படித்தது http://agnipaar…

படித்தது http://agnipaarvai.blogspot.com/2009/05/blog-post_11.html

தன்மந்தர என்ற மளயால படம் பார்த்தேன் முடிந்தால் பாருங்கள் அதில் ஒரு காட்சி..

மோஹன்லால் ஒரு பெற்றொர்களுக்கான பயிற்ச்சி வகுப்பில் ஒரு கேள்வி கேட்பார். இங்கு வந்திருக்கும் அனைத்து ஆண்களும், கொஞ்சம் நேரம் செலவிட்டு சுற்றி பாருங்கள் இவர்களில் உங்கள் மனைவியைவிட அழகான பெண் யாரன்ரு சொல்லுங்கள் என சில நேரம் கொடுப்பார். சிறிது நேரம் கழித்து யாரும் சொல்ல முன் வராத நிலையில், கண்டிப்பாக உங்கள் மனையையைவிட அழகான ஒருவர் இருப்பார், அது உண்மை ஆனால் என் சொல்லவில்லை என்று கேட்பார். அதற்க்கு ஒருவர், என் மனைவி மனது கஷ்ட்டபடும் அதனால் சொல்லவிலை என்பார்.

அதற்க்கு மோஹன்லால், “இன்னொருவருடன் உங்கள் மனைவியை ஒப்பிட்டு பார்த்து சொன்னால் உங்கள் மனைவி மனது கஷ்ட்டபடும் என்பதை உணர்ந்த நீங்கல், இன்னொரு பிள்ளையுடன் உங்கள் பிள்ளையை ஒப்பிட்டால் உங்கள் பிள்ளை மனது எவ்வளவு கஷ்ட்டபடும் என்பதை ஏன் புரிந்துக்கொள்ள மாட்டென்கிறீர்கள்” என்பார்.சரிதான்

பிள்ளைகள் நம் மூலம் உலகத்திர்க்கு வருபவர்கள், அவர்கள் மீது நமக்கு எந்த உரிமையும் இல்லை அவர்க்களை ஒரு ஒழுக்கமான, பொறுபான மனிதனாக சமுதாயத்திடம் ஒப்படைப்பது நம் கடமை….