One of the Sensible Comments !!!

பொறுப்பான மறுமொழி எழுதுவது எப்படி

http://jyovramsundar.blogspot.com/2009/10/blog-post_09.html?showComment=1255188601501#c7112350200491718929

நன்றி சங்கரபாண்டி சார்

வழக்கமாகப் பதிவர்களுக்கிடையேயான பிரச்னைகளைப் பற்றி நேரமின்மையால் நான் வாசிப்பது கூட இல்லை. பதிவுகளைப் படிக்க ஆரம்பித்த காலத்தில், மிகக்குறைந்த பதிவுகளே இருந்த அன்றைய சூழலில் இதுபோன்ற சர்ச்சைகளில் நானே ஒருமுறை சிக்கியிருக்கிறேன். பதிவுலகத்தைப் பற்றிய என்னுடைய அன்றைய முதிர்ச்சியின்மையும் கூட அதற்கு ஒரு காரணம். ஆனால் விரைவிலேயே நம்மைப் பற்றிக் கூட என்னத்தையும் எழுதிவிட்டுப் போகட்டும் என்று கடக்க ஆரம்பித்து விட்டேன்.

ஆனால் ரோசா வசந்தின் நடிப்பில்லாத எழுத்துக்களைத் தொடர்ந்து படிப்பவன் என்ற முறையிலும், அவரை இரண்டு முறைகள் நேரில் சந்தித்தவன் என்ற முறையிலும் இது குறித்து கருத்தெழுதத் தோன்றியது.

ரோசா வசந்த் திடுதிப்பென்று கொஞ்சம் அளவுக்கதிகமாக கோபம் கொண்டு விவாதங்களில் நடந்து கொள்வார். இரவி ஸ்ரீநிவாஸ், சுரேஷ் கண்ணன் போன்றவர்களிடம் தொடர்ந்து சில நேரங்களில் கோபப் படுவதைக் கண்டிருக்கிறேன் (அவர்கள் எழுதுவது சில நேரங்களில் எரிச்சல் உண்டு பண்ணுவதைத் தவிர்க்க முடியாதென்றாலும் கூட). ஆனாலும் ரோசா இப்படி வன்முறையாக நடந்து கொண்டார் என்பதை நினைத்துக் கொஞ்சம் அதிர்ச்சியாகக் கூட இருக்கிறது. இது மிகக் கண்டிக்கத்தக்கது என்பதில் மாற்றுக் கருத்திருக்க முடியாது. உங்களுக்கு ஏற்பட்ட வலியும், தனிப்பட்ட வேதனையும் நிச்சயம் அனுபவித்தால்தான் தெரியும்.

ஆனால் இந்தப் பதிவும் பின்னூட்டங்களும் கொஞ்சம் அதிகப்படியாக சென்று ரோசா வசந்தை மிக மோசமான முறையில் பதிவுலகத்தின் வில்லனாக சித்தரித்து அவரை இத்துடன் வாயடைத்து விடத் துடிக்கிறதாகத் தெரிகிறது. இதற்குப் பதிலாக காவல்துறையிடம் உண்மையைச் சொல்லி அவரைப் பிடித்துக் கொடுத்திருக்கலாம்.

தவறு செய்வது மனித இயல்பு. அவ்ருடைய அளவு கடந்த ஆத்திரப்படும் குணத்தால் இந்தத் தவறைச் செய்து விட்டார். அவருடைய முட்டாள்தனத்தை ஒரு நிமிடத்திலேயே உணர்ந்து/வேதனைப்பட்டு உங்களுக்கு என்னென்ன உதவிகள் செய்ய முடியுமா அதைச் செய்ய முயற்சித்திருக்கிறார். இந்த நிகழ்ச்சியை வெறுமனே ஒரு செய்தியாகச் சொல்லி அவர் ஆத்திரத்தில் செய்த வன்முறையை மன்னிக்கிறேன் என்று விட்டிருக்கலாம். மற்றவர்களும் ரோசாவசந்த் இப்படி ஏடாகூடமாக கோபப்படுபவர் என்று புரிந்து கொள்வார்கள்.

அவரைப் பற்றி நீங்கள் எழுதிய முந்தைய தனிப்பட்ட தாக்குதல் பதிவு இந்தக் கோபத்துக்குக் காரணமாக அமைந்திருக்கும் என்று நினைக்கிறேன். ரோசா வசந்த் கோபத்தைக் கட்டுப் படுத்த சில மனப்பயிற்சிகளை எடுத்துக் கொள்வது நல்லது. விவாதமென்று வரும்பொழுது தனிப்பட்ட தாக்குதல்களும் நிகழக் கூடிய வாய்ப்புண்டு. அதற்காக இப்படிக் கோபப்பட்டு அடி உதை என்று நடந்து கொள்வது நீங்கள் சொல்லவரும் எத்தனையோ நேர்மையான கருத்துக்களை நீர்த்துப் போகச் செய்யும். அதை இந்தப் பதிவும் சில பின்னூட்டங்களும் சிறப்பாகச் செய்கின்றன.

இந்த ஒரு பின்னூட்டம்தான் இது தொடர்பாக நான் எழுதும் ஒரே பின்னூட்டம். என்மேல் வன்மம் கொண்ட சில அனானிகள் நான் எழுதியதாக வேறு எங்காவது எழுதக் கூடும் என்பதால் இந்தக் குறிப்பு.

நன்றி – சொ.சங்கரபாண்டி

Related posts