ஒரு குடிமகனின் கோபம்

குசேலன் – ஒகேனக்கல் விவகாரத்தில் rajini மன்னிப்பு கேட்டதை அடுத்து தட்சுதமிழில் ஒரு குடிமகனின் கோபம் ! அவரின் கருத்து கீழே:

**

அடப் பாவிங்களா! நாட்டுல விலை வாசி ஏறி, பண வீக்கம் எகிறூது! அரசியல்வாதிகள் கூடி டிராமா போடரானுங்க! அதை விட முக்கியமா, நாட்டுல தீவிரவாதீங்க சினிமாவுக்கு போஸ்டர் ஒட்டர மாதிரி, இஷ்டம் போல தெரு வெல்லாம் குண்டு வச்சுட்டுப் போறாங்க! அதுக்கு எல்லாம் 2 பக்கம், 3 பக்கத்துக்கு மேல எவனும் Comments எழுதலை! இந்த விஷயத்துக்கு இது வரை மட்டும் 24 பக்கம் Comments எழுதிரிக்காங்க! தீவிரவாதி நம்ப குண்டிக்குள்ள குண்டு வச்சாலும், நாம்ப ஆசுபபத்திரில கட்டு கட்டிக்கிட்டு வந்து, ரஜினி, நமீதா, கமல் பத்திதான் எழுதுவோம் போல இருக்கே! எந்த கடவுளைக் கும்பிடனும்? அல்லா, ஏசு, கிரீஷ்னர், முருகன் எல்லா கடவுளையும் நான் கும்பிடறேன். ஜொள்ளு புத்தி பிடிச்சு, தாய் நாடு எரிவதைப் பற்றிக் கூட கவலையில்லாமல், மயங்கி கிடக்கும் என் கோடிக் கணக்கான சகோதாரர்கள் விழித்துக் கொள்வார்களா?