மதங்கள் பேசுமா ?
சமீபத்தில் பலரிடம் பேசியபோது அவர்கள் கூற கேட்டது. இந்துமதம் என்ன சொல்லி இருக்குனா, இஸ்லாம் என்ன சொல்லி இருக்குனா, கிறிஸ்துவம் என்ன சொல்லி இருக்குனா,
அது ஏன் என்கிட்ட மட்டும் எந்த மதமும் நேரடியா பேசமாட்டேங்குது
சமீபத்தில் பலரிடம் பேசியபோது அவர்கள் கூற கேட்டது. இந்துமதம் என்ன சொல்லி இருக்குனா, இஸ்லாம் என்ன சொல்லி இருக்குனா, கிறிஸ்துவம் என்ன சொல்லி இருக்குனா,
அது ஏன் என்கிட்ட மட்டும் எந்த மதமும் நேரடியா பேசமாட்டேங்குது
ரவி 9:45 pm on May 3, 2009 Permalink |
குரான், விவிலியம் அடிப்படையில் சொன்னாங்கன்னா தப்பில்லை தானே? ஆனால், கீதை, வேதங்கள் அடிப்படையில் மட்டும் இந்து சமய மேற்கோள்கள் சொல்வது சரியாக இருக்காது. இந்து சமயம் என்பதே கட்டமைக்கப்பட்ட ஒன்று என்கிறார்கள்..
புருனோ 9:03 am on May 5, 2009 Permalink |
The Eye Does Not See What the Mind Does Not Know என்பது வில்லியம் ஆஸ்லரின் கூற்று.
மணிகண்டன் 1:30 pm on May 6, 2009 Permalink |
ரவி,
குரான் சொல்வது என்னவென்றால், கீதை சொல்வது என்னவென்றால், பைபிள் சொல்வது என்னவென்றால் – இதில் எனக்கு எந்த பிரச்னையும் கிடையாது. ஆனால் இதற்கும் கிருத்துவம் கூறுவது என்னவென்றால், இஸ்லாம் கூறுவது என்னவென்றால், இந்து மதம் கூறுவது என்னவென்றால் – மிக பெரிய வேறுபாடு இருக்கிறது என்பதே என் எண்ணம். மதம் என்பதை அதன் வேத புத்தகம், அதை பயன்படுத்திய விதம், பயன்படுத்தப்படும் விதம், அந்த மதத்தை சார்ந்த மனிதர்கள், அவர்களின் கொள்கைகள், செயல்பாடுகள் அனைத்தையும் பார்த்தே கூற முடியும் அல்லவா ?
புருனோ 10:38 pm on May 6, 2009 Permalink |
//ஆனால் இதற்கும் கிருத்துவம் கூறுவது என்னவென்றால், இஸ்லாம் கூறுவது என்னவென்றால், இந்து மதம் கூறுவது என்னவென்றால் – மிக பெரிய வேறுபாடு இருக்கிறது என்பதே என் எண்ணம்.//
இதை ரவி அழகாக விளக்கி விட்டார்.
ரவி 1:41 am on May 7, 2009 Permalink |
இசுலாமியர், கிறித்தவர்களுள் எவ்வளவு வேறுபாடு இருந்தாலும் பெரும்பான்மையினர்(?) விவிலியம் (பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு), குரானை அவர்கள் சமய நூல்களாக ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். இதனால், அச்சமயத்தினருக்காவது, அந்நூல்கள் கூறுவது அச்சமயங்கள் கூறுவதாக ஒப்புக் கொள்வதில் தயக்கம் இருக்காது.
//மதம் என்பதை அதன் வேத புத்தகம், அதை பயன்படுத்திய விதம், பயன்படுத்தப்படும் விதம், அந்த மதத்தை சார்ந்த மனிதர்கள், அவர்களின் கொள்கைகள், செயல்பாடுகள் அனைத்தையும் பார்த்தே கூற முடியும் அல்லவா ?//
இப்படி இருந்தா நல்லா இருக்கும் தான். ஆனா, இப்படி இல்லையே (தசாவதார இறுதிக் காட்சியில் கமல் சொல்வது மாதிரி படிங்க
)
மணிகண்டன் 5:30 am on May 7, 2009 Permalink |
ok guys.
Anonymous 2:44 am on May 21, 2009 Permalink |