தியாகமும் விதியும்

சம்பளம் பெற்று கடமையைச் செய்யும் காவலர்கள், படையினர் தீவிரவாதிகளை எதிர்க்கொண்டு இறந்து தியாகி ஆகிறார்கள். இதற்கு முன் நிகழ்ந்த தீவிரவாதத் தாக்குதல்களில், இந்தியாவில் பிறந்த ஒரே குற்றத்துக்காக, குப்பைத்தொட்டி அருகிலும் இரயில் குண்டுவெடிப்புகளிலும் இறந்து போன முகமற்ற எண்ணற்றோரின் பெயர் என்ன? படையினருக்கும் தாசு விடுதியில் உயிரிழந்தோருக்கும் வரிந்து கட்டி அஞ்சலி செலுத்துவோர் இதற்கு முன் எங்கே போய் இருந்தனர்?