”காந்திக்கு பி …
”காந்திக்கு பிந்தைய இந்தியா” (India after Gandhi) என்ற ஆங்கிலப் புத்தகம் கடந்த சில நாட்களாக என்னைக் கட்டிப்போட்டு வைத்திருக்கிறது. ராமச்சந்திர குஹாவின் (Ramachandra Guha) எழுத்து நடையும், வரலாற்று அறிவும் வியக்க வைக்கிறது.
வரலாற்றினை இவ்வளவு அழகாகவும், எளிமையாகவும் அதே நேரம் அதன் விறுவிறுப்பு குறையாமல் வாசிக்கும் அனுபவம், சிலிர்ப்பூட்டுகின்றது. நம் பள்ளி பாடதிட்டத்தில் இதைப்போல வரலாறு கற்பிக்கப்பட்டிருந்தால், எவ்வளவு சிறப்பாக இருந்திருக்கும்.