ஒரு பயணம்
கடந்த வாரம் வட கர்நாடகாவின் பல இடங்களுக்கு சென்றுவந்தேன். வனமும், மலையும், கடலும் நிறைந்த பகுதி அது. ஜோக் அருவியின் கம்பீரமான அழகு ஒரு பக்கம், ஹொரநாடு மற்றும் சிருங்கேரி காடுகள் தரும் பயம் கலந்த கிளர்ச்சி ஒரு பக்கம், ஆர்ப்பாட்டமில்லாத முருடெஸ்வர் கடல், எவ்வளவு முறைச்சென்றாலும் இளமை குறையாமல் ஈர்க்கும் பேலூர்-ஹளபீடு சிற்பங்கள் என்று மூன்று நாட்கள் அருமையாக கடந்தது.
ரவி 6:46 am on August 11, 2009 Permalink |
வெளிநாட்டுக்குப் போய் அடிச்சுப் பிடிச்சு இடங்கள் பார்த்தாலும், உள்நாட்டில் உருப்படியா சுற்றுலா போகத் தோண மாட்டேங்குது
குறைந்தபட்சம் தென்னிந்தியாவையாவது ஒரு சுற்று வரணும்.