தமிழ் புத்தாண்டு, கொல்லம் புத்தாண்டு, திருவள்ளுவர் புத்தாண்டு
சக ஆண்டு (இந்தியாவின் அதிகார பூர்வ நாள்காட்டியின்) முதல் நாள் – அதாவது இந்திய புத்தாண்டு என்று தெரியுமா
மார்ச் 22 (லீப் வருடங்களில் மார்ச் 21) !!! ஏப்ரல் 15 அல்ல !! (1956 முதல் இது தான் இந்திய புத்தாண்டு) இதை அறிமுகப்படுத்தப்பட்டது நேருவின் ஆட்சியில்.
தமிழர்களுக்கு எப்படி திருவள்ளுவர் ஆண்டின் முதல் நாள் புத்தாண்டோ அதே போல் தெலுங்கு பேசும் மக்களின் புத்தாண்டும் உகாதிதான். அது ஏப்ரல் 14 அல்ல (உகாதி ஏப்ரல் 3,4,5,6,7 வரலாம்)
இது தவிர ”இந்து புத்தாண்டு” என்று பாசகவினரால் அறிமுகப்படுத்தப்பட்டது. அது கூட ஏப்ரல் 14 கிடையாது.
http://www.rediff.com/news/mar/31cong.htm
Hindu new year’s day which is being observed on April 8 and 9.
http://www.rediff.com/news/apr/09flip.htm
The Hindu New Year’s Day fell on April 8 this year. The Bharatiya Janata Party celebrated appropriately.
ஆக பாரதிய ஜனதா கூட ஏப்ரல் 14லை கொண்டாத போது, ஏதோ ஏப்ரல் 14ஐ தமிழ் புத்தாண்டு என்று கூறாவிட்டால் தெய்வ குற்றம் வந்து விடும் என்று சில “அறிஞர்கள்” ஊடகங்களில் பரப்புவது கண்டு சிரிப்பதா, அழுவதா என்று தெரியவில்லை
இந்தியாவிற்கு தனி புத்தாண்டு இருக்கிறது
இந்து புத்தாண்டு என்று தனியாக இருக்கிறது
தெலுங்கு புத்தாண்டு என்று தனியாக இருக்கிறது
இவ்வளவும் இருக்கும் போது தமிழர்கள் திருவள்ளுவர் ஆண்டின் முதல் நாளை புத்தாண்டாக கொண்டாடினால் அது தவறு கொல்லம் ஆண்டு தான் முக்கியம் என்று கூறுகிறார்களே, ஏன் ????
சத்தியமாக புரியவில்லை.
தமிழிஷ் வாக்களிக்க இங்கு சுட்டவும்
சுப.நற்குணன் 3:26 am on January 15, 2009 Permalink |
//தமிழர்கள் திருவள்ளுவர் ஆண்டின் முதல் நாளை புத்தாண்டாக கொண்டாடினால் அது தவறு கொல்லம் ஆண்டு தான் முக்கியம் என்று கூறுகிறார்களே, ஏன் ????//
சரியான.. சூடான கேள்வி. தமிழ்ப் புத்தாண்டை மறுதளிப்பவர்கள் பதில் சொல்வார்களா?
தமிழ்ப் புத்தாண்டு பற்றி நானும் ஒரு பதிவு எழுதியுள்ளேன். படித்துப் பார்க்கவும்.
ரவி 10:31 pm on January 15, 2009 Permalink |
இருப்பதை மாற்றாதே.
மாற்றுவதற்கு அரசாங்கம் யார்?
இது போல் இசுலாமியர், கிறித்தவர் ஆண்டுகளை மாற்றுவீர்களா?
புருனோ 12:45 am on January 16, 2009 Permalink |
ரவி அண்ணாச்சி
இந்து புத்தாண்டு என்பது அது பாட்டுக்கு ஏப்ரல் 8ல் தானே இருக்கிறது
அதை யாரும் மாற்றவில்லையே
தெலுங்கு புத்தாண்டு தனியா இருக்கும் போது தமிழ் புத்தாண்டு இருந்தால் என்ன
ரவி 3:36 am on January 16, 2009 Permalink |
//இந்து புத்தாண்டு என்பது அது பாட்டுக்கு ஏப்ரல் 8ல் தானே இருக்கிறது//
ஓ.. அப்படி ஒன்னு தனியா இருக்கா. நீங்க சொல்லித் தான் தெரியும். இந்த மாற்றத்தை சில தமிழ் இந்துக்கள் மட்டும் எதிர்ப்பதைக் கண்டு “இந்துகள் தான் தமிழர். தமிழர்கள் எல்லாரும் இந்துகள்” என்று அல்லவா நினைத்திருந்தேன்
//தெலுங்கு புத்தாண்டு தனியா இருக்கும் போது தமிழ் புத்தாண்டு இருந்தால் என்ன//
ஆந்திரா அரசு தெலுங்குப் புத்தாண்டை மாற்றாத போது, தமிழ்நாடு அரசு தமிழ்ப் புத்தாண்டை மாற்றியது நிச்சயம் கொடுங்கோல் ஆட்சி தான்
Sridhar Narayanan 6:42 pm on January 16, 2009 Permalink |
தமிழ் புத்தாண்டு மாற்றுவது பற்றிய சர்ச்சையை விடுங்கள். யுகாதி, விஷு என்னவென்று ஒரு அடிப்படையை மட்டும் சொல்வதற்காக இந்த பின்னூட்டம்.
இந்திய (தமிழ்) நாட்காட்டி சூரியனின் பாதையை வைத்து தனது மாதங்களை கணக்கிடுகிறது. மாதங்களில் குறிக்கப்படும் நட்சத்திரங்கள் நிலவின் பாதையை வைத்து கணக்கிடப்படுகிறது. 27 நட்சத்திரங்கள், 4 பாகைகள் என்ற கணக்கில் வரும்.
சூரியன் தெற்கு வடக்காக பயனிக்கிறது. ஜனவரி 15-ல் (தை முதல்நாளில்) வடக்கு நோக்கி திரும்புகிறது. அந்த புள்ளியில் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு மாறுவதாக கணக்கிடுகிறார்கள். தொடர்ந்து ஆறு மாதங்கள் வடக்கு நோக்கிதான் நகர்கிறது. பிப்ரவரி மாதத்தில் சூரியன் மீனத்தில் பிரவேசிக்கிறது (ஆறில் ஒரு பகுதியாக). அடுத்து மார்ச்சில் மேஷம், ஏப்ரலில் ரிஷபம் என்று தொடர்ந்து போகின்றது.
இந்தியாவில் பண்டைய காலத்தில் இருந்தே பல பண்டிகைகள் சூரியனின் பாதையை ஒட்டியே இருக்கின்றன. ஜனவரி 15-ல் சூரியன் திரும்பும் இடம் மகர சங்க்ராந்தி (மகரத்திலிருந்து கும்பத்திற்கு மாறுகிறது) என்று நாடு முழுவதுமே கொண்டாடுகிறார்கள். மகாபாரதத்திலும் சூரியனின் இந்த வடக்கு நோக்கி திரும்பும் காலத்திற்காக பீஷ்மர் அம்பு படுக்கையில் கிடந்ததாக தகவல் தெரிகிறது.
தமிழ்நாட்டில் நாம் கொண்டாடும் பொங்கலும் மகர சங்க்ராந்தியின் இன்னொரு வடிவமே. நாம் அறுவடைத் திருநாள் என்று சூரியனுக்கு மரியாதை செலுத்துவதன் காரணமும் சூரியனின் இந்த பாதை மாற்றத்தினால் நமது உழவிற்கு எந்தவித கெடுதலும் வந்துவிடக்கூடாது என்று இயற்கையை வேண்டும் ஒரு சடங்காக ஆதிகாலத்தில் இருந்திருக்கக் கூடும்.
சரி. இப்பொழ்து யுகாதி / விஷு பற்றிய ஒரு பேட்டர்ன் (pattern) என்னவென்று பார்ப்போம். தெலுங்கர்கள் / கன்னடியர்கள் கொண்டாடும் யுகாதி – சூரியன் மேஷ ராசியில் நுழையும் மார்ச் மாதவாக்கில் கொண்டாடப்படுகிறது.
தமிழர்கள் / மலையாளிகள் கொண்டாடும் விஷு பண்டிகை சூரியனின் அடுத்த கட்ட பயனம். ஏப்ரல் 14 வாக்கில் நுழையும் ரிஷபராசியை ஒட்டி விஷு கொண்டாடப்படுகிறது.
சூரியனின் பாதை மாற்றம் பூமியில் எல்லா இடங்களிலும் ஒரே மாதிரி இருப்பதில்லை. பூமத்திய ரேகையிலிருந்து இருக்கும் தூரத்தைப் பொறுத்து அந்தந்த நிலப்பகுதியில் அது மாறுகிறது. அதன் அடிப்படையில் ஆந்திரா / கன்னடிய மக்கள் கொண்டாடும் யுகாதிக்கும், அதற்கு சற்றே கீழே இருக்கும் தமிழர்களும் / மலையாளிகள் கொண்டாடும் விஷுவிற்கும் இருக்கும் ஒரு மாத கால வித்தியாசம் இருப்பதற்கு நில அமைப்பு கூட காரணமாக இருக்கலாம்.
இதனை இன்னமும் சிறப்பாக வளவு – பதிவில் இராம. கி. ஐயா சிறப்பாக எழுதியிருப்பார். கட்டாயம் படிக்க வேண்டிய பதிவு அது.
சடங்குகள், பண்டிகைகளும் நமது வசதிக்காக மாற்றி அமைத்துக் கொள்ளக்கூடியவையே. ஆனால் நமது எந்த சடங்கும் ஏதோ ஒரு காரணத்தால் தோன்றி பின்னர் வேறுவகையில் நிறுவப்பட்டவையே. ஆனால் அதன் பின்னனியை தெரிந்து கொள்வது நல்லது என்பதற்காகவே இந்தப் பின்னூட்டம்.
புருனோ 7:10 pm on January 16, 2009 Permalink |
//சரி. இப்பொழ்து யுகாதி / விஷு பற்றிய ஒரு பேட்டர்ன் (pattern) என்னவென்று பார்ப்போம். தெலுங்கர்கள் / கன்னடியர்கள் கொண்டாடும் யுகாதி – சூரியன் மேஷ ராசியில் நுழையும் மார்ச் மாதவாக்கில் கொண்டாடப்படுகிறது.
தமிழர்கள் / மலையாளிகள் கொண்டாடும் விஷு பண்டிகை சூரியனின் அடுத்த கட்ட பயனம். ஏப்ரல் 14 வாக்கில் நுழையும் ரிஷபராசியை ஒட்டி விஷு கொண்டாடப்படுகிறது.//
இல்லை சார்
இரண்டுமே மேஷ ராசிதான் என்று நினைக்கிறேன்
அருள் செல்வன் க 11:51 am on January 17, 2009 Permalink |
நண்பர்களே:
—————————————–
>>>சூரியன் தெற்கு வடக்காக பயனிக்கிறது. ஜனவரி 15-ல் (தை முதல்நாளில்) வடக்கு நோக்கி திரும்புகிறது
=========================
தவறு. சூரியன் தெற்கு->வடக்காக திரும்புவது அல்ல. திரும்பும் நாள். அது டிசம்பர் 22/23 வாக்கில் வருகிறது. பிறகு ஏன் தை 1 ல் பொங்கல்? ஏனென்றால் நமது பஞ்சாங்கங்கள் தப்பு. தப்பு. தப்பு. அமாவாசை பௌர்ணமி இவற்றை சப்தமி அன்று பஞ்சாங்கம் சொன்னால் நம்புவீர்களா? என்ன செய்வீர்கள். வானத்தை அண்ணாந்து பார்த்தால் தெரியும். அதே போல் உத்ராயணம் எப்பொழுது என்று தெரிய வேண்டுமானால் ஒரு குச்சியை மொட்டை மாடியில் நட்டுவைத்து அதன் நிழலை அடுத்த ஆறு மாதங்களுக்கு கவனிக்கவும். வடக்கிலிருந்து தெற்கே திரும்பும் நாள் கிடைக்கும். அதிலிருந்து உத்ராயணம் எப்பொழுது என்று கணக்கிட்டுக் கொள்ளுங்கள். கண்டிப்பாக 2010 தை 1 இல் அல்ல. இல்லாவிட்டால் இந்த ஆண்டு டிசம்பர் 22 வரை பொறுத்திருந்து பாருங்கள். நம் பஞ்சாங்கங்கள் இப்படி பல விஷயங்களில் தப்பு செய்கின்றன. நம்புவது உங்கள் இஷ்டம்.
புருனோ 9:45 am on January 18, 2009 Permalink |
//சூரியன் திரும்பும் நாள். அது டிசம்பர் 22/23 வாக்கில் வருகிறது. //
உண்மைதான். உண்மையில் சூரியன் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு வருவது அன்று தான். அது தான் வருடத்தின் “சிறிய” நாள். ஆனால் பஞ்சாகப்படி வருடத்தின் சிறிய நாள் ஜனவரி 14
அது போல் நிஜத்தில் வருடத்தில் பெரிய நாள் ஜூன் 22/23. ஆனால் பஞ்சாங்கப்படி ஜூலை 15
இதனால் தான் ஆங்கில முறையில் sagitarrius என்றால் அது டிசம்பர் 22 முதல் ஜனவரி 22 வரை
aries என்பது march 22 முதல் april 22 வரை (நம் பஞ்சாங்கப்படி சூரியன் மேஷத்தில் இருப்பது ஏப்ரல் 15 முதல் மே 15 வரை)
அதாவது 23 நாள் வித்தியாசம் (சூரியனை பொருத்த வரை)
இதே போல் வானத்தில் கிரகங்கள் இருக்கும் நிலைக்கும் பஞ்சாங்கத்தில் இருக்கும் நிலைக்கும் 23 டிகிரி வித்தியாசம் இருக்கும்
இந்த 23 டிகிரி என்பது என்ன தெரியுமா
http://en.wikipedia.org/wiki/Axial_tilt
// நம் பஞ்சாங்கங்கள் இப்படி பல விஷயங்களில் தப்பு செய்கின்றன. //
அருள் செல்வன் 8:50 pm on January 18, 2009 Permalink |
புரூனோ,
இது வருவது Precession effect ஆல். http://en.wikipedia.org/wiki/Precession. சுமார் 72 வருசங்களுக்கு ஒருநாள் முன்னெடுக்கவேண்டும். அப்ப எந்த நூற்றாண்டில் தை 1 இல் பொங்கல் என்று கண்டுபிடியுங்கள்.! பஞ்சாங்கங்கள் axial tilt ஐ சரியாகவே கணிக்கின்றன, தயவு செய்து எல்லோரும் வானத்தைப் பார்க்கவும். ப்ரெசெஷன்னும் பஞ்சாங்கக் கணக்கில் இருக்கின்றன. ஆனால் அது படு குழப்பமானது. இது விரிவாக எழுதவேண்டிய விஷயம். ஆனால் நேரமில்லை. இது மத்தவங்களுக்கு: இந்த வருஷ மஹா சிவராத்திரி எப்ப?
அருள்
புருனோ 6:50 pm on January 21, 2009 Permalink |
அருள் சார்
//தவறு. சூரியன் தெற்கு->வடக்காக திரும்புவது அல்ல. திரும்பும் நாள். அது டிசம்பர் 22/23 வாக்கில் வருகிறது. பிறகு ஏன் தை 1 ல் பொங்கல்? ஏனென்றால் நமது பஞ்சாங்கங்கள் தப்பு. தப்பு. தப்பு. //
//பஞ்சாங்கங்கள் axial tilt ஐ சரியாகவே கணிக்கின்றன, தயவு செய்து எல்லோரும் வானத்தைப் பார்க்கவும். //
புரியல சார்