அரசு மருத்துவர்களின் Private Practice தடை செய்யப்படுவதின் சாதகங்களும் பாதகங்களும்
தற்சமயம் மத்திய அரசு மற்றும் சில மாநிலங்களில் அரசு மருத்துவர்கள் தனியாக பிராக்டிஸ் பண்ண கூடாது. ஆனால் அங்கு ஊதியம் அதிகம்
உதாரணமாக
தனியாக பிராக்டிஸ் அனுமதி இல்லாத மாநிலங்களில்
பேராசிரியர் என்றால் மாதம் 1.25 முதல் 1.5 லட்சம்
உதவி பேராசிரியர் 60,000 முதல் 70,000
தமிழகத்தில்
பேராசிரியர் என்றால் மாதம் 60,000 முதல் 70,000
உதவி பேராசிரியர் 30,000 முதல் 45,000
தனியாக பிராக்டிஸ் செய்ய அனுமதி இருப்பதினால் இந்த குறைந்த ஊதியத்தை பலர் பொருட்படுத்துவதில்லை. ஆனால் பிராக்டிசிற்கு தடை என்றால் இது பிரச்சனை யாகும்
பணியில் இருக்கும் பலரும் ராஜினாமா செய்து விட்டு சென்று விடுவார்கள். சிலர் ஊதியம் உயர வாய்ப்பு உள்ளது என்று தொடர்ந்து இருப்பார்கள்
-oOo-
தமிழக அரசின் மருத்துவமனைகளில் வேலை பார்க்கும் மருத்துவ இளங்கலை (MBBS) மருத்துவரின் மாத சம்பளம் 30,000 என்றால் இதய சிறப்பு சிகிச்சை மருத்துவரின் சம்பளம் 31500 தான்.
எனவே தனியாக பிராக்டிஸ் செய்ய அனுமதி இல்லை என்றால்
சிறப்பு மருத்துவர்களில் 90 சதம் பேர் உடனடியாக ராஜினாமா செய்து விடும் வாய்ப்பு உள்ளது !!
MBBS மருத்துவர்களில் ராஜினாமா செய்பவர்களின் சதம் குறைவாக இருக்கும்
-oOo-
1980கள் வரை மருத்துவ கல்வி என்பது மேட்டுக்குடியினரின் கல்வியாகவே இருந்தது (விதிவிலக்குகள் தவிர)
1990களுக்கு பிறகு அது நடுத்தர மற்றும் அடிதட்டு மக்களின் கல்வியாக மாறியுள்ளது (விதிவிலக்குகள் தவிர)
இதில் முந்தைய தலைமுறை மருத்துவர்களில் 90 சதம் தனியாக பிராக்டிஸ் செய்கிறார்கள்
அடுத்த தலைமுறையில் மருத்துவமனை வைத்திருப்பவர்கள் மிக சொற்பமே.
தனியாக பிராக்டிஸ் செய்யாதவர்கள் பலர்
உதாரணமாக தமிழக அரசு மருத்துவ பணியில் இருக்கும் சுமார் 13,000 மருத்துவர்களில் 1996க்கு பிறகு பணியில் சேர்ந்துள்ளவர்கள் சுமார் 7000. இதில் சொந்த மருத்துவமனை வைத்திருப்பவர்கள் மிக சொற்பமே. இதில் சுமார் 5000 பேர் தனியாக கிளினிக் கூட வைக்க வில்லை
எனவே சொந்த கிளினிக் நடத்த தடை வந்தால் இந்த 7000 பேரில் ராஜினாமா செய்பவர்கள் 500 கூட இருக்காது. இதற்கு முதல் இருக்கும் 6000 பேரில் 500 பேர்கள் தொடர்வது சந்தேகமே
-oOo-
அரசு மருத்துவர்களின் Private Practice தடை செய்யப்படுவதான் என்ன நடக்கும்
1. சிறப்பு மருத்துவர்களில் 90 சதம் ராஜினாமா செய்வார்கள்
2. மூத்த மருத்துவர்களில் 90 சதம் ராஜினாமா செய்வார்கள்
3. மாநில அரசு மருத்துவகளின் ஊதியத்தை உயர்த்த வேண்டிய நிலை ஏற்படலாம். (தற்சமயம் அரசு கலைக்கல்லூரி, அரசு பொறியியல் கல்லூரி பேராசிரியர்களை விட அரசு மருத்துவ கல்லூரி பேராசிரியர்களின் ஊதியம் குறைவு என்பது உங்களுக்கு தெரியுமா ??)
-oOo-
அரசு மருத்துவர்களின் Private Practice தடை செய்யப்பட்டால் யாருக்கு சாதகம்
1. MBBS மருத்துவர்களுக்கு சாதகம் – அதிகம் ஊதியம் பெறலாம்
2. கடந்த பதினைந்து ஆண்டுகளாக பணியில் சேர்ந்திருப்பவர்களுக்கு சாதகம். மூத்த மருத்துவர்கள் ராஜினாமா செய்தால் பதவி உயர்வு சீக்கிரம் வரும்
-oOo-
அரசு மருத்துவர்களின் Private Practice தடை செய்யப்பட்டால் பொது மக்களுக்கு சாதகமா, பாதகமா என்று நீங்கள் கூறுங்களேன்
Sammy_i 5:17 pm on February 20, 2010 Permalink |
முதலில் இந்த தடை கொண்டுவருவதற்கான காரணத்தை நீங்கள் எழுத வில்லை என்று நினைக்கிறேன்……..Private Practice வைத்துள்ள அரசு மருத்துவர்கள், அதற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதால் சில(பல) சமயங்களில் அரசு மருத்துவமனையில் சரியாக வேலை பார்க்காமல் இருப்பதாக குற்றச்சாட்டுகள்.
தடை செய்தால் இந்த பிரச்சினை தீருமா ? அதற்கு பதில் தெரியலை.
//அரசு மருத்துவர்களின் Private Practice தடை செய்யப்பட்டால் பொது மக்களுக்கு சாதகமா, பாதகமா என்று நீங்கள் கூறுங்களேன்//
அரசு மருத்துவமனை மட்டுமே நம்பி இருப்பவர்களுக்கு, சிறப்பு மருத்துவர்கள் ராஜினாமாவால் பிரச்சினை வரலாம்.
நடு தர வர்க்கம் அதிகமாக போகும் மருத்துவமனைகள் (ஒற்றை ரூம் மருத்துவமனை) இந்த தடையால் மூட பட்டிருக்கலாம்.
பணக்கார வர்க்கத்திற்கு வழக்கம் போல பிரச்சினை இல்லை…. ( அபோல்லோ, மணிபால் செல்லுபவர்கள்.)
சாம்
புருனோ 7:19 pm on February 21, 2010 Permalink |
//முதலில் இந்த தடை கொண்டுவருவதற்கான காரணத்தை நீங்கள் எழுத வில்லை என்று நினைக்கிறேன்…….//
எனக்கு சரியாக தெரியவில்லை
அது தான் எழுதவில்லை.
புருனோ 7:19 pm on February 21, 2010 Permalink |
//Private Practice வைத்துள்ள அரசு மருத்துவர்கள், அதற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதால் சில(பல) சமயங்களில் அரசு மருத்துவமனையில் சரியாக வேலை பார்க்காமல் இருப்பதாக குற்றச்சாட்டுகள்.//
ஆதாரமில்லாத
காழ்ப்புணர்ச்சி காரணமாக வைக்கப்படும்
கற்பனைக்குற்றச்சாட்டு என்பது என் கருத்து
ரவி 11:38 pm on February 21, 2010 Permalink |
ஆதாரமில்லை என்று சொல்ல முடியாது. எங்கள் பக்கத்து ஊரிலேயே நடக்கிறது. ஒரே ஒரு மருத்துவமனையில் ஒரே ஒரு மருத்துவர் (இவர் இளங்கலை மருத்துவர் தான்) இப்படி நடந்தால் கூட அதனைத் தடுப்பதற்கான உங்கள் ஆலோசனை என்ன?
புருனோ 11:40 pm on February 21, 2010 Permalink |
அவர் பணிநேரத்தில் தனது சொந்த கிளினிக்கிற்கு சென்றால் தான் அது தவறு
பணியல்லாத நேரங்களில் அவர் சொந்த கிளினிக் செல்வதால் அரசு மருத்துவமனைக்கு என்ன நஷ்டம் என்று நினைக்கிறீர்கள்
ரவி 11:53 pm on February 21, 2010 Permalink
பணிநேரத்தில் மருத்துவமனையில் இல்லாமல் அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளை தனது மருத்துவமனைக்கு வந்து பார்க்கச் சொல்கிறார். என்ன செய்யலாம்?
biometric அளவு எல்லாம் போக வேண்டாமே? தற்போதைய நிலையில் எப்படி ஆதாரத்தை நிறுவுவது? இலஞ்ச ஒழிப்புத் துறை மாதிரி யாராவது அலுவலரைக் கூட்டி வந்து வேலை நேரத்தில் தனது மருத்துவமனையில் இருக்கிறார் என்று கையும் களவுமாக காட்டலாமா?
புருனோ 11:56 pm on February 21, 2010 Permalink
அந்த மருத்துவரின் வேலை நேரம் என்ன ???
புருனோ 11:56 pm on February 21, 2010 Permalink
அவர் தனது கிளினிக்கில் இருக்கும் நேரம் அவரது வார ஓய்வு, அல்லது பணிக்கு-பின் – ஓய்வு இல்லை என்று எப்படி கூறுகிறீர்கள்
புருனோ 11:56 pm on February 21, 2010 Permalink
ஆரம்ப சுகாதார நிலையமா அல்லது அரசு பொது மருத்துவமனையா
ரவி 12:41 am on February 22, 2010 Permalink
ஆரம்ப சுகாதார நிலையம். புருனோ, நீங்கள் சொல்ல வருவது புரிகிறது.
தமிழ்நாட்டில் ஒரு மருத்துவர் கூட வேலை நேரத்தில் தனது மருத்துவமனையில் பணி பார்ப்பதில்லையா? அப்படிப் பார்த்தால் அதற்கு எதிராக பொதுமக்கள் எடுக்கக்கூடிய நடவடிக்கை என்ன? மிகச் சிறிய எண்ணிக்கையிலான மருத்துவர்கள் இப்படி முறை தவறினாலும் அதற்கு எதிராகத் துறை அளவில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் என்ன?
புருனோ 12:47 am on February 22, 2010 Permalink
//தமிழ்நாட்டில் ஒரு மருத்துவர் கூட வேலை நேரத்தில் தனது மருத்துவமனையில் பணி பார்ப்பதில்லையா?//
இல்லை
பார்க்கும் மருத்துவர்கள் இருக்கிறார்கள்
// அப்படிப் பார்த்தால் அதற்கு எதிராக பொதுமக்கள் எடுக்கக்கூடிய நடவடிக்கை என்ன? //
இந்த மருத்துவர்
இந்த நேரத்தில்
இந்த முகவரியில் இருக்கிறார்
என்று எழுதி புகார் அனுப்ப வேண்டும்
ஆரம்ப சுகாதார நிலையம் என்றால்
துனை இயக்குனர் (சுகாதார பணிகள்)
அரசு மருத்துவமனை என்றால்
இணை இயக்குனர் மருத்துவ பணிகள்
எந்த நிலையம், மாவட்டம் என்று சொன்னால் அந்த குறிப்பிட்ட துனை இயக்குனர் / இணை இயக்குனர் முகவரி / தொலைபேசி எண் தருகிறேன்
புருனோ 12:51 am on February 22, 2010 Permalink
இயக்குனர் அலுவலக முகவரி
ஆரம்ப சுகாதார நிலையம் என்றால்
பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவ துறை இயக்குனர்
359, அண்ணா சாலை, தேனாம்பேட்டை
சென்னை
அரசு மருத்துவமனை என்றால்
மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குனர்
359, அண்ணா சாலை, தேனாம்பேட்டை
சென்னை
புருனோ 11:41 pm on February 21, 2010 Permalink |
உயிரளவு வருகைப்பதிவேடு முறையை அறிமுகப்படுத்த வேண்டும். (பயோமெட்ரிக் அட்டண்டன்ஸ்)
புருனோ 7:20 pm on February 21, 2010 Permalink |
//தடை செய்தால் இந்த பிரச்சினை தீருமா ? அதற்கு பதில் தெரியலை.//
பிறகு ஏன் தடை செய்ய வேண்டும்
Sammy_I 10:11 pm on February 21, 2010 Permalink |
எனக்கு துறை பற்றி சரியான அறிவு இல்லை ப்ருனோ……நீங்கள் உங்கள் கருத்தில் எங்கயுமே இந்த தடை வருவதற்கான விளக்கம் கொடுக்காதது ….
“studying disease without knowing the symptoms/cause” மாதிரி எனக்கு தோணுது.
புருனோ 7:23 pm on February 21, 2010 Permalink |
//அரசு மருத்துவமனை மட்டுமே நம்பி இருப்பவர்களுக்கு, சிறப்பு மருத்துவர்கள் ராஜினாமாவால் பிரச்சினை வரலாம்.
நடு தர வர்க்கம் அதிகமாக போகும் மருத்துவமனைகள் (ஒற்றை ரூம் மருத்துவமனை) இந்த தடையால் மூட பட்டிருக்கலாம்.
பணக்கார வர்க்கத்திற்கு வழக்கம் போல பிரச்சினை இல்லை…. ( அபோல்லோ, மணிபால் செல்லுபவர்கள்.)//
ஆக
அரசு மருத்துவர்களின் Private Practice தடை செய்யப்பட்டால் பொது மக்களுக்கு சாதகமா, பாதகமா
என்ற கேள்விக்கு உங்கள் விடை என்ன
Sammy_I 10:04 pm on February 21, 2010 Permalink |
பாதகம் யுவர் ஹானர் !!!!!!!!!!!
சாம்
ரவி 6:31 pm on February 20, 2010 Permalink |
வழக்கம் போல் உங்கள் பாணியில் நல்ல அலசல். தெளிவுபடுத்தியதற்கு நன்றி.
ஜோ 7:01 pm on February 20, 2010 Permalink |
ஆகா .பல புதிய தகவல்கள் .எதிர்பாராததும் கூட .Private practice-யை தடை செய்வது பொதுமருத்துமனை செல்லும் பொது மக்களுக்கு நல்லது என எல்லோருக்கும் நினைத்திருக்க ,நீங்க வேறொரு கோணத்தில் குண்டை தூக்கி போடுகிறீர்கள் .நீங்கள் சொல்வது படி பார்த்தால் தடை வந்தால் பெரும்பாலான அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள் விலகி விடுவார்கள் ,என்றால் பாதிக்கப்படப் போகிறவர்கள் பொது மருத்துவமனையை நாடும் நோயாளிகள் தான் போலிருக்கிறது .
சரி ,இதற்கு உங்கள் பரிந்துரை தான் என்ன?
புருனோ 7:30 pm on February 21, 2010 Permalink |
// சரி ,இதற்கு உங்கள் பரிந்துரை தான் என்ன? //
இதய மாற்று அறுவை சிகிச்சை இந்தியாவில் உள்ள மாநில அரசு மருத்துவமனைகளில் தமிழக அரசு மருத்துவமனையில் மட்டும் தான் நடந்து உள்ளது
கல்லீரம் மாற்று அறுவை சிகிச்சை இந்தியாவில் உள்ள மாநில அரசு மருத்துவமனைகளில் தமிழக அரசு மருத்துவமனையில் மட்டும் தான் நடந்து உள்ளது
ஆரம்ப சுகாதார நிலையங்களில் கூட சிசேரியன் நடப்பது தமிழகத்தில் தான்
இதற்கு காரணம் இங்கு அதிகம் சிறப்பு மருத்துவர்கள் அரசு பணியில் இருப்பது தான்
அதிகம் சிறப்பு மருத்துவர்கள் அரசு பணியில் இருப்பதற்கு காரணம் தனியாக பிராக்டீஸ் செய்ய அனுமதி இருப்பது தான்
புருனோ 9:41 pm on February 21, 2010 Permalink |
பிரைவைட் பிராக்டிசை தடை செய்தால், தொடர்ந்து பணியில் இருக்கும் புதிய மருத்துவர்களுக்கு என்ன லாபம்
1. அதிக ஊதியம்
2. குறைந்த வேலை – சிறப்பு சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை குறைவதால்
புருனோ 6:02 am on May 1, 2012 Permalink |
https://www.facebook.com/TargetPG/posts/425246870820738 பார்க்கவும்