குல்லு மணாலி

குல்லு மணாலி சென்றிருந்தோம். இவ்வளவு மட்டமாகப் பராமரிக்கப்படும் ஒரு சுற்றுலா நகரத்தைப் பார்த்ததே இல்லை. நகரைச் சுற்றி உள்ள பனி மலை, பியாசு ஆறு முதலிய இயற்கைக் காட்சிகள் நன்றாக இருந்தாலும், மணாலி நகரம் மிகவும் மாசுபட்டு, குப்பையும் நாற்றமுமாக உள்ளது. விடுதி, உணவு வசதிகள் மிகவும் சுமாராகவும் நகரெங்கும் காசு பிடுங்கும் ஏமாற்றுக் காரர்களாகவுமே உள்ளனர். போதாக்குறைக்கு, “நாம் அனைவரும் இந்தியர்கள். இந்தி நமது முதல் மொழி” என்று வேறு ஒரு விடுதிக்காரர் தனது சொற்பொழிவைத் தொடங்கினார் :) ஆண்டு முழுக்க பனி மலை தென்படும் என்பதைத் தவிர சிறப்பாக ஒன்றும் தோன்றவில்லை. இதை விட தென்னக மலைச் சுற்றுலா பகுதிகளே எவ்வளவோ சிறப்பாக உள்ளன. அப்படியே மணாலிக்குப் போக விரும்பினால், ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள ஏதாவது ஒரு உயர்தர நட்சத்திர விடுதிக்கு உங்கள் சொந்த வண்டியுடன் செல்வது நல்லது.