permalink | Reply
    Tags: Difference, Gap, Intelligent, IvanSivan, Knowledge, , , , Morality, Preachy, , , Similar,   

    காமத்துக்கும் காதலுக்குமான இடைவெளி போன்றதே அறிவிஜீவிதனத்துக்கும் அறத்துக்குமான இடைவெளி.
    - http://twitter.com/ivansivan/status/2076408769

     
  • bsubra 10:10 am on June 16, 2009 Permalink | Reply
    Tags: Close, Game, Hold, JeMo, Jeyamohan, Kaadu, , Play, Proximity, , Sports   

    விளையாட்டு என்பது உன் அருகாமையை நான் கொண்டாடுவதே! (காடு- ஜெ.மோ)
    - http://twitter.com/gans69/status/2129093748

     
  • bsubra 10:08 am on June 16, 2009 Permalink | Reply
    Tags: Ambition, Chase, Desire, Females, Followers, Goals, Land, , , , , MSathia, , ,   

    பொன், மண், twitter followers எல்லாம் அதுவா நம்ம பின்னே வரணும். நாம அது பின்னாடி போக்கூடாது.
    - http://twitter.com/msathia/status/2182578237

     
  • bsubra 10:05 am on June 16, 2009 Permalink | Reply
    Tags: , , Raghuji, ,   

    ஒன்றுமே இல்லாததுபோல தோன்றும். ஆனால் நிறைய இருக்கிறது. நிறைய இருப்பது போல் தோன்றும். ஆனால் ஒன்றுமே இல்லை. – ஒரு சொதப்பல் குழப்ப சிந்தனை.
    http://twitter.com/raghuji/status/2149320699 / 10:52 PM Jun 12

     
  • bsubra 8:48 am on March 13, 2009 Permalink | Reply
    Tags: , , , , , , , , ,   

    ப்ரூனோவிற்கு பதில்:

    இது தத்துவப் பேட்டை. நான் தத்துவம் முறையாக படித்ததில்லை என்னும் உரிமைத் துறப்புடன்:

    வகுத்தல் சொல்லிக் கொடுக்கிறோம்.

    உதாரணம்: 221/13 எப்படி செய்வது? –> 22/13 : 1; அப்புறமாக பாக்கி 8#1/13 ==> 7; எனவே: 17 என சொல்லிக் கொடுப்பது.

    பொதுமையாக்கல்: 13 எழுதிக் கொண்டே போவோம் –> பதினேழு தடவை எழுதினால் 221 வருகிறதே! என்று புரிய வைப்பது.

    பால் வீதி, சூரியன், பூமி, நிலவு:

    எடுத்துக்காட்டு: தன்னைத் தானே சுற்றிக் கொண்டே இன்னொருத்தரை நடுவில் வைத்து சுற்றிவருவது; நேரடியாக செய்து காட்டுவது.

    கொஞ்சம் மேலோட்டமாக மாடல் செய்து, கணினித் திரை மூலமாக விளக்கினால் அனலாஜி.

    கணினி ப்ராஜெக்ட்:

    எடுத்துக்காட்டு: நூலகத்தின் நிரலி பயன்பாடு; வலையகத்தில் எவ்வாறு சாஃப்ட்வேர் எழுதப்படுகிறது என்று உதாரணம் சொல்லி, நேரடியாக விளக்குவது.

    Analogy: கட்டிடம் எவ்வாறு பலவற்றுக்கு உபயோகமாகிறது? திருமணக் கூடமும் கட்டிடம்; நெற்கூடம், வீடு, மருத்துவமனை என்று உதாரணம் சொல்லி அனைத்தும் வேறுபட்டாலும், எல்லாமே எழுந்து நிற்பதையும், கலையின் பல பரிமாணமாக இருப்பதையும் விளக்கி, அவ்வாறே கம்ப்யூட்டரும் பல விசயத்திற்கு உபயோகமாவதை சொல்வது.

     
    • புருனோ 7:25 pm on March 13, 2009 Permalink | Reply

      //எடுத்துக்காட்டு: தன்னைத் தானே சுற்றிக் கொண்டே இன்னொருத்தரை நடுவில் வைத்து சுற்றிவருவது; நேரடியாக செய்து காட்டுவது.//

      இது அனலாஜி இல்லையா !!

      பூமியை சூரியன் சுத்துவதற்கு எடுத்துக்காட்டு நிலா பூமியை சுற்றுவது இல்லையா

      புதசெவி

    • bsubra 8:15 am on March 16, 2009 Permalink | Reply

      இருக்கலாம்! பெயரில் என்ன இருக்கு :D புரிய வைத்தால் சரி?!

  • bsubra 7:24 am on March 13, 2009 Permalink | Reply
    Tags: , , , , , , , , ,   

    ரவிக்கு பதில் யோசித்தால்:

    பொத்தாம் பொதுவாக (கருத்து/விஷயம்?) சொன்னால் சிலருக்குப் புரியும். உதாரணம் காட்டி விளக்கினால் சிலருக்குப் புரியும்.

    பூமி தன்னைத்தானே சுற்றிக் கொண்டு, சூரியனை வலம் வருகிறது என்பதற்கு abstraction கொடுக்க முயலுங்களேன்.

    வார்த்தைக்கு விளக்கம் கொடுப்பது எளிதா? வாக்கியத்தில் பயன்படுத்தி அர்த்தம் சொல்வது சிறப்பா?

    “The death of one child is a tragedy; the death of a million is a statistic.”

     
  • bsubra 12:24 pm on January 26, 2009 Permalink | Reply
    Tags: Comments, Feedbacks, Fiction, Reviews, , Vettipayal   

    வெட்டிப்பயல்: பயணம்

    கதை அருமை. வாசகனை உள்ளே இழுத்து, யோசிக்க வைத்து, கனக்கவும் வைக்கிறது.

    நன்றி கலந்த வாழ்த்து.

    ஆனால்,
    —-நான் அதிக மதிப்பெண் எடுக்காமல் இங்கேயே படித்து, இங்கேயே வேலை பார்த்து, இங்கேயே உங்களை பார்த்து கொண்டிருந்திருக்கலாம்.
    —-

    குற்றவுணர்ச்சியா அல்லது தகப்பன் மீது பழிபோட்டு தப்பிக்கும் குணமா என்று குழப்பாதபடிக்கு இந்த மாதிரி ‘எண்ணங்களை’, அபிப்ராயங்களை வேறு மாதிரி சொல்லலாம்.

    கதாசிரியர் பார்வை, ‘கதையில் வரும் நான்’ சொல்லும் கருத்து – ஆகிய இரண்டும் வேறுபட்டிருக்கலாம்.

    ‘கதையில் வரும் நான்’ சொல்ல நினைப்பது – நான் செய்த பழிபாவம் என் பெற்றோரையே சேரும்.

    ‘கதாசிரியர் பார்வை’ – வினோத்துக்கு குற்ற உணர்ச்சி.

    இந்த மாதிரி சின்னச் சின்ன விஷயங்களைத் தவிர வேறு எதுவும் குற்றங்குறை கண்ணில்படவில்லை.

    தந்தையுடன் வாழுபவருக்கும் பிரச்சினை, தந்தையை தூர வைத்திருப்பவருக்கும் மனக்கிலேசம் என்னும் இரு தூண்டிலையும் அழகாக சொல்லி இருக்கிறீர்கள்.

    —-இப்ப காசு கொடுக்கறோம், சோறு மட்டும் கேட்காதனு சொல்றாங்க. இதான் கால மாற்றம் போலிருக்கு—-

    தூள்

     
  • bsubra 2:18 pm on December 9, 2008 Permalink | Reply
    Tags: Balaji, Chokkan, Interpretation, Lit, Magical Realism, Mythology, , Trees, , காரணம், தோஹதம், புராணம், மரம், ரகுவம்சம்   

    மரங்கள், செடிகள் காய்க்காமல், பூக்காமல் இருந்தால், கிராமப்புறங்களில் சில சடங்குகளைச் செய்வார்களாம், அப்போது அவை உடனடியாகப் பூத்துவிடுமாம். இதைத்தான் ‘தோஹதம்’ என்கிறார்கள்.

    உதாரணமாக, அசோக மரம் அல்லது மகிழ மரம் பூக்கவேண்டுமென்றால், பெண்கள் அதனைக் காலால் உதைப்பார்கள், இன்னும் சில மரங்களை விளக்குமாறால் அடிப்பார்கள், பிரியங்குக் கொடியை தினமும் பெண்கள் தொட்டு அதைக் கனிவாகப் பார்ப்பதால் அது பூக்கும், மந்தாரக்கொடியைப் பூக்கச்செய்ய அதனருகே சென்று அதைக் கடுமையாகத் திட்டவேண்டும்.

    இப்படிதான், இந்துமதி ஒரு அசோக மரத்தை தோஹதம் செய்ய நினைத்தாளாம், அதற்காக, அந்த மரத்தின் பக்கத்தில் சென்று காலால் உதைத்தாளாம். ஆனால், அசோக மரம் இந்துமதி தன்னை வாழ்த்துவதாக நினைத்துக் கொண்டுவிட்டதாம்

    - ராமனின் தாத்தா :: என். சொக்கன்

    படித்தால் மாந்திரீக எதார்த்தம் மாதிரி இருக்கிறது.

    மரங்கள் என்பது நெடிந்து உயர்ந்த ஊடகங்களையும் செடிகள் சிற்றிதழ்களையும் குறிக்கலாம்.

    மனிதர்கள் காய்ந்த பழமாக முதிர்ச்சி அடையாமல் இருந்தால் காலால் உதைப்பது போல் அவதூறு கட்டுரை எழுதி நிலைக்குக் கொணருவது, விளக்குமாற்றுப் பார்வை, கல்லூரி பயிற்சி என்னும் கனிவான பார்வை, சாம, தான, பேத, தண்ட முறையில் தடியாலடித்துப் பழுக்க வைக்கிறார்கள்.

    சிலர் திட்டினால் கூட ‘மோதிரக் கையால் குட்டு’ என்று மகிழ்ந்து விடுகிறார்கள் மக்கள்.

     
c
compose new post
j
next post/next comment
k
previous post/previous comment
r
reply
e
edit
o
show/hide comments
t
go to top
l
go to login
h
show/hide help
shift + esc
cancel