- சமீபத்தில் ஒரு பெண் இயக்குனர் கேட்டதினால் “ஆன் லைனில் “ஒரு திரைக்கதை எழுதி முடித்தேன். பிளீஸ். பிளீஸ் என்று தொலைபேசியிலேயே தொடர்ந்துக் கேட்டு கொண்டிருந்தார்
- —————-
- ” முதல் மரியாதை” படம் எனது ” கவுண்டர் கிளப் ” குறுநாவலன் மையத்தை ஒத்திருந்தது
- —————–
- கோவையில் ஒரு விழாவிற்கு வந்த நடிகை ரேவதியிடம் அந்த ஒளிப்பதிவாளர் என்னை அறிமுகப்படுத்திய போது பட்டு திரைக்கதையை எழுதியவன் என்றார் .ரேவதியும் அதை எடுக்கலாமே. எனக்கு தாருங்கள் என்றார். ஒளிப்பதிவாளர் அதை தான் தொடரப்போவதாக சொன்னார்.
- —————
- சென்ற டிசம்பரில் திருவனந்தபுரத்திற்கு சென்ற போது காஞ்சீவரம் திரையிடல் இருப்பது திகில் அனுபவமாக இருந்தது.திரையிடப்பட்ட அன்று பார்த்தேன். அதிர்ச்சியாக இருந்தது….. நான் எழுதிய திரைக்கதை பலரிடம் பரிசீலனைக்காக சென்றதை ஒளிப்பதிவாளர் சொன்னது ஞாபகம் வந்தது.
Source: http://rpsubrabharathimanian.blogspot.com/
நாலு வரி, காப்பி பேசுட் பண்ணிய எனக்கே “Source” என்று தொடுப்பு வைக்க தோன்றும் போது, இப்படி ஒரு நாவலையே அடித்து பணம், புகழ் சம்பாதிப்பவர்களுக்கு மூலக்கதை படைத்தவருக்கு ஒரு நன்றி சொல்ல கூடவா முடியவில்லை?
ரவி 1:19 pm on September 18, 2009 Permalink |
ஒரு வேளை தமிழ் இயக்குநர்கள் கதையும் தங்கள் சொந்த சரக்குன்னு சொல்லி பெருமை பட நினைக்கிறாங்களோ? (விதிவிலக்குகளும் உண்டு: பாரதிராசா, மகேந்திரன், K.V. Anand) கதை, திரைக்கதை, வசனம்னு நீட்டி முழக்காமல் இயக்குநர் இயக்கத்தை மட்டும் பார்த்தால் நிலைமை மாறலாம்.
தவிர, அறிவுரிமை தொடர்பான சட்டங்கள் கடுமையாக இல்லாமல் இருப்பதும் ஒரு காரணம். சிங்கப்பூரில் நன்யாங் பல்கலையில் படித்த போது ஒரு புத்தகத்தைக் கூட முழுமையாக xerox எடுத்து தர மாட்டார்கள். ஒரு புத்தகத்தில் இருந்து ஒரு சில பக்கங்கள் மட்டும் தான் xerox எடுத்து கொடுக்கலாம் என்ற அளவுக்கு பதிப்புரிமை விதிகள் மிக கடுமையாகப் பின்பற்றப்பட்டன. நம்ம ஊரிலோ பல்கலை நூலகத்திலேயே முழுப்புத்தக்கதையும் xerox எடுத்து வைத்திருப்பார்கள்
அறவியல் நோக்கில் பார்த்தால் நாம் எத்தனை பேர் நல்லவர்கள்? திருட்டு VCD பார்ப்பது, சாலையோர மலிவு விலை கடையில் புத்தகம் வாங்குவது எல்லாம் ஒரு வகையில் படைப்பாளிக்கு உவப்பாக இருக்காது தானே?
புருனோ 7:38 pm on September 19, 2009 Permalink |
சாலையோர மலிவுக்கடையில் புத்தகம் வாங்கும் அளவு அந்த அசல் புத்தகத்தில் விலை இருப்பது ஏன் ??
உதாரணமாக சாலையோரக்கடையில் 100 ரூபாய்க்கு கிடைக்கும் புத்தகம் பதிப்பகத்தால் 150 ரூபாய் என்று விற்கப்பட்டால் யாரும் சாலையோரக்கடையுல் வாங்கப்போவதில்லையே….
அசல் புத்தகம் 500, சாலையோரக்கடையில் 100 என்று வருவதால் தானே இங்கு விற்பனை கொடி கட்டி பறக்கிறது
ரவி 8:48 am on September 22, 2009 Permalink |
உண்மை தான். இந்த விசயத்தில் http://www.moserbaerhomevideo.com/ நிறுவனத்தின் விற்பனை அணுகுமுறை நல்லா இருக்கு.