சென்னை புத்தகக் காட்சிக்கு ஆலோசனைகள்
1. பாதி கடைகளில் கடன் அட்டை, பண அட்டைகளை வாங்கவில்லை. கையில் காசாக இல்லாததால் வாங்க எண்ணிச் சென்ற நூல்களையும் வாங்க வில்லை. அட்டைகள் மூலம் பணம் செலுத்த மொத்த புத்தக காட்சிக்கும் சேர்த்து ஒரு ஏற்பாடு செய்யலாம்
2. அரங்க வரைபடம் கண்காட்சி வரவேற்பரையில் கிடைக்கவில்லை. அரங்க எண்கள் வரிசையில் எந்த logicம் இல்லை. ஒன்றன் பின் ஒன்றாகத் தொடர்ந்து இருக்குமாறு அரங்க எண்கள் வரிசை இருக்க வேண்டும்.
3. நான் வாங்க நினைத்த புத்தகம் எந்த கடையில் கிடைக்கும் என்று தெரியவில்லை. தேடிக் களைத்தேன். இந்த நூல் இந்த இந்த கடைகளில் கிடைக்கும் என்று ஒரு அச்சடித்த பட்டியல் அல்லது ஒரு தொடுதிரைக் கணினி / உதவி மையம்.
4. ஒவ்வொரு கடைக்கும், முடிந்தால் மொத்த கண்காட்சிக்கும் ஒரு “அதிகம் விற்ற நூல்கள்” பட்டியல்.
5. அரங்கிற்கு வந்து செல்ல முக்கிய இடங்கள் வழியாக வாடகைப் பேருந்துகளை இயக்கலாம்.
புருனோ 1:38 am on January 13, 2009 Permalink |
கடையில் வாங்குவதே சிறந்தது என்ற எண்ணத்தை ஏற்படுத்த முயன்றுள்ளார்கள் என்பது என் கருத்து
பாலாஜி 3:52 am on January 13, 2009 Permalink |
உண்மைதான். புத்தக கண்காட்சியில் விற்கவேண்டுமென்று எண்ணம் எந்தப் பதிப்பகத்துக்கும் இருப்பதாகத் தெரியவில்லை. பத்ரி போன்றவர்கள் என்ன நினைத்துக்கொண்டு 10 புத்தகங்களை காட்சிக்கு வைத்திருக்கிறார்கள் என்று புரியவில்லை.
போன மாதம் நடந்த பெங்களூர் புத்தக விழா சிறப்பாக இருந்தது. நல்ல தமிழ் பதிப்பகங்கள் மட்டும் அங்கு வந்திருந்தன. சென்னையில் கிடைத்தைவிடவும் பெங்களூரில் நிறைய தமிழ் புத்தகங்கள் கிடைத்ததாக இப்போது எனக்குத் தோன்றுகிறது.
சென்னை புத்தகக் கண்காட்சி 2009- ஜனவரி 8-18 வரை « …மற்று 4:43 am on January 13, 2009 Permalink |
[...] 14. …நான் வாங்க நினைத்த புத்தகம் எந்த கடையில் கிடைக்கும் என்று தெரியவில்லை. தேடிக் களைத்தேன். இந்த நூல் இந்த இந்த கடைகளில் கிடைக்கும் என்று ஒரு அச்சடித்த பட்டியல் அல்லது ஒரு தொடுதிரைக் கணினி / உதவி மையம். பதிப்பகங்கள், புத்தகக் கண்காட்சி அமை… [...]
Krishnan 10:39 pm on January 13, 2009 Permalink |
Very valuable suggestions, hope BAPASI implements it at least in the next edition. Another thing to note is abysmal conditions prevailing in the canteen area, no proper disposal system for paper plates, no proper washing place.