அக்கா தங்கச்சிக் கொடுமை
நண்பன் 1, 2: தங்கள் வசதிக்கு மீறிய இடத்தில் தங்கள் அக்காவைத் திருமணம் செய்து வைத்ததால் ஆன செலவுக்குப் பல ஆண்டுகளுக்கு மீளா வட்டி கட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
நண்பன் 3: பொறியியல் பட்டப்படிப்பு முடித்த தங்கை, 50 பவுன் நகை போட்டு கட்டிக் கொடுத்தால் மட்டுமே தனக்குத் திருமணம் செய்து வைக்குமாறு கறாராக சொல்லி விட்டதால், பல இலட்சம் கடன் வாங்கி நகை சேர்த்துக் கொண்டிருக்கிறான். தங்கையின் திருமணத்துக்கு 15 இலட்சம் செலவு ஆகும் என்றால், அதற்குப் பிறகு இவன் எப்போது திருமணம் செய்வது?
குடும்பச் சொத்து ஏதாவது இருந்தால், அதற்கு உரிய தொகையை பெண்ணுக்குச் சீதனமாகத் தருவது புரிந்து கொள்ளத் தக்கது. ஆனால், வசதிக்கு மீறிய இடத்தில் பெண்ணைக் கட்டிக் கொடுப்பதும், பெண்களே கூடப் பிறந்தவன் தனக்குச் செய்ய வேண்டும் என்று வற்புறுத்துவதும் என்ன நியாயமோ?