காதலிக்க மறுத்த மாணவி மற்றும் அவளது தோழியின் மீது ஆசிட் வீசி அவர்களது வாழ்வைக் கெடுத்த 3 வாலிபர்களை ஆந்திர போலீசார் சுட்டுக் கொன்று விட்டனர். இதே போல் (பெண்கள் மீது ஆசிட் வீசறதை சொல்றேன், போலீஸ் சுடறதைப் பத்தி இல்ல!!!) ஆந்திராவிலேயே பல சம்பவங்கள் நடந்துள்ளன என்பது குறிப்பிட வேண்டியது.

என்கவுண்டர் என்ற பெயரில் போலீசார் அவர்களை சுட்டுக் கொண்றிருக்கலாம் என்று சில போலி ‘மனித உரிமை’ காப்பாளர்கள் கூவினாலும், இவ்வாலிபர்களைப் போன்ற ஆணாதிக்க அரக்கர்களுக்கு இது ஒரு நல்ல பாடமாக அமையும் என்று தோன்றுகிறது.

“பெண்கள் மீது வன்முறையை பிரயோகித்தால் உனக்கு சாவு தான்” என்ற மெஸேஜ் இந்த ஆணாதிக்க சமுதாயத்தை சென்றடைய இது போன்ற instant தண்டனை தேவை தான், ஒரு சில நாதாறிகள் “Law of the Jungle”, “Human Rights Violation” என்று கூப்பாடு போட்டாலும் !!!