தயிர்மை பதிப்பகம்
கிருசுணன் ரஞ்சனா எழுதிய “இப்போது அவை இங்கு வருவது இல்லை” படிக்க முயன்றேன். ஒவ்வொரு பத்தியிலும், எண்ணற்ற இலக்கணப் பிழைகள் மலிந்துள்ளதால் படிக்கப் படிக்கத் தலைவலியும் எரிச்சலுமே மிஞ்சின. முக்கியமான ஒருமை-பன்மை வேறுபாடுகள், சந்தி இலக்கணத்தைக் குழி தோண்டிப் புதைப்பது போலவே பலரும் செயல்படுகின்றனர். அச்சில் உள்ளது எல்லாம் சரி என்று நினைக்கும் மனப்பாங்கு உள்ளதால், வருங்காலத்தில் தமிழ் இலக்கணத்தைச் சிதைப்பதில், மறக்கடிப்பதில் போய் தான் முடியும். எழுத்தாளருக்கு எழுதத் தெரியாவிட்டாலும், பதிப்பகத்தின் தொகுப்பாசிரியர் என்ன செய்கிறார்? உயிர்மை பதிப்பகம் என்பதற்குப் பதில் தயிர்மை பதிப்பகம் எனச் சொல்லலாம்.
கூழாங்கற்கள் பாடுகின்றன « உளறல் 8:13 pm on January 17, 2012 Permalink |
[...] பாடுகின்றன படித்தேன். அங்கங்கு தயிர்மை நடை உறுத்தினாலும், பரவாயில்லை. வழ வழா [...]