இன்று மதியம் அலுவலக நேரத்தில் செல்லிடப்ப…

இன்று மதியம் அலுவலக நேரத்தில் செல்லிடப்பேசியில் ஒரு அழைப்பு

நான் : வணக்கம் சொல்லுங்க

அழைத்தவர் : சார் இந்த மொபைல்ல தமிழ் எப்படி படிக்கிறதுன்ங் சொல்லுங்க

நான் : நீங்க ஒரு மெயில் அனுப்புங்க, நான் விரிவா பதிலனுப்புறேன்

அழைத்தவர் : இல்ல சொல்லுங்க

நான் : இல்ல சார், இப்ப வேலைல இருக்கேன். இது கொஞ்சம் தெளிவா பேச வேண்டிய விஷ்யம். அதான் மெயில் அனுப்ப சொல்றேன்

அழைத்தவர் : பரவால்ல சார் இப்பவே சொல்லுங்க

நான் : நீங்க மெயில் அனுப்புங்க

அழைத்தவர் : நான் அனுப்பினேன் சார், ஆனா பதில் வரல

நான் : இன்னைக்கு காலைல வர பாத்தேன் மெயில் வரலயே

அழைத்தவர் : அதான் சார் நீங்க பதில் அனுப்ப மாட்டீங்க

நான் : ????

அழைத்தவர் : அதான் இப்பவே சொல்லுங்கன்னு சொல்றேன்

நான் : இல்லை நீங்க திரும்ப அனுப்புங்க

அழைத்தவர் : அப்படியா, அப்ப இப்ப சொல்ல மாட்டீங்களா

நான் : இல்லை, நீங்க மெயில் அனுப்புங்க

அழைத்தவர் :எனக்கு மெயில் எல்லாம் அனுப்ப தெரியாது

நான் : நேத்து அனுப்புனீங்களே

அழைத்தவர் : அது நான் இல்லை. வேற ஒருத்தர் அனுப்பினார்

நான் :சரி, அவரையே திரும்ப அனுப்ப சொல்லுங்க

அழைத்தவர் : உங்க அட்ரஸ் என்ன

நான் :அது தான் நேத்து அனுப்புனீங்களே

அழைத்தவர் :? ?

நான் :அதே அட்ரஸ் தான் சார்

அழைத்தவர் :அத எங்கேயோ வச்சிட்டேன்

நான் :பரவாயில்லை sent items சென்று பார்த்தால் இருக்கும். திரும்ப அனுப்புறீங்க

அழைத்தவர் :என்னவோ சார். தமிழ் எப்படி படிக்கிறதுன்னு கேட்டா இவ்வளவு குறுக்கு விசாரனை பண்ணுறீங்க. வெறுப்பா இருக்கு சார்

நான் :பரவாயில்லை சார். நீங்க அனுப்புங்க, நான் பதில் அனுப்புறேன்

அழைத்தவர் :அப்ப நீங்க போன்ல எதுவுமே பதில் சொல்ல மாட்டீங்களா

நான் :சின்ன சந்தேகமுன்னா சொல்லலாம். நீங்க கேட்டது படத்தோட சொன்னாத்தான் புரியும். மெயில் பாத்துட்டு சந்தேகம் இருந்தா கேளுங்க சொல்றேன்

அழைத்தவர் : சரி சார், வேற யாராவது போன்லேயே பதில் சொல்வாங்களா. நம்பர் இருந்தா கொடுங்க

நான் : ???? இப்ப இல்லை. பெறகு தாரேன்

யாருடைய அலைபேசி எண்ணை தரலாம் என்று சட்டென்று தோன்றவில்லை :) :) :) :)

ஒரு வேளை அவர் “சார் எனக்கு வாசிச்சா புரியல” என்று கேட்டிருந்தாலோ அல்லது இணைய இணைப்பு இல்லை. மொபைல் மட்டும் தான் இருக்கு என்று கூறியிருந்தாலோ கண்டிப்பாக அவருக்கு நேரம் செலவழித்து விளக்கியிருப்பேன்

சுகாதாரம் , உடல் நலம் குறித்து சந்தேகம் கேட்கும் பலர் “நான் ஒழுங்கா மெயில் செக் பண்ண மாட்டேன்” என்று கூறியுள்ளார்கள் அவர்கள் யாரென்று தெரியாவிட்டால் கூட அவர்களுக்கு நீண்ட நேரம் தொலைபேசியில் விளக்கியுள்ளேன்

ஆனால் இது போன்ற நேர்மை குறைவான நபர்களை பார்த்தால் எரிச்சல் தான் வருகிறது