அரசுப் பள்ளிக் கல்வி / தாய்மொழி வழிக்கல்வி

அரசுப் பள்ளிக் கல்வி / தாய்மொழி வழிக்கல்வி பற்றி உரையாடல் வரும் போதெல்லாம் செயமோகனின் தேர்வு என்ற இடுகையை மேற்கோளாகச் சுட்டுகிறேன். http://www.jeyamohan.in/?p=488 . படித்துப் பல மாதங்கள், ஆண்டுகள் ஆன பின்னும் மறக்க முடியாத ஒரு சில தமிழ் வலைப்பதிவு இடுகைகளில் இதுவும் ஒன்று.

வீட்டுக்கு அருகில் தரமான தாய்மொழிக் கல்வியைத் தரும் தனியார் பள்ளிகளை விரல்விட்டு எண்ணி விடலாம் என்பதால் தாய்மொழிக் கல்வி என்றாலே அரசுப் பள்ளிகளையே பெரிதும் நாடும் நிலை உள்ளது.

அரசுப் பள்ளிகள் ஒரு பொதுத் திட்டம் என்பதால் பெற்றோர்-ஆசிரியர் கழகம் மூலமாகத் தீவிரமாக ஈடுபட்டு பள்ளியின் தரத்தை மேம்படுத்த வாய்ப்புண்டு. இப்படி தரமான பள்ளிகளைக் கொண்டுள்ள ஊர்களைத் தரும். அதே வேளை இந்தச் செயற்பாட்டுக்கு உகந்த ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர், சக பெற்றோர்கள் வாய்க்கப்பெற வேண்டும். நிறைய உழைப்பையும் நேரத்தையும் செலவிட வேண்டி வரும். இதைச் செலவிட இயலாமல் வெறுமனே பள்ளியின் தரத்தைக் குறை கூறுவது சரியாக இருக்காது.