writerpara.com/paper/?p=708 இடு…
writerpara.com/paper/?p=708
இடுகையை முன்வைத்து:
.இருக்கிறாரா இல்லையா என்று தெரியாத கடவுளுக்கு உலகெங்கும் பல கோடி செலவில் கோயில்கள் கட்டும் போது, ஏன் ஒரு வாழும் மொழியை வளர்ப்பதற்காக கோயில் என்ற பெயரில் ஒரு இடத்தைக் கட்டக்கூடாது?
கோயில்களில் சமய நூல்களைக் கற்றுத் தருவதால் சமயத்தைப் பின்பற்றும் இளைய தலைமுறையினர் தலை தெறித்து ஓடிவிட்டார்களா என்ன?
தமிழ்க் கோயில் கட்டுவதற்கான ஒரு கோடி செலவை வேறு பயனுள்ள வழிகளில் செலவிட்டிருக்கலாம் தான். ஆனால், கோயில் கட்டுவதையே ஒரு குறையாகவும் அவர்களின் தமிழ் வளர்ப்பு முயற்சிகளை இழித்துக் கூறுவதும் சரியில்லை.
அன்புடன் பாலா 9:11 pm on May 25, 2009 Permalink |
நீங்கள் சொல்வதில் தவறு எதுவும் இல்லை, கோடிகள் செலவழித்து கோயில்கள் கட்டுவதை வைத்துப் பார்க்கும்போது….
சமீபத்தில் வேலூருக்கு அருகில் தங்கக் கோயில் ஒன்றை பல கோடி செலவு செய்து கட்டினார்கள். அந்தப் பணத்தை வைத்து ஏழைகளுக்கு உருப்படியாகயாக ஏதாவது செய்திருக்கலாம் தான்.
ulagam 9:16 pm on May 25, 2009 Permalink |
வழிமொழிகிறேன்.
ரவி 11:58 pm on May 25, 2009 Permalink |
http://twitter.com/tantricNinja/status/1921058238 முன்வைத்து:
//இல்லாதாதால் தான் கடவுளுக்கு கோயில்?!//
!! இது என்னங்க logic?!! இருக்கா இல்லையான்னு தெரியாத ஒன்னுக்கு எவ்வளவு வேணா செலவு செய்வாங்க. அதைப் பத்தி ஒரு விமர்சனமும் இருக்காது. ஆனா, இருக்கிற ஒன்னை வளர்க்க அவரவருக்குத் தெரிந்த வழியில் ஏதாவது செய்தால் அதற்கு ஏன் இந்த கேலியும் கிண்டலும்?
தமிழை வளர்க்க கோயில் தேவையில்லை (அதுவும் இவ்வளவு செலவில்) என்பது தான் என் கருத்தும். ஆனால், ஒருவர் கோயில் கட்டுவாரானால் அதில் எள்ளி நகையாட ஒன்றுமில்லை. கல்வி, நாடு, தொழில், ஆறு, மலை, கடல் ஆகியவற்றை கடவுளாக உருவகப்படுத்தி வழிபடும் போது ஏன் மொழியை வழிபடக்கூடாது? குறிப்பிட சில விசயங்கள் தான் புனிதப்படுத்த வேண்டும் என்று யார் விதித்தது?
இங்கு கோயில் என்பது கூட ஒரு குறியீடு தான். வெறுமனே கும்பிட்டுக் கொண்டிருக்காமல், தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்பிக்கும் வரை பாராட்ட வேண்டிய முயற்சி தான்.
பாலாஜி 1:47 am on May 26, 2009 Permalink |
அவர் எள்ளி நகையாடியதாக நினைக்கத் தேவையில்லை. சாதாரண பேச்சுக் கருவியான மொழியை இப்படி இறைவியாக்குவது (deification) மாணவர்களிடமிருந்து அன்னியப்படுத்தும் என்பது சரியான வாதமாகவே படுகிறது. வள்ளுவர் கோட்டத்தினாலும், வள்ளுவர் சிலையினாலும் சாதிக்கமுடியாததை பேருந்தில் எழுதப்படும் குறள்கள் எளிதாக சாதிக்கின்றன.
ரவி 2:42 am on May 26, 2009 Permalink |
//அவர் எள்ளி நகையாடியதாக நினைக்கத் தேவையில்லை. //
“சம்பந்தப்பட்ட அத்தனை பேரையும் சென்னை வெயிலில் இருபது கிலோமீட்டர் மூச்சிறைக்க ஓடவிட்டால் என்னவென்று தோன்றியது.”
மேல் காணும் வரி முதல் முழுக் கட்டுரையே எள்ளல் தான்
//இலக்கணம் படித்து யாப்பில் ஆப்படிக்க ஒரு புதுத் தலைமுறை வேண்டுமென்று யார் அழுதது?
இதுதான் எனக்குப் பெரிய தீவிரவாதமாகத் தோன்றுகிறது. //
மேல் காணும் வரிகள் தான் கட்டுரையின் உள்நோக்கம். தமிழ் இலக்கண, இலக்கிய கற்றலையே வீண் என்கிறார். (சொல்வது தமிழில் எழுதுவதையே முழுநேரப் பணியாக கொண்ட ஒரு எழுத்தாளர் என்பது ஒரு முரண்நகை !)
//வள்ளுவர் கோட்டத்தினாலும், வள்ளுவர் சிலையினாலும் சாதிக்கமுடியாததை பேருந்தில் எழுதப்படும் குறள்கள் எளிதாக சாதிக்கின்றன.//
ஒப்புக் கொள்கிறேன். ஆனால், இதைப் பண்பாட்டு, வரலாற்று, கட்டடக் கலை கூறுகள் அடிப்படையிலும் பார்க்க வேண்டும்.
வீட்டில் தான் சாமியறை இருக்கே, அப்புறம் கோயில் எதற்கு என்று கேட்கலாமா?
//சாதாரண பேச்சுக் கருவியான மொழியை இப்படி இறைவியாக்குவது (deification) மாணவர்களிடமிருந்து அன்னியப்படுத்தும் என்பது சரியான வாதமாகவே படுகிறது.//
அன்னியப்படுத்தும் என்பதற்கு எந்த அறிவடிப்படை ஆதாரமும் இல்லை. சாதாரண வாழும் இடமான இந்தியாவுக்கு ஒரு பாரதத் தாயை உருவாக்கி படம் வரைந்து மாலை போட்டு வழிபடுகிறார்களே..? இது இந்தியர்களை இந்தியாவிடம் இருந்து அன்னியப்படுத்திவிட்டதா?
கலை 5:34 am on May 26, 2009 Permalink |
நியாயமான வாதங்கள்.