கர்நாடக மேதைகள்ளால இசை இயற்ற முடியுமா?
எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம். இந்த கர்நாடக சங்கீதம் படிச்சுகினு, ஏதோ இசை எங்களால தான் வாழுதுங்குறாங்களே, அவங்களுக்கு இசை உருவாக்கத் தெரியுமா? இல்ல மத்தவங்க போட்டு தரத பாட மட்டும் தான் தெரியுமா? எனக்கு தெரிஞ்ச வர, எந்த இசையமைப்பாளரும் இந்த பிண்ணணியிலிருந்து வர்ரதில்ல. அப்பறம் எதுக்கு இப்படி அலப்பர பண்ராங்கன்னு தெர்ரல!!!
அப்பறம், இந்த ஆலாபனை பண்ராங்களே, இது இவங்க உருவாக்குனதா? இல்ல, அதுவும் மத்தவங்க போட்டு வச்சதுதானா?
ரவி 11:11 am on July 14, 2009 Permalink |
//எந்த இசையமைப்பாளரும் இந்த பிண்ணணியிலிருந்து வர்ரதில்ல//
குன்னக்குடி வைத்தியனாதன், L. subramaniam போன்றவர்கள் (திரைப்பட) இசையமைப்பாளர்களாகவும் இருந்திருக்கிறார்கள். இந்துசுத்தானி போன்ற எல்லா மரபார்ந்த இசையைக் கற்றவர்களிலும் கண்டிப்பாக இசையமைப்பாளர்கள் இருந்திருக்கிறார்கள். ஆனால், ஏன் ஒரு இசையமைப்பாளராக வெற்றி பெறவில்லை என்பதற்கு பல காரணங்கள் இருக்கலாம் தானே? கீர்த்தனைகளையும் தியாகராசர் போல யாராவது ஒருவர் தானே முதலில் இயற்றி இருக்க வேண்டும்?
பாடுவதும் ஒரு திறமை தானே? போட்டு வைத்ததை எல்லாரும் இலகுவாகப் பாடலாம் என்றால், எல்லாரும் பாடகர்களாகி விட மாட்டார்களா? போட்டு வைத்த இசையைப் பாடுறதுன்னாலும் அதிலும் தனித்துவம், நுணுக்கம் காட்டினா தான் நிலைக்கலாம்னு நினைக்கிறேன். எனக்குத் தெரியாது. ஆனா, அப்படி ஏதாச்சும் இருக்கணும
மணிகண்டன் 2:57 pm on July 14, 2009 Permalink |
இசைஅமைப்பாளர் அப்படின்னா சினிமாவுக்கு இசை அமைக்கனுமா ?
-
yemkay 11:03 am on July 19, 2009 Permalink |
//பாடுவதும் ஒரு திறமை தானே
ஆம். ஆனால், அதை ஒரு உருவாக்கும் திறனாக என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. I’d call it as ”performance”. ஆனால், நாம் performance-க்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை creativity-க்கு கொடுப்பதில்லை. எப்படி ஒரு நடிகனுக்கு, இயக்குனரை விட அதிக முக்கியத்துவம் தருகிறோமோ, அத போல தான் ஒரு இசையமைப்பாளர விட, பாட்ட பாடுறவங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்குறோம்.
சினிமாவில் மட்டுமல்ல, பல இடங்களில் creativity-ஐ தவிர்த்து performance-க்கு முன்னுரிமை கொடுப்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தமிழர்களின் பலமே உருவாக்கும் திறன் மற்றும் கடும் உழைப்பில் தான் அடங்கி இருகிறது. ஆனால் இன்றைய சூழலில், செயல் திறன் (performance) எனும் மோகத்தில் தான் பெரும்பாலோனரின் நாட்டமே.
சில உதாரணங்கள்,
abacus training:
ஒரு கணக்கை விரைவாக தீர்க்கும் வித்தையா நம் குழந்தைகளுக்கு தேவை? பாட புத்தகத்தில் இல்லாத வேறொரு கணக்கை கொடுத்தால், அதையும் தீர்க்கும் அறிவைதான நாம அவர்களுக்கு கொடுக்கணும்? விரைவாக தீர்க்கத் தான் கணிணி இருக்கிறதே, கணிணியால் முடியாத சுயமாக சிந்திக்கும் திறன் தான நம் குழந்தைகளுக்கு தேவை?
திருக்குறள் ஒப்பிப்பு, spelling bee:
1000 குறள் சொல்லும் Tape Recorder புத்தி தேவையா, இல்ல கவிதை, கட்டுரை, கதை சொந்தமாக வரையும் ஆற்றல் தேவையா, என்பதை நாம சிந்திக்கணும்
என்னுடைய முதல் கேள்வியும், இது மாதிரியான ஒரு கோபத்தின் வெளிப்பாடு தான். யாரையும் புண்படுத்த சொல்லவில்லை.
ரவி 7:45 am on July 20, 2009 Permalink |
//ஒரு இசையமைப்பாளர விட, பாட்ட பாடுறவங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்குறோம்.//
இதில் தெளிவில்லை. மரபார்ந்த இசைத்துறையிலும் பாடகர்களுக்கு உள்ள மதிப்புக்கும் கூடுதலாக இசைக்கருவிகளை இசைக்கும் கலைஞர்களுக்கும் மதிப்பு உண்டுன்னு தான் நினைக்கிறேன்.
//பல இடங்களில் creativity-ஐ தவிர்த்து performance-க்கு முன்னுரிமை கொடுப்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை//
//விரைவாக தீர்க்கத் தான் கணிணி இருக்கிறதே, கணிணியால் முடியாத சுயமாக சிந்திக்கும் திறன் தான நம் குழந்தைகளுக்கு தேவை? //
//1000 குறள் சொல்லும் Tape Recorder புத்தி தேவையா, இல்ல கவிதை, கட்டுரை, கதை சொந்தமாக வரையும் ஆற்றல் தேவையா, என்பதை நாம சிந்திக்கணும்//
ஒப்புக் கொள்கிறேன். முதல்லயே இப்படி தெளிவா சொல்லி இருக்கலாம்ல
கார்த்திக் 10:28 am on July 20, 2009 Permalink |
//ஒப்புக் கொள்கிறேன். முதல்லயே இப்படி தெளிவா சொல்லி இருக்கலாம்ல
ஏதோ உளறிட்டேன்
sri 7:45 am on July 24, 2009 Permalink |
dei karnadaga sangeetham pathi unkku pesa arugatha illada naaye
புருனோ 9:08 am on July 24, 2009 Permalink |
தங்களின் மேலான கருத்திற்கு பணிவான வணக்கங்கள் நண்பரே
ஓவியன் 11:20 pm on September 1, 2009 Permalink |
ரவி. நான் சொல்லல? கார்த்திக் தெளிவா சொன்ன புரிஞ்சுக்குவார்னு