சாரு நிவேதிதா, இளையராஜா, இசை
இசை என்றால் அது மகாராஜபுரம் சந்தானத்தோடும் கங்குபாய் ஹங்கலோடும் முடிந்து விடுவது எவ்வளவு துர்பார்க்கியமான நிலைமை. இந்திய எழுத்தாளர்களின் இசை ரசனை இந்திய நிலப்பரப்பை விட்டு சற்றே இடதுபக்கம் திரும்பாதது பெருமாளுக்கு மிகுந்த வியாகூலத்தைத் தரும் விஷயம்.
அல்ஜீரியப் பாடகனான Cheb Mami. ஃப்ரெஞ்சு பாடகனான Le Forestier. கேமரூன் பாடகனான Ibrahim Hama Dicko. இவர்களுக்குப் பிறகு மாலி தேசத்துப் பாடகனான Ibrahim Hama Dicko (தட்டச்சுப் பிழை அல்ல; மீண்டும் அதே பெயர் வந்துள்ளது!)வின் ஒரு சோகமானப் பாடலைப் போட்டு அதன் அர்த்தத்தையும் சொன்னான் எபி.
இப்ராஹீம் திக்கோவின் குரல் Bamana மொழியில் உள்ளத்தை உருக்குவதாக இருந்தது. அடுத்து, ‘சொப்பன வாழ்வில் மகிழ்ந்தே சுப்ரமணிய ஸ்வாமி உனை மறந்தார் அந்தோ…’ என்ற எம்.கே தியாகராஜ பாகவதரின் பாடலைப் போட்டான் எபி. அதையடுத்து Penny Penny என்ற தென்னாஃப்ரிக்கப் பாடல்களின் ஸூலூ பாடல்கள்.
- ராஸ லீலா : சாரு நிவேதிதா
rozavasanth 2:04 pm on December 7, 2008 Permalink |
//தட்டச்சுப் பிழை அல்ல; மீண்டும் அதே பெயர் வந்துள்ளது!// இது நீங்களா சாருவா?
bsubra 7:49 am on December 9, 2008 Permalink |
அது என்னுடைய குறிப்பு