ச-ரோ-ஜா திரைப்ப
ச-ரோ-ஜா திரைப்படம் பார்த்தேன்
பிடித்தது : நகைச்சுவை
எரிச்சல் :
1. திரையில் வரும் விளக்கக்குறிப்புகளில் 90 சதவிதத்தை ஆங்கிலத்தில் காட்டியது . ஒரிசாவில் உள்ள ஒரு தொழில் நகரம் என்று தமிழில் எழுத்து போட்டால் என்ன குறைச்சல். தமிழ் படம் தானே
2. ஒன்று நகைச்சுவை படம் எடுக்க வேண்டும். அல்லது திகில் படம் எடுக்க வேண்டும். ஒரேயடியாக இரண்டையும் கலந்தது ஒட்ட வில்லை (பஞ்சதந்திரம் நன்றாக இருந்தது சரிதான். ஆனால் இங்கு திரைக்கதை சொதப்பல்)
3. நகைச்சுவைக்கு படம் எடுக்கும் பட்சத்தில் இரண்டாவது பாதி முழுவதும் இருட்டில் எடுத்ததை தவிர்த்திருக்கலாம்.
4. யுவன் பின்னனி இசையில் கற்க வேண்டியது நிறைய இருக்கிறது.
5. ஒடும் தொடர்வண்டியில் ஏற வேண்டியவர்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் ஏறலாமே. ஏன் நிலையத்திலேயே நிற்கிறார்கள்.நிலையத்தில் வில்லன் நிற்கும் பட்சத்தில் சிறிது தொலைவு சென்று ஏற வேண்டியது தானே
சாராம்சம் : இரண்டாவது முறை பார்த்தால் சிறிது சிரிக்கலாம். நான் இரண்டாவது முறை பார்க்கும் உத்தேசம் இல்லை
narsim 11:53 pm on September 20, 2008 Permalink |
வித்தியாசமான கண்ணோட்டம் மருத்துவரே..
ஆம்.. இரண்டாம் பகுதியில் அவ்வளவு இருளைத் தவிர்திருக்கலாம்..
நகைச்சுவை.. பிரேம்ஜியின் வசன வெளிப்பாடுகள் சரியான நேரத்தில் அமைந்ததால் (டைமிங்?) நன்றாகத்தான் இருந்தது..
நீங்கள் சொல்வது போல் முழு நீள நகைச்சுவையாகவே எடுத்திருக்கலாம்..
யுவன்: என்ன தலைவா.. மைக்கேல் ஜாக்சன் ரேஞ்சில் விரல்களை அசைத்து ஆடும் அளவிற்கு(?) முன்னேறி விட்டாரே.. ஹி ஹி..
ஒரு முறை பார்க்கலாம்.. இரண்டாவது முறை பார்த்தால் சிரிக்கலாம் என்பதை விட டிக்கட் கொடுப்பவர் நம்மை பார்த்து சிரிப்பார் என்பதும் பொருந்தும்..
நச் உளறல்..
நர்சிம்
புருனோ 3:50 am on September 21, 2008 Permalink |
//ஒரு முறை பார்க்கலாம்.. இரண்டாவது முறை பார்த்தால் சிரிக்கலாம் என்பதை விட டிக்கட் கொடுப்பவர் நம்மை பார்த்து சிரிப்பார் என்பதும் பொருந்தும்..//
அதிஷா 4:11 am on September 22, 2008 Permalink |
நானும் இதே கருத்தை தான் எனது விமர்சனத்திலும் சொல்லியிருந்தேன் புருனோ … இதை சொன்ன நம்பள பைத்தியக்காரன்றாங்க
இரண்டாவது இந்த படம் சிறுநகரங்களில் எப்படி ஓடும் என்று தெரியவில்லை படம் முழுக்க வியாபித்திருக்கும் நகரசூழல் என்னை போன்ற கிராமவாசிக்கு துளியும் சம்பந்தமில்லாதது.
புருனோ 11:14 am on September 22, 2008 Permalink |
//இரண்டாவது இந்த படம் சிறுநகரங்களில் எப்படி ஓடும் என்று தெரியவில்லை படம் முழுக்க வியாபித்திருக்கும் நகரசூழல் என்னை போன்ற கிராமவாசிக்கு துளியும் சம்பந்தமில்லாதது.//
சிறுநகரங்களில் திரையரங்குகளை விட்டே ஓடி விடும்
திகில் என்று இல்லாமல் ஒரு முழுநீள நகைச்சுவை படமாக அளித்திருந்தால் இதை விட அதிக முறை பார்க்கப்பட்டிருக்கும்
அடுத்த எரிச்சல் – திரைகதை மோசம்.
சுருங்க சொல்வதானல் – தோசை இல்லாமல் 5 வகை சட்னி, 2 வகை சாம்பார் பரிமாறியமாதிரி இருந்தது
வெண்பூ 5:34 am on September 29, 2008 Permalink |
//அடுத்த எரிச்சல் – திரைகதை மோசம்.
சுருங்க சொல்வதானல் – தோசை இல்லாமல் 5 வகை சட்னி, 2 வகை சாம்பார் பரிமாறியமாதிரி இருந்தது
//
சரியான உதாரணம்..
Sanjai 6:57 am on September 29, 2008 Permalink |
மகாக் கேவலமான் படம்..
இம்சை அரசனை ரசிச்சதால நா அழகபப்னையும் மக்கள் ரசிபப்ங்கனு எதிர் பார்த்த வடிவேலுக்கும் சென்னை 28 ரசிச்சதால இந்த கன்றாவியையும் மக்கள் ரசிப்பாங்கனு நினைத்த வெங்கட் பிரபுவுக்கும் ஒரு வித்தியாசமும் தெரியலை
புருனோ 9:48 am on September 29, 2008 Permalink |
//இம்சை அரசனை ரசிச்சதால நா அழகபப்னையும் மக்கள் ரசிபப்ங்கனு எதிர் பார்த்த வடிவேலுக்கும் சென்னை 28 ரசிச்சதால இந்த கன்றாவியையும் மக்கள் ரசிப்பாங்கனு நினைத்த வெங்கட் பிரபுவுக்கும் ஒரு வித்தியாசமும் தெரியலை //
நச்