அரசுப் பள்ளிக் கல்வி / தாய்மொழி வழிக்கல்வி
அரசுப் பள்ளிக் கல்வி / தாய்மொழி வழிக்கல்வி பற்றி உரையாடல் வரும் போதெல்லாம் செயமோகனின் தேர்வு என்ற இடுகையை மேற்கோளாகச் சுட்டுகிறேன். http://www.jeyamohan.in/?p=488 . படித்துப் பல மாதங்கள், ஆண்டுகள் ஆன பின்னும் மறக்க முடியாத ஒரு சில தமிழ் வலைப்பதிவு இடுகைகளில் இதுவும் ஒன்று.
வீட்டுக்கு அருகில் தரமான தாய்மொழிக் கல்வியைத் தரும் தனியார் பள்ளிகளை விரல்விட்டு எண்ணி விடலாம் என்பதால் தாய்மொழிக் கல்வி என்றாலே அரசுப் பள்ளிகளையே பெரிதும் நாடும் நிலை உள்ளது.
அரசுப் பள்ளிகள் ஒரு பொதுத் திட்டம் என்பதால் பெற்றோர்-ஆசிரியர் கழகம் மூலமாகத் தீவிரமாக ஈடுபட்டு பள்ளியின் தரத்தை மேம்படுத்த வாய்ப்புண்டு. இப்படி தரமான பள்ளிகளைக் கொண்டுள்ள ஊர்களைத் தரும். அதே வேளை இந்தச் செயற்பாட்டுக்கு உகந்த ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர், சக பெற்றோர்கள் வாய்க்கப்பெற வேண்டும். நிறைய உழைப்பையும் நேரத்தையும் செலவிட வேண்டி வரும். இதைச் செலவிட இயலாமல் வெறுமனே பள்ளியின் தரத்தைக் குறை கூறுவது சரியாக இருக்காது.
புருனோ 6:42 am on April 24, 2011 Permalink |
ரவி
அரசு பள்ளி, அரசு மருத்துவமனை, அரசு பேரூந்து, அரசு வங்கி, அரசு தபால் ஆகியவற்றின் நோக்கம் வேறு . . . .. அதை தனியாருடன் ஒப்பிட்டால் நாளடைவில் அவை அந்த நோக்கத்திலிருந்து விலகிப்போய்விடும் . . . . அரசு வங்கிகள் தனியார் வங்கிகளுடன் போட்டி போட்டதன் விளைவு, கடந்த 20 ஆண்டுகளாக கிராமங்களில் துவக்கப்பட்ட கிளைகளை விரல் விட்டு எண்ணி விடலாம்
புருனோ 6:48 am on April 24, 2011 Permalink |
நான் கூறுவதை படித்தவுடன் உடனடியாக உங்களுக்கு கோபம் வரலாம், ஆனால் யோசித்து பாருங்கள் . . . . . முதல்வர் தனி சீருந்தில் கோட்டைக்கு வராமல் அரசு பேரூந்தில் வந்தால் பொது மக்களுக்கு நல்லதா, கெட்டதா
புருனோ 6:52 am on April 24, 2011 Permalink |
அரசு நிறுவனங்களை இரண்டாக பிரிக்க வேண்டும். ஒன்று லாப நோக்கில் நடத்தப்படுபவை (உதாரணம் டாஸ்மாக், எல்காட்) இரண்டு, அடித்தள மக்களுக்காக நடத்தப்படுபவை – உதாரணம் – அரசு பள்ளி, அரசு மருத்துவமனை, அரசு பேரூந்து, அரசு வங்கி, அரசு தபால் . . .. . இதில் இரண்டாவது பிரிவு என்பது தனியார் தரத்தில் இருக்காது . . .. அப்படி இருக்க வேண்டும் என்று முயற்சிப்பது தவறு என்பது என் கருத்து . . . .. உதாரணமாக சென்னையில் ஓடும் அரசு குளிர்பதன மிதவை பேரூந்துகள் . . . ..அப்படி ஒரு பேரூந்து வாங்கி ஓட்டும் காசில் (மும்மடங்கு கட்டணம்) சாதாரண பேரூந்துகள் இரண்டை வாங்கி ஓட்டினால் சராசரி குடிமகன் வசதியாக நெரிசல் குறைவாக பயணிக்கலாம்
ரவி 10:46 am on April 24, 2011 Permalink |
சரி புருனோ, தனியார் துறையுடன் ஒப்பிட வேண்டாம். ஆனால், அரசு மருத்துவத் துறையின் தரம் உயர்ந்துள்ளதாக நீங்கள் கூறும் அளவாவது அரசுக் கல்வித் துறையின் தரம் உயர்ந்து உள்ளதா? இல்லை எனில் ஏன்? அடித்தட்டு மக்களுக்காக மட்டும் ஏதோ ஒரு தரத்தில் அரசுக் கல்வி என்பதை வரவேற்க இயலாது. சமூகம் முழுக்க ஒரே தரமான அரசுக் கல்வி தருவதன் மூலமே சமச்சீரான அடுத்த தலைமுறையை உருவாக்க முடியும். எனவே அரசு போக்குவரத்து, அரசு மருத்துவம் ஆகியவற்றைக் காட்டிலும் கூடுதல் முக்கியத்துவத்தை அரசுக் கல்விக்குத் தருவது நன்று.
புருனோ 11:57 am on April 24, 2011 Permalink |
ரவி, நீங்கள் தனியார் துறையுடன் ஒப்பிடாமல் பாருங்கள் . . . எவ்வளவு வளர்ச்சி என்று புரியும் . . .அதைத்தான் தான் சொன்னேன் . . . ..take away that distraction . . .. இது (இந்த வளர்ச்சி) போதுமா என்று கேட்டீர்கள் என்றால் பதில் . . .கண்டிப்பாக போதாது . . . . மேலும் வளரவேண்டும் . . . . ஆனால் அரசு பள்ளிகளை ஆராயும் போது தனியார் பள்ளிகளுடன் ஒப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்பது என் கருத்து
புருனோ 11:57 am on April 24, 2011 Permalink |
//கூடுதல் முக்கியத்துவத்தை அரசுக் கல்விக்குத் தருவது நன்று.// வழிமொழிகிறென்
புருனோ 12:03 pm on April 25, 2011 Permalink |
http://www.facebook.com/permalink.php?story_fbid=1987636335655&id=1385727511
ரவி 10:14 am on April 26, 2011 Permalink |
புருனோ, தனியார் கல்வியின் தேவையற்ற சொகுசுகளை பொதுக் கல்வியில் எதிர்பார்க்கவில்லை. எனினும், கழிவறை, நூலகம், கணினிகள், விளையாட்டுப் பொருட்கள், இருக்கைகள் போன்ற அடிப்படை வசதிகள், மாணவர் எண்ணிக்கைக்குத் தகுந்த விகிதத்தில் ஆசிரியர்கள், முறையாக பாடம் கற்பித்தல் போன்றவையே பொது மக்கள் எதிர்பார்ப்பவை. பொதுக் கல்வியின் முன்னேற்றத்தை தனியார் கல்வித் துறையுடன் ஒப்பிடக்கூடாது என்பதை ஏற்றுக் கொள்கிறேன். அதே வேளை பணம் உள்ளோர் தனியாருக்குப் போகலாம், பணம் இல்லாதோருக்கான பொதுக் கல்வி கொஞ்சம் கொஞ்சமாகத் தான் முன்னேறும் என்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அப்படி பணம் கொடுத்தும் தனியாரில் தரமான, சமச்சீரான கல்வி ( வெறும் மதிப்பெண் பெறும் எந்திரங்கள் தேவை இல்லை ) கிடைப்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்பதால் எந்தப் பள்ளியில் பிள்ளையைச் சேர்ப்பது என்பதே கேள்வி.
புருனோ 10:12 pm on April 26, 2011 Permalink |
//பொதுக் கல்வியின் முன்னேற்றத்தை தனியார் கல்வித் துறையுடன் ஒப்பிடக்கூடாது என்பதை ஏற்றுக் கொள்கிறேன்.//
அப்பாடா
புருனோ 10:13 pm on April 26, 2011 Permalink |
//அதே வேளை பணம் உள்ளோர் தனியாருக்குப் போகலாம், பணம் இல்லாதோருக்கான பொதுக் கல்வி கொஞ்சம் கொஞ்சமாகத் தான் முன்னேறும் என்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.// ரவி, இதை ஏற்றுக்கொள்ளக்கூடாது . . . ஏற்றுக்கொண்டால் அதுவே நடைமுறையாகிவிடும் . . . . ஆனாலும் . . . . .. ம்ம்ம் . . .
புருனோ 10:51 pm on April 26, 2011 Permalink |
http://www.payanangal.in/2011/04/blog-post_27.html