Updates from புருனோ RSS Toggle Comment Threads | Keyboard Shortcuts

  • புருனோ 8:32 pm on July 12, 2010 Permalink | Reply  

    //அதேபோல், 2006ல் மட்டும் போலியோ சொட்டு மருந்து கொடுத்து இந்தியாவில் 1600 பேருக்கு போலியோ பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும், 27,000 பேர் பாதிக்கப்பட சாத்தியம் இருப்பதாகவும் ஜூலை 11, 2008ம் ஆண்டு தேதியிட்ட ‘தி இந்து’ நாளிதழில் கட்டுரை எழுதினார் இந்திய மருத்துவக் கழகத்தின் தடுப்பு மருந்துப் பிரிவின் தலைவரான டாக்டர் ஜேக்கப் புலியேல் (Politics of Polio, July 11/2008). இந்தக் கட்டுரையின் விவரத்தையும் உண்மையையும் ஆளும் வர்க்கங்கள் கண்டுகொள்ளவேயில்லை…//

    இந்த பத்தியில் பல பிரச்சனைகள் உள்ளன

    முதலாவதாக

    2008 ஜூலை 11ல் இப்படி ஒரு கட்டுரையே வரவில்லை

    ஆதாரம் : http://www.hindu.com/2008/07/11/05hdline.htm

    சரி

    ஆனால் poltics of polio என்று ஒரு கட்டுரை வந்துள்ளது
    அது ஜூன் 11, 2008
    ஆதாரம் http://www.hindu.com/2008/06/11/stories/2008061151410900.htm

    இரண்டாவது பிரச்சனை அந்த கட்டுரையை எழுதியது //இந்திய மருத்துவக் கழகத்தின் தடுப்பு மருந்துப் பிரிவின் தலைவரான டாக்டர் ஜேக்கப் புலியேல்// அல்ல. புஷ்பா பார்கவா

    மூன்றாவது பிரச்சனை ஒன்று உள்ளது

    அதில் அவர்கள் தடுப்பு மருந்து கொடுக்க வேண்டாம் என்று கூற வில்லை
    “It is urgent that the incidence [of polio] be reduced as rapidly as possible. A simple way would be to administer a single dose of the enhanced potency IPV (M-IPV), to all those of six months of age or over who may have already received one or more doses of OPV (some of whom we know, from experience may not have been protected), and to those of the same age who may not have been previously immunised against polio. A single dose of M-IPV of sufficient potency will induce antibody and/or immunologic memory in nearly all infants of that age. For infants less than six months of age who still possess maternal antibody, two doses, preferably, one with DTP are necessary.”
    OPVயை விட சிறந்த மருந்தான IPV கொடுக்க வேண்டும் என்று கூறுகிறார்கள்

    குழந்தைக்கு ஒரு வயதானவுடன் தாய்ப்பாலை நிறுத்தி விட்டு பிற உணவுகள் தாருங்கள் என்று ஒரு மருத்துவர் கூறினால்

    குழந்தைக்கு தாய்ப்பாலை நிறுத்திவிடுங்கள் என்று மருத்துவர் கூறிவிட்டார், எனவே குழந்தையை பட்டினி போடுங்கள் என்று கூறுவீர்கள் போலிருக்கிறது

    என்ன கொடுமை சார் இது

     
  • புருனோ 7:55 pm on June 25, 2010 Permalink | Reply  

    ராவணன் சந்தேகம் 2 : வீரா ஏன் ஐஸ்வர்யா ராயை கடத்துகிறார்

     
    • புருனோ 9:14 pm on June 25, 2010 Permalink | Reply

      கொல்ல வேண்டும் என்றால் நேரடியாக துப்பாக்கி வைத்து ப்டகிலேயே சுட்டிருக்க வேண்டியது தானே

      • kanummc 12:59 am on June 26, 2010 Permalink | Reply

        enna chinnapillaithanama na kaelvi kekkureenga? veera aishwarya va kidnap pannalaina ,eppidi 2.5 hrs namma kaluththa arukka mudiyum? why blood, same blood dhan!

    • vskesav 3:20 pm on July 5, 2010 Permalink | Reply

      nalu sandai @ five songs ok?

  • புருனோ 7:30 pm on June 22, 2010 Permalink | Reply  

    ராவணன் சந்தேகம் 1

    தொண்டையில் குண்டு பாய்ந்ததினால் தான் வீரா, பக் பக் என்று கத்துகிறாரா

     
  • புருனோ 5:25 am on March 29, 2010 Permalink | Reply  

    அன்புள்ள தாண்டவன் சார்,

    நலமா.

    ஆனால் நான் நலமாக இல்லை. நான் கோடம்பாக்கத்தில் சிறு கடை ஒன்றை நடத்தி வருகிறேன். சினிமா சூட்டிங், நாடகம் போன்றவற்றிற்கு உடைகளை வாடகைக்கு விட்டு எப்படியோ என் பிழைப்பு ஓடுகிறது. இந்த நிலையில், ஒரு காலத்தில் இந்த துணிகளை தைத்து தந்த தையல்காரர் இன்று வந்து, நான் ஒவ்வொரு முறை வாடகைக்கு விடும் போது வரும் பணத்தில் அவருக்கு பங்கு கேட்கிறார். இது நியாயமா. இது குறித்த என் மனக்குமுறலையும் நண்பர்கள் வட்டாரத்தில் பதிவு செய்திருக்கிறேன். என் கருத்தில் தவறுகள் இருகின்றன. விடை தெரியாத கேள்விகள் பல இருகின்றன. என்னால் ஒரு எல்லைக்குமேல் சிந்திக்க முடியவில்லை. உங்கள் பதில் என் நிம்மதியான தூக்கமற்ற சில இரவுகளை சரிப்படுத்தலாம்.
    அன்புடன்

    அருண்

    அன்புள்ள அருண்,

    இது போன்ற மோசடிப்பேர்வழிகள் உலகில் இருந்து கொண்டு தானிருக்கிறார்கள்

    என் நண்பர் ஒருவர் வீடு கட்டினார். வீடு கட்டும் போது செங்கல், மணல், சிமெண்ட் உட்பட அனைத்தும் அவர் தான் வாங்கினார். கட்டிட பொறியாளரோ வரைபடம் மட்டும் போட்டு தந்தார். அதற்கு காசும் வாங்கிக்கொண்டார். மேஸ்திரி, சித்தாள் கூலி, கம்பி, ஜன்னல், மின் சாதனங்கள் உடப்ட அனைத்தும் நண்பரின் செலவே. வீடு கட்டப்படுவதை மேற்பார்வை பார்ப்பதற்கு பொறியாளருக்கு காசு அளிக்கப்பட்டது

    வீடு கட்டி பால் காய்ச்சியபின்னர் அவர் வீட்டில் குடியேறி விட்டார்.

    இப்பொழுது அந்த விட்டை வாடகைக்கு விடுகிறார்.
    ஆனால் பொறியாளரோ வாடகையில் பங்கு கேட்கிறார்.
    இது நியாயமா

    இது போன்ற அநியாயக்காரர்கள் இருக்கும் ஊரில் நாம் தர்மத்தை எங்கு தேடுவது

    ஒரு வேளை பொறியாளர் ஒரு வீட்டின் வரைபடத்தை வரைந்து அந்த வீட்டை சொந்த செலவில் கட்டி, கல், மணல், சிமெண்ட் எல்லாம் அவரது செலவில் வாங்கி, மேஸ்திரி, கொத்தனார், சித்தாள் கூலி எல்லாம் அவர் செலவில் அளித்திருந்தால் அதில் அவர் உரிமை கோரலாம். மேற்கத்திய நாடுகளில் பல பொறியாளர்கள் அப்படி செய்கிறார்கள்.

    ஆனால் இப்படி அடுத்தவன் செலவில் கட்டப்பட்ட வீட்டிற்கு உரிமை கோருபவர்களை என்ன செய்யலாம்

    அன்புடன்
    தாண்டவன்

     
    • ரவி 4:22 pm on March 30, 2010 Permalink | Reply

      ;)

      இளையராசா வழக்கு சட்டப்படி செல்லுபடியாகாதா?

  • புருனோ 7:53 pm on March 19, 2010 Permalink | Reply  

    பாலு புதுசா வீடு கட்டியிருக்க வீடு பால் காய்ச்சுறதுக்கு போனீங்களே என்ன விசேஷம்

    நல்லா யிருந்தது. ஒரே அலங்கார தோரணம், சீரியல் செட்டு, வாழமரமுன்னு டெக்கரசேசன் எல்லாம் அமர்க்களம் தெரியுமுல்ல

    அதுக்கெல்லாம் காசாயிருக்குமே

    நாலரை லட்சத்தில் வீடு கட்டி பால் காய்ச்சுறப்ப அலங்காரத்திற்கு இரண்டாயிரம் செலவழிக்கிறது தப்பா

    அது சரி காம்பௌண்ட் செங்கல்லா, ஹாலோ ப்ளாக்கா

    இல்ல காம்பௌண்ட் இன்னும் கட்டல

    காம்பௌண்ட் இன்னும் கட்டலயா, பிறகு ஏன் அவசரமா பால் காய்ச்சனும்

    பால் காய்க்கும் போது கட்டிடம் முற்றுப்பெறாமல் ஏதாவது வேலை பாக்கியிருக்கனுங்கிறது எப்பவுமே இருப்பது தானே, இது என்ன புதுசா கேட்குற,

    அப்ப விருந்தெல்லாம் பலமா

    ஆமா, நமக்கு மட்டுமுன்னு இல்ல, கட்டிடம் கட்டின தொழிலாளிகளுக்கு கூட சிக்கன் பிரியாணியோட விருந்து

    —–

    பாபு புதுசா வீடு கட்டியிருக்க வீடு பால் காய்ச்சுறதுக்கு போனீங்களே என்ன விசேஷம்

    காசுக்கு பிடிச்ச கேடு. வீடு பால் காய்க்கிறதுக்கு எதுக்கு வாழ மரம் கட்டனும், தோரணம் கட்டனும். அது எல்லாம் நிரந்தரமா. காசுக்கு பிடிச்ச கேடு தானே. அது மட்டுமா, கட்டிட வேலை பாத்தவங்களுக்கு எல்லாம் சாப்பாடு வேற. இது கூட பரவாயில்லை. கிணத்து மோட்டருக்கு ஷெட் போடல. அதுக்குள்ள பால் காய்ச்சனுமின்னு என்ன அவசரம். வெக்கக்கேடு

    என்னங்க, பாலு இந்த மாதிரி தோரணம் கட்டி, சாப்பாடு போட்டப்ப அத பாராட்டினீங்க. நாலரை லட்சத்தில் வீடு கட்டும் போது பால் காய்ச்சுறப்ப அலங்காரத்திற்கு இரண்டாயிரம் செலவழிக்கிறது தப்பான்னு கேட்டீங்க. காம்பௌண்ட் கட்டதது கூட வேலை முடியதுக்கு முன்னாலயே பால் காய்ச்சுவது சகஜமுன்னு சொன்னீங்க. இப்ப இப்படி பேசுறீங்க. என்ன இது

    நான் யார். நான் தமிழ் வலைப்பதிவருல்ல. எனக்கு பிடிச்சவங்க என்ன செஞ்சாலும் பாராட்டுவேன். பிடிக்காதவங்க என்ன செஞ்சாலும், அது சரியாகவே இருந்தாலும் குற்றம் சொல்லுவேன். இது கூட தெரியாதா

    !?????

     
    • manikandan 8:20 pm on March 19, 2010 Permalink | Reply

      ***
      நான் யார். நான் தமிழ் வலைப்பதிவருல்ல. எனக்கு பிடிச்சவங்க என்ன செஞ்சாலும் பாராட்டுவே
      ***

      இது என்ன சுய பரிசோதனையா ? :) -

      • புருனோ 2:43 am on March 20, 2010 Permalink | Reply

        // பிடிக்காதவங்க என்ன செஞ்சாலும், அது சரியாகவே இருந்தாலும் குற்றம் சொல்லுவேன்.//
        இதையும் சேர்த்துக்கொள்ளுங்கள். அதை விட்டு விட்டீர்களே !!

  • புருனோ 3:22 am on March 7, 2010 Permalink | Reply  

    http://mohanramanmuses.blogspot.com/2010/03/nithyananda-ndtiwari-and-like.html Big Brother is not just watching but Video Taping as well.

     
  • புருனோ 3:14 am on March 7, 2010 Permalink | Reply  

    சில கேள்விகள் http://santhoshpakkangal.blogspot.com/2010/03/blog-post_06.html

     
  • புருனோ 3:12 am on March 7, 2010 Permalink | Reply  

    சூப்பர் விமர்சனம் http://mentalcentral.blogspot.com/2010_03_01_archive.html#4496379482315975464

     
  • புருனோ 3:07 am on March 7, 2010 Permalink | Reply  

    எப்படிடா 39 வயசுல இந்த உடம்பு – வியப்புடன் இருவர் பேசிக்கொண்டிருக்கிறார்கள்
    இரண்டு பேருக்கும் சூப்பர் கெமிஸ்ட்ரிலடா – இது ம்ற்றொருவரின் கருத்து

    ஒரு பிரச்சனையை , விஷயத்தை எத்தனை கோணங்களிலிருந்து அணுக முடிகிறது என்பது வியப்பாக இருக்கிறது

     
  • புருனோ 3:03 am on March 7, 2010 Permalink | Reply  

    செய்தியை பார்த்தவுடன் தோன்றிய தலைப்பு

    பகலில் ஆன்மிகம், இரவில் ஆண்மோகம் : http://www.huffingtonpost.com/2010/03/05/vatican-hit-by-gay-sex-sc_n_486218.html

    வலைப்பதிவு எழுதி நாம கூட இதழ்களுக்கு போட்டியாக தலைப்பு வைக்க கற்றுக்கொண்டிருக்கிறோமோ என்று தோன்றுகிறது

     
c
compose new post
j
next post/next comment
k
previous post/previous comment
r
reply
e
edit
o
show/hide comments
t
go to top
l
go to login
h
show/hide help
shift + esc
cancel