அண்ணா அசாரே ஊழல் எதிர்ப்புப் போராட்டம்

இன்று , அண்ணா அசாரேயின் உண்ணா நோன்பை ஆதரித்து மெழுகுவர்த்தி வெளிச்ச ஊர்வலம் என்று கூப்பிட்டார்கள். எனக்குப் பெரிய நம்பிக்கை இல்லை. இந்தக் காலத்தில் உண்ணா நோன்புப் போராட்டம் என்பது உண்மையாளர்களின் உயிரையும் உடல்நலத்தையும் காவு வாங்குவதில் தான் போய் முடியும். எகிப்து போல இங்கு மக்கள் புரட்சி வராதா என்று சிலர் நினைக்கிறார்கள். ஆனால், இதற்கு மேல் பொறுக்க முடியாது, இழப்பதற்கு ஒன்றுமில்லை என்று சமூகம் முழுக்க கொடுங்கோலாட்சியின் பாதிப்புகள் தெரியும் வரை பரவலான ஒரு மக்கள் போராட்டம் என்பதும் அதன் வெற்றி என்பதும் சாத்தியப்படாது என்று நினைக்கிறேன்.