தேர்தல்
கடந்த இரண்டு தேர்தல்களிலும், “இந்தக் கட்சி வெல்ல வேண்டும் என்று நினைத்து வாக்களிப்பதற்குப் பதில், எப்படியாகினும் சில கட்சிகள் வென்று விடக்கூடாது” என்று உறுதியாகத் தோற்கக் கூடிய கட்சிகளுக்கே வாக்களிக்க நேர்ந்தது
49 – 0 போடலாம் என்றால் உள்ளூர் வாக்குச்சாவடி முகவர்களாக சித்தப்பா, பெரியப்பாக்களே இருக்கிறார்கள் ! வாக்களிப்பு எந்திரத்திலேயே 49 – 0 வைச் சேர்த்தால் நன்றாக இருக்கும். எத்தனை விழுக்காடு 49-0 வாக்குகள் விழுந்தால் தேர்தல் சீர்திருத்தம் வரும் என்று தெரியவில்லை.
கார்த்திக் 10:21 am on April 20, 2011 Permalink |
49-0 விற்கு மற்ற வேட்பாளர்களை விட கூடுதலான ஓட்டுகள் கிடைக்கும் போது தான் சீர்திருத்ததிற்கு வாய்ப்புளது. அந்த தொகுதியில் தேர்தல் திருப்பி நடத்தப்படும். அப்போது தான் நல்ல வேட்பாளர்களை நிறுத்த கட்சிகளுக்கு உந்துதல் இருக்கும். ஆனால் இப்பொது உள்ள நிலவரத்தில் 49-ஓ அனைத்து தொகுதிகளிலும் டெப்பாசிட் இழந்து வருகிறது.
ஆமா, வாக்குச்சாவடி முகவர்களாக நமக்கு தெரிந்தவர்கள் இருந்தால், ஏன் 49-ஓ போடத் தயக்கம்?
ரவி 3:23 pm on April 20, 2011 Permalink |
//ஆமா, வாக்குச்சாவடி முகவர்களாக நமக்கு தெரிந்தவர்கள் இருந்தால், ஏன் 49-ஓ போடத் தயக்கம்?//
என்ன காரணத்துக்காக வேட்பாளர்களுக்கு இடும் வாக்குகளையும் இரகசியமாக வைத்திருக்கிறார்களோ அதே காரணத்துக்காகத் தான்
49-ஓ இரகசியமாக இல்லாத காரணத்தினாலேயே ஏதேனும் ஒரு வேட்பாளருக்கு இட்டதாக பலரும் வலைப்பதிவுகளில் எழுதக் கண்டேன்.
புருனோ 6:43 am on April 24, 2011 Permalink |
ஏன் 49 0 வேண்டும் ரவி ??? நீங்கள் தேர்தலில் நின்று உங்களுக்கு ஓட்டுப்போடுங்கள்….ஏன் 49 0
ரவி 10:48 am on April 24, 2011 Permalink |
நீங்கள் வைப்புத் தொகை கட்டினால் நான் நிற்கிறேன்
புருனோ 11:57 am on April 24, 2011 Permalink |
வைப்புத்தொகை எவ்வளவு
ரவி 10:15 am on April 26, 2011 Permalink |
சிரிப்பானைக் காண்க
உங்களால் தேர்தலில் நின்று நல்ல பணி ஆற்ற முடியாவிட்டால், நிற்பவரில் யாராவது ஒருவருக்குப் போடுங்கள் என்று சொல்ல வருகிறீர்களா?
புருனோ 7:06 am on April 24, 2011 Permalink |
தேர்தல் சீர்திருத்தம் என்றால் என்ன . . . . .மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பலத்தை குறைத்து விட்டு ராணுவம் அல்லது உயர் நீதிமன்றத்தின் பலத்தை அதிகரிப்பதா