வாசகர் கடிதம்
அன்புள்ள தாண்டவன் சார்,
நலமா.
ஆனால் நான் நலமாக இல்லை. நான் கோடம்பாக்கத்தில் சிறு கடை ஒன்றை நடத்தி வருகிறேன். சினிமா சூட்டிங், நாடகம் போன்றவற்றிற்கு உடைகளை வாடகைக்கு விட்டு எப்படியோ என் பிழைப்பு ஓடுகிறது. இந்த நிலையில், ஒரு காலத்தில் இந்த துணிகளை தைத்து தந்த தையல்காரர் இன்று வந்து, நான் ஒவ்வொரு முறை வாடகைக்கு விடும் போது வரும் பணத்தில் அவருக்கு பங்கு கேட்கிறார். இது நியாயமா. இது குறித்த என் மனக்குமுறலையும் நண்பர்கள் வட்டாரத்தில் பதிவு செய்திருக்கிறேன். என் கருத்தில் தவறுகள் இருகின்றன. விடை தெரியாத கேள்விகள் பல இருகின்றன. என்னால் ஒரு எல்லைக்குமேல் சிந்திக்க முடியவில்லை. உங்கள் பதில் என் நிம்மதியான தூக்கமற்ற சில இரவுகளை சரிப்படுத்தலாம்.
அன்புடன்
அருண்
அன்புள்ள அருண்,
இது போன்ற மோசடிப்பேர்வழிகள் உலகில் இருந்து கொண்டு தானிருக்கிறார்கள்
என் நண்பர் ஒருவர் வீடு கட்டினார். வீடு கட்டும் போது செங்கல், மணல், சிமெண்ட் உட்பட அனைத்தும் அவர் தான் வாங்கினார். கட்டிட பொறியாளரோ வரைபடம் மட்டும் போட்டு தந்தார். அதற்கு காசும் வாங்கிக்கொண்டார். மேஸ்திரி, சித்தாள் கூலி, கம்பி, ஜன்னல், மின் சாதனங்கள் உடப்ட அனைத்தும் நண்பரின் செலவே. வீடு கட்டப்படுவதை மேற்பார்வை பார்ப்பதற்கு பொறியாளருக்கு காசு அளிக்கப்பட்டது
வீடு கட்டி பால் காய்ச்சியபின்னர் அவர் வீட்டில் குடியேறி விட்டார்.
இப்பொழுது அந்த விட்டை வாடகைக்கு விடுகிறார்.
ஆனால் பொறியாளரோ வாடகையில் பங்கு கேட்கிறார்.
இது நியாயமா
இது போன்ற அநியாயக்காரர்கள் இருக்கும் ஊரில் நாம் தர்மத்தை எங்கு தேடுவது
ஒரு வேளை பொறியாளர் ஒரு வீட்டின் வரைபடத்தை வரைந்து அந்த வீட்டை சொந்த செலவில் கட்டி, கல், மணல், சிமெண்ட் எல்லாம் அவரது செலவில் வாங்கி, மேஸ்திரி, கொத்தனார், சித்தாள் கூலி எல்லாம் அவர் செலவில் அளித்திருந்தால் அதில் அவர் உரிமை கோரலாம். மேற்கத்திய நாடுகளில் பல பொறியாளர்கள் அப்படி செய்கிறார்கள்.
ஆனால் இப்படி அடுத்தவன் செலவில் கட்டப்பட்ட வீட்டிற்கு உரிமை கோருபவர்களை என்ன செய்யலாம்
அன்புடன்
தாண்டவன்
ரவி 4:22 pm on March 30, 2010 Permalink |
இளையராசா வழக்கு சட்டப்படி செல்லுபடியாகாதா?