தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு
கல்வி கற்கும் உரிமைக்கு எதிராக போராட அழைக்கும் ஒரு பள்ளி
ஏகப்பட்ட ஓட்டைகளுடன் ஒரு சட்டம்.
அப்படியே வலுக்கட்டாயமாக வறிய மாணவர்களைச் சேர்த்தாலும், பள்ளி – ஆசிரியர்கள் – மற்ற மாணவர்கள் பாரபட்சமாக நடத்தக்கூடும். இதை உணரவோ எதிர்க்கவோ மாணவர்களுக்குப் பக்குவமும் பெற்றோர்களுக்கு வலுவும் இருக்காது. இலவச இடம் தரும் பொறியியல் கல்லூரிகள் கூட எல்லா வகைகளிலும் காசைக் கறக்கப் பார்க்கின்றன. எனவே சத்துணவு, மற்ற உதவிகள் கூடிய முழுக்க இலவசமான கல்வி சாத்தியப்படாது என்றுநினைக்கிறேன்.
// தனியார் கல்விக்கூடங்களில் இலவசமாக கற்றுக்கொள்ள வழி செய்து விட்டோமே என்று அரசு பள்ளிகளை புதிதாக திறக்காமல், ஏற்கனவே இருக்கும் பள்ளிகளுக்கு படிப்படியாக மூடுவிழா நடத்துவதற்கு இந்த சட்டம் வழிவகுக்கிறதா ??//
நியாயமான அச்சம்.
கூடுதல் தரம், எண்ணிக்கையிலான அரசு பள்ளிகளே தேவை.
கட்டாய மருத்துவச் சட்டம் என்று முழுக்க இலவசமான மருத்துவம் அளிக்கச் சொன்னால் தனியார் மருத்துவமனைகள் ஏற்றுக் கொள்ளுமா? அரசே காப்பீட்டுக் கட்டணம் செலுத்துவதால் தான், தனியார் மருத்துவமனைகள் ஏழைகளை வரவேற்கின்றன. இதுவே கூட பிற்காலத்தில் பொது மருத்துவத் துறையை வலுவிழக்கச் செய்யும் என்னும் போது, “தனியார் பள்ளிகளில் ஏழைகளுக்கு இட ஒதுக்கீடு தந்தோம்” என்று விளம்பரப்படுத்தி அரசு தன் பொறுப்பில் இருந்து விலகப் பார்ப்பதாகவே தோன்றுகிறது.
கார்த்திக் 9:54 am on April 27, 2011 Permalink |
//அப்படியே வலுக்கட்டாயமாக வறிய மாணவர்களைச் சேர்த்தாலும், பள்ளி – ஆசிரியர்கள் – மற்ற மாணவர்கள் பாரபட்சமாக நடத்தக்கூடும்
இதை நினைத்து தான் மனம் வருந்துகிறது