கிரகப்பிவேசம் !!
பாலு புதுசா வீடு கட்டியிருக்க வீடு பால் காய்ச்சுறதுக்கு போனீங்களே என்ன விசேஷம்
நல்லா யிருந்தது. ஒரே அலங்கார தோரணம், சீரியல் செட்டு, வாழமரமுன்னு டெக்கரசேசன் எல்லாம் அமர்க்களம் தெரியுமுல்ல
அதுக்கெல்லாம் காசாயிருக்குமே
நாலரை லட்சத்தில் வீடு கட்டி பால் காய்ச்சுறப்ப அலங்காரத்திற்கு இரண்டாயிரம் செலவழிக்கிறது தப்பா
அது சரி காம்பௌண்ட் செங்கல்லா, ஹாலோ ப்ளாக்கா
இல்ல காம்பௌண்ட் இன்னும் கட்டல
காம்பௌண்ட் இன்னும் கட்டலயா, பிறகு ஏன் அவசரமா பால் காய்ச்சனும்
பால் காய்க்கும் போது கட்டிடம் முற்றுப்பெறாமல் ஏதாவது வேலை பாக்கியிருக்கனுங்கிறது எப்பவுமே இருப்பது தானே, இது என்ன புதுசா கேட்குற,
அப்ப விருந்தெல்லாம் பலமா
ஆமா, நமக்கு மட்டுமுன்னு இல்ல, கட்டிடம் கட்டின தொழிலாளிகளுக்கு கூட சிக்கன் பிரியாணியோட விருந்து
—–
பாபு புதுசா வீடு கட்டியிருக்க வீடு பால் காய்ச்சுறதுக்கு போனீங்களே என்ன விசேஷம்
காசுக்கு பிடிச்ச கேடு. வீடு பால் காய்க்கிறதுக்கு எதுக்கு வாழ மரம் கட்டனும், தோரணம் கட்டனும். அது எல்லாம் நிரந்தரமா. காசுக்கு பிடிச்ச கேடு தானே. அது மட்டுமா, கட்டிட வேலை பாத்தவங்களுக்கு எல்லாம் சாப்பாடு வேற. இது கூட பரவாயில்லை. கிணத்து மோட்டருக்கு ஷெட் போடல. அதுக்குள்ள பால் காய்ச்சனுமின்னு என்ன அவசரம். வெக்கக்கேடு
என்னங்க, பாலு இந்த மாதிரி தோரணம் கட்டி, சாப்பாடு போட்டப்ப அத பாராட்டினீங்க. நாலரை லட்சத்தில் வீடு கட்டும் போது பால் காய்ச்சுறப்ப அலங்காரத்திற்கு இரண்டாயிரம் செலவழிக்கிறது தப்பான்னு கேட்டீங்க. காம்பௌண்ட் கட்டதது கூட வேலை முடியதுக்கு முன்னாலயே பால் காய்ச்சுவது சகஜமுன்னு சொன்னீங்க. இப்ப இப்படி பேசுறீங்க. என்ன இது
நான் யார். நான் தமிழ் வலைப்பதிவருல்ல. எனக்கு பிடிச்சவங்க என்ன செஞ்சாலும் பாராட்டுவேன். பிடிக்காதவங்க என்ன செஞ்சாலும், அது சரியாகவே இருந்தாலும் குற்றம் சொல்லுவேன். இது கூட தெரியாதா
!?????
manikandan 8:20 pm on March 19, 2010 Permalink |
***
நான் யார். நான் தமிழ் வலைப்பதிவருல்ல. எனக்கு பிடிச்சவங்க என்ன செஞ்சாலும் பாராட்டுவே
***
இது என்ன சுய பரிசோதனையா ?
-
புருனோ 2:43 am on March 20, 2010 Permalink |
// பிடிக்காதவங்க என்ன செஞ்சாலும், அது சரியாகவே இருந்தாலும் குற்றம் சொல்லுவேன்.//
இதையும் சேர்த்துக்கொள்ளுங்கள். அதை விட்டு விட்டீர்களே !!