Recent Updates RSS Toggle Comment Threads | Keyboard Shortcuts

  • ரவி 6:58 pm on February 8, 2010 Permalink | Reply
    Tags: , அசல்   

    அசல் பார்க்கப் போனேன். a/c காத்துக்கு நல்லா தூக்கம் வந்துச்சு.

     
  • ரவி 12:37 pm on February 7, 2010 Permalink | Reply
    Tags: , பிரெஞ்சுத் திரைப்படங்கள், the diving bell and the butterfly   

    The Diving Bell and the Butterfly பார்த்தேன். நெகிழ்ச்சியான படம்.

     
  • புருனோ 5:36 am on February 5, 2010 Permalink | Reply
    Tags: , , , , , ,   

    சமீபத்தில் ஒரு பதிவரின் திரைப்படம் குறித்து எழுதியிருந்த இடுகை பிடித்திருந்ததால் “நல்ல நடை. சொல்ல வந்ததை தெளிவாக கூறியுள்ளீர்கள்” என்று மறுமொழி எழுதினேன்.

    அடுத்த சில நிமிடங்களிலேயே, மற்றொரு பதிவர் என்னை தொலைபேசியில் அழைத்து “ஏன் பாராட்டுகிறீர்கள். நீங்கள் எல்லாம் பாராட்டினால் அவன் பந்தா தாங்காது. இதெல்லாம் ஒரு எழுத்தா” என்ற ரீதியில் தாக்க ஆரம்பித்து விட்டார். “ஐயா சாமி, எனக்கு பிடித்திருந்தால் பிடித்திருக்கிறது என்று கூறுவேன்; பிடிக்க வில்லை என்றாலோ அல்லது அதில் எதாவது கருத்தில் எனக்கு முரண்பாடு என்றாலோ அதை கூறுவேன். உங்களுக்கு பிடிக்க வில்லை என்றால் நீங்கள் மறுமொழியில் கூறுங்கள்” என்று அவரை சமாதானம் செய்வதற்குள் போதும் போதும் என்று ஆகி விட்டது

     
    • ரவி 1:21 pm on February 5, 2010 Permalink | Reply

      என்ன கொடுமை இது? ஒரு வகையில் விருதுகள், இந்த வாரப் பதிவர் போன்ற விசயங்கள் வலையுலகில் அரசியல் புக காரணமாயிருக்கின்றன.. வலைப்பதிவுலகையும் (சிறு) பத்திரிக்கை உலகு மாதிரி ஆக்கிடுவாங்களோ..

  • ரவி 10:17 pm on February 4, 2010 Permalink | Reply
    Tags: ,   

    நாணயம் பார்த்தேன். மொக்கை.

     
  • ரவி 10:16 pm on February 4, 2010 Permalink | Reply
    Tags: , முன்தினம் பார்த்தேனே,   

    முன்தினம் பார்த்தேனே பாடல்கள் கேட்டேன். நல்லா இருக்கு. புதிய இசையமைப்பாளர் தமன் தொடர்ந்து கவனத்தை ஈர்க்கிறார். ஒரே மாதிரியான இசையைத் தவிர்த்தா நல்லா இருக்கும்.

     
  • ரவி 1:13 pm on January 30, 2010 Permalink | Reply
    Tags: தமிழ்ப் படம்,   

    தமிழ்ப் படம் பார்த்தேன். சிரிச்சு சிரிச்சு கண்ணுல தண்ணி வந்திடுச்சு. 2004ல் மிர்ச்சி வானொலியில் சிவா வேலை செஞ்சப்பவே அவர் ரசிகன். அவர் வளர்ச்சியைக் காண மகிழ்ச்சி.

     
  • ரவி 5:46 pm on January 29, 2010 Permalink | Reply
    Tags: , கோவா   

    கோவா பார்த்தேன். ரவுசான படம். ஒரே மாதிரி நகைச்சுவை மூன்று படங்களாகத் தொடர்வது அலுப்படிக்கலாம்.

     
  • ரவி 5:45 pm on January 29, 2010 Permalink | Reply
    Tags: , குட்டி   

    குட்டி பார்த்தேன். 5 ஆண்டுகள் பிந்தி வந்துள்ள சுத்தமான பொழுதுபோக்கு – காதல் படம்.

     
  • சந்தோஷ் குரு 9:36 am on January 25, 2010 Permalink | Reply  

    ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இரண்டாவது பகுதி எனக்கு பிடித்திருந்தது. அனைவரும் பொன்னியின் செல்வன் தரும் படிமத்தை வைத்துக்கொண்டு சோழர்களை (செல்வாவின் பாணியில் ச்ச்சோளர்கள் :-) ) இழிவுபடுத்திவிட்டனர் என்று காட்டுகத்தல் கத்திக்கொண்டு இருக்கின்றனர். கல்கி சோழர்களை, திரைப்பட இயக்குநர் விக்கிரமனின் படத்திலுள்ள நல்லவர்கள் போல படைக்க creative liberty இருக்கும் போது, செல்வா அவருடைய பாணியில் செய்தால் மட்டும் பொங்குவது எதற்காக?. நம் காலத்து தமிழ்த் தாத்தாவான சுஜாதா கூட கணையாழியின் கடைசிப்பக்கங்களில், சோழர்கள் பற்றிய நம் படிமம் சரியா என்று பல ஆண்டுகளுக்கு முன்னே எழுதியிருக்கிறார், Burton Stein என்பவரின் புத்தகத்தினை பற்றி விவரிக்கும் போது. நம் மனத்தில் உள்ள கற்பனையான சோழர் பிம்பத்தினை வேறு ஒருவர், தன் கற்பனையால் மாற்றினால், வெகுண்டு எழுபவர்களுக்கும் , சத்ரபதி சிவாஜி-வரலாற்று ஆய்வு-வன்முறை-கலகம் என்று இறங்கும் சிவசேனைகளுக்கும் என்ன வேறுபாடு?

     
    • புருனோ 5:06 pm on January 25, 2010 Permalink | Reply

      சுஜாதாவின் நடுநிலைமை சந்தேகத்திற்கு அப்பாற்பட்டது !!

      அதாவது அவர் எந்த நிலை என்பது அயோத்தியா மண்டபம் போன்ற கதைகளின் மூலம் தெளிவானது தானே

      இந்த கட்டுரையிலும் கடைசிவரியில் அவர் என்ன கூறியுள்ளார் என்று பாருங்கள்.

      லெமூரியா சரடு !!

      ஏன் இந்த அவசரம். இதன் மூலம் அவர் என்ன கூற வருகிறார் :) :) :)

      லெமூரியா என்பது உண்மையில்லை என்று வலிந்து நிருபிக்க அவருக்கு என்ன அவசரம் :) :) என்ன ஆத்திரம் :) :)

    • புருனோ 5:10 pm on January 25, 2010 Permalink | Reply

      அடுத்தாக, சோழர்கள் ” விக்ரமன் பட நல்லவர்கள்” என்று கல்கியும் கூறியதில்லை, அகிலனும் கூறியதில்லை, பாலகுமாரனும் கூறியதில்லை.

      சொல்லப்போனால் சோழர்களை பற்றி சுஜாதா கூட ஒரு கதை எழுதியிருக்கிறார். அதில் கூட அவர்களை விக்ரமன் பட நல்லவர்களாக காட்ட வில்லை

    • புருனோ 5:17 pm on January 25, 2010 Permalink | Reply

      தேவதை என்று ஒரு படம் வந்தது. அது கூட வரலாறும் சமகாலமும் சார்ந்த படம் தான்.. அதை யாரும் இந்த அளவு போட்டு தாக்க வில்லை என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்

      அருந்ததி என்று ஒரு படம் வந்தது..அது கூட பேண்டசி தான். முதுகெலும்பை வைத்து தான் கொல்ல முடியும் என்று கதை இருந்த போது கூட யாரும் லாஜிக் கேள்வி கேட்க வில்லை

      ஆனால் இந்த படத்தை ஏன் போட்டு பிராண்டுகிறார்கள் என்றால், இங்கு ஒன்றுமே புரியவில்லை

      புதை குழியை ஹெலிகாப்டர் வைத்து தாண்ட முடியாதா போன்ற கேள்விகளை வேண்டுமானால் பேண்டசி என்று ஒதுக்கி விடலாம். ஆனால் அதை விட பல அடிப்படை அபத்தங்கள் உள்ளன

      முடிந்தால் யாராவது விளக்கவும்

      1. ஆண்ட்ரியாவை ஏன் அழைக்கிறார்கள்

      2. ரிமா ஏன் பார்த்திபனுடன் உடலுறவு வைக்க விரும்புகிறாள் (எப்படியும் படை வைத்து தானே அழிக்க போகிறார்கள்)

      3. ஏன் மேஜர் ரவி மட்டும் சேட்டலைட் போன் வைத்துள்ளார். அனைவரும் ஆளுக்கொன்று வைத்திருக்கலாமே

      இது போன்ற பல அபத்தங்கள் உள்ளன

      • சந்தோஷ் குரு 10:03 pm on January 25, 2010 Permalink | Reply

        // 1. ஆண்ட்ரியாவை ஏன் அழைக்கிறார்கள் // – ஏன்னா அவருக்குத்தான் அந்த பாண்டிய தளபதி எழுதிய குறிப்பினை interpret பண்ணும் திறமை உள்ளது.

        // 2. ரிமா ஏன் பார்த்திபனுடன் உடலுறவு வைக்க விரும்புகிறாள் // – Why not? பார்த்திபனின் நம்பிக்கையினை பெறுவதற்காக இருக்கலாம் இல்லையா? 300 என்ற படத்தில் கன்னி ஒருத்தியை நிர்வாணமாக்கி, அவள் மூலம் வருங்காலத்தை பற்றி அறிவார்கள் Spartanஇன பெருசுகள். அப்போது ஏன் நிர்வாணம் என்று கேட்பதில்லை. ஏன் என்றால் அது ஒரு கற்பனையோ அல்லது எதோ ஒரு தொன்மமோ அல்லது ஒரு எழவோ.

        3. சாட்டிலைட் போன் என்று explicitஆக சொல்லலையே. அவர் போன் (ஐபோன் போல உள்ளது) செய்கிறார், சாட்டிலைட்டினைக் காட்டுகின்றார்கள், simple GPSஆக கூட இருக்கலாமே. மற்ற மூவர், பாம்பினில் இருந்து தப்பிக்கும் போது எடுத்தவர மறந்துவிட்டார்களோ என்னவோ :-)

        • புருனோ 5:56 am on January 26, 2010 Permalink | Reply

          ரிமா, பார்த்திபனின் இருப்பிடத்தை தெரிந்து கொண்டு ராணுவம் மூலம் தான் போரிடுகிறார்கள்

          அப்படி இருக்க ஏன் உடலுறவிற்கு அழைக்க வேண்டும்

          வெறுமனே தூது என்று சொன்னால் போதுமே

    • புருனோ 5:18 pm on January 25, 2010 Permalink | Reply

      படம் வெளிவந்தபின்னர் இது தான் இந்த என் படத்தின் கதை என்று சமீபத்தில் எந்த இயக்குனராவது கூறியதாக நினைவுள்ளதா

      அந்த அளவு ஜெர்க் அடிக்கும் திரைக்கதை இது

    • ரவி 5:24 pm on January 25, 2010 Permalink | Reply

      சோழர்களை எப்படி காட்டுகிறார்கள் என்பது எனக்குப் பிரச்சினை இல்லை. twist வைக்கிறேன் பேர்வழி என்று தொடர்பே இல்லாமல் இருக்கும் இரண்டாம் பாதி, இரண்டாம் பாதியின் சொதப்பலான திரைக்கதை, கதைக்குத் தேவையில்லாத வன்முறை / காமம் தான் எரிச்சல் அடைய வைத்தது.

      சோழர்கள் – பாண்டியர்கள் – கார்த்தி என்று எவர் பக்கமும் மனம் சாயாமல் போனதே இயக்குநரின் தோல்வி.

      முதல் 20 நிமிடத்தில் சோழர்களை அறிமுகம் செய்து, கார்த்தியை அவர்கள் அணியில் சேர்த்து, சோழர்களை வளமானவர்களாகவும் காட்டி இருந்தால் படம் ஓடி இருக்கும். The Last Samurai போல. எப்படி வேண்டிமானாலும் எடுக்க செல்வாவுக்கு உரிமை உண்டு. ஆனால், எதை எடுத்தாலும் ஒழுங்கா எடுத்தா தான் படம் ஓடும் :)

    • புருனோ 6:29 pm on January 25, 2010 Permalink | Reply

      //. எப்படி வேண்டிமானாலும் எடுக்க செல்வாவுக்கு உரிமை உண்டு. ஆனால், எதை எடுத்தாலும் ஒழுங்கா எடுத்தா தான் படம் ஓடும்//

      கண்ணாபின்னாவென்று வழிமொழிகிறேன்

      படம் வெளிவந்தபின்னர் இது தான் இந்த என் படத்தின் கதை என்று சமீபத்தில் எந்த இயக்குனராவது கூறியதாக நினைவுள்ளதா

      அது தான் செல்வராகவன் தன் படத்திற்கு தானே தந்த விமர்சணம் !!!

  • ரவி 3:58 pm on January 24, 2010 Permalink | Reply
    Tags: , crush it   

    Crush It – Why now is the time to cash in on your passion படித்தேன். ஏற்கனவே வலைப்பதிவுகள், இணைய வணிகத்தில் உழல்பவர்களுக்குப் புதிதாக ஒன்றும் இல்லை. புத்தகத்தை விட அதை எழுதிய Gary சுவாரசியமானவர்.

     
  • ரவி 3:56 pm on January 24, 2010 Permalink | Reply
    Tags: , malcolm x   

    Malcolm X பார்த்தேன். அருமை. எல்லா முக்கியமான ஆட்களுக்கும் இப்படி ஒரு படம் எடுத்துத் தந்தால் வரலாற்றைப் படிக்க இலகுவா இருக்கும் :)

     
  • கலை 7:57 pm on January 22, 2010 Permalink | Reply  

    என்னுடன் வேலை செய்யும் ஒரு தமிழ்ப் பெண்ணிடம் எந்த ஒரு பொது விசயத்தைப்பற்றி பேசினாலும், “இவர் சொல்லுறார் ….”, “ இவரும் இப்படித்தான் சொல்லுறார்”, இப்படி எல்லாமே அந்த ‘இவர்’ ஐச் சார்ந்தே சொல்கிறார். (இவர் என்பது இங்கே அவரது கணவனைக் குறிக்கிறது). அப்போ எனக்குத் தோன்றியது, எந்த ஒரு சொந்தக் கருத்தும் அவருக்கென்று கிடையாதா? :(

     
  • ரவி 10:04 pm on January 18, 2010 Permalink | Reply
    Tags: , the magic of thinking big   

    Seth Godin அண்ணாத்தை சொன்னாரேன்னு The Magic of thinking Big படிச்சேன். இது போன்ற சர்வரோக நிவாரணி (தமிழ்ல என்ன?) நூல்கள் அலுப்படிக்குது. 15 வயசிலேயே அப்பாவின் நூல் தொகுப்பில் நிறைய இது மாதிரி படிச்சாச்சு. உண்மையில தன் முன்னேற்ற நூல் படிச்சு யாராச்சும் முன்னேறி இருக்காங்களான்னு தெரியல :)

     
    • கார்த்திக் 9:35 am on January 19, 2010 Permalink | Reply

      //இது போன்ற சர்வரோக நிவாரணி (தமிழ்ல என்ன?) நூல்கள் அலுப்படிக்குது
      அளவுக்கு மீறினால், அமுதமும் நஞ்சு?

      • ரவி 11:09 am on January 19, 2010 Permalink | Reply

        நஞ்சு இல்லை. ஆனா, மொக்கை ஆகிடுது. ஆமா, அளவு மிகுந்தது வாசிப்பா, நூலா :)

  • ரவி 11:02 am on January 16, 2010 Permalink | Reply
    Tags: ,   

    ஆயிரத்தில் ஒருவன் பார்த்தேன். இரண்டாம் பாதி சகிக்கவில்லை. படம் பார்த்துப் பல மணி நேரம் பின்னரே தலைவலி தீர்ந்தது.

     
  • ரவி 10:59 am on January 16, 2010 Permalink | Reply
    Tags: ,   

    திரு எழுதிய “ஈழம்: இனப்படுகொலைகளுக்குப் பின்னால்” படித்தேன். ஆதிக்க நெருப்பில் எரிந்த ஈழம் என்ற பகுதி இந்தியாவின் சகுனித்தனத்தை உரித்துக் காட்டுகிறது :( பரபரப்புக்காக அல்லாமல் உண்மையான அக்கறை, ஆய்வு, பொறுமையுடன் நிறைய தகவல்களைச் சேர்த்து எழுதி இருக்கிறார். கண்டிப்பாகப் படியுங்கள்.

     
  • ரவி 10:57 am on January 16, 2010 Permalink | Reply
    Tags: , purple cow,   

    Seth Godin எழுதிய Purple Cow படித்தேன். எல்லா பசுக்களும் வெள்ளையாக இருந்தால் ஊதாப்பூ நிறப் பசுவின் மீதே கவனம் செல்லும். அதே போல், உலகம் முழுக்க ஒரே மாதிரி இருப்பதால் நம்மை, நம் செயல்களை, நாம் விளைவிக்கும் பொருட்களை வியக்கத்தக்கதாக மாற்றிக் கொள்வதே முன்னேற்றத்துக்கு ஒரு வழி என்கிறார். நல்ல கரு. நூற்றுக் கணக்கான எடுத்துக்காட்டுகள் தருகிறார். அதுவே சற்று அலுப்படிக்கவும் செய்கிறது. 120 பக்க நூலை 350 ரூபாய் கொடுத்து வாங்கினாலும் சாணித்தாளில் அச்சிட்டிருப்பது ஏமாற்றம் :(

     
  • கலை 1:07 pm on January 15, 2010 Permalink | Reply  

    Bergen நகரம் ஏழு மலைகளால் சூழப்பட்ட அழகான நகரம். சுற்றி மலைகள் இருப்பதாலும், அதி குறைந்த வெப்பநிலை, தற்போதைய ஈரப்பதன் காரணமாகவும் மோட்டார் வண்டிகள் வெளிவிடும் புகை மேலெழுந்து செல்ல முடியாமல் சூழல் மாசடைந்து இருப்பதாகக் கூறி, மோட்டார் வண்டிகளை நகரினுள் ஓட்டி வருவதில் பல கட்டுப்பாடுகள் போட்டிருக்கிறார்கள். தொலைவில் உள்ள சிறிய ஊர்களில் மோட்டார் வண்டிகளை நிறுத்திவிட்டு, நகரினுள் செல்வதற்கு இலவச பேருந்து சேவைகளை அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள். அதனால் இன்றைக்கு பேருந்தில் பயணம் செய்தேன். பேருந்து தரிப்பு நிலையத்தில் இரு வெளிநாட்டினர் (ஆசியா, ஆப்பிரிக்கா வைச் சேர்ந்த இருவர்) பேசிக் கொண்டார்கள். When we compare the pollution in our country, it’s nothing here. So, why they make such a fuss over this issue. இந்த நாட்டைப்பற்றி இன்னும் நிறையப் பேசினார்கள். நீண்ட நாட்களின் பின்னர், இப்படி பொது மக்களின் பேச்சைக் கேட்டுக்கொண்டே பயணம் செய்ததும் நன்றாக இருந்தது :) .

     
    • ரவி 10:52 am on January 16, 2010 Permalink | Reply

      உண்மை தான். சில ஐரோப்பிய நாடுகளின் சூழல் காப்பைப் பார்க்கப் பொறாமையா இருக்கு. நம்மட நாட்டின் அடுத்தடுத்த தலைமுறைகளை நினைக்க கவலையாவும் இருக்கு :(

      **
      தனிப்பட்ட வசதிகள் கூடக் கூட இயற்கையிடம் இருந்தும் சக மனிதர்களிடம் இருந்தும் விலகி விடுகிறோம். பேருந்தில் செல்லும் போது, நடந்து போகும் போது பல விசயங்களைக் கவனிக்க முடிகிறது. பல விதமான மனிதர்களை, அவர்களின் உரையாடல்களைக் கேட்க முடிகிறது. தனியே வண்டிகளில் போகும் போது இயல்வதில்லை. தொடர்வண்டியில் குளிர் வசதிப் பெட்டியில் செல்வதும் முன்பதிவு செய்யாத பெட்டியில் போவதும், எளிய வீடுகளில் அடுத்தவர்களோடு ஒட்டுறவோடு வாழ்வதும் வெளியாட்கள் வராத பூட்டிய மாளிகைகளில் வாழ்வதும் என்று ஒப்பிட்டுக் கொண்டே போகலாம்…

  • கலை 12:57 pm on January 15, 2010 Permalink | Reply  

    இன்று காலையில் கடல்நீரேரியில், நீரின் மேலாக நான் நடந்து சென்றேன். மகளுடன் சேர்ந்து நடந்தது மகிழ்ச்சியாக இருந்தது. I’m not a magician anyway :) . வேறொன்றுமில்லை. ஊரில் அதி குறைந்த வெப்பநிலை காரணமாக கடல்நீரேரிகளின் மேல் மட்ட நீரில் 15 cm ஐ கடின உறைபனியாகி விட்டிருக்கிறது. அதனால், நீரின் மேல் நடக்கலாம், ஓடலாம், நடனம் செய்யலாம். Skating, skiing, cycling எது வேண்டுமானாலும் செய்யலாம். மாநகர சபையினர் கடல்நீரேரியை சோதித்துப் பார்த்து, அதன்மேலாக நடப்பது பாதுகாப்பானது என்று அறிவித்திருக்கிறார்கள். இருந்தாலும் ஏதாவது நடந்தால் தாங்கள் பொறுப்பல்ல என்றும் சொல்லியிருக்கிறார்கள் :) . ஏரியின் சில இடங்கள் உறைபனியின் கடினத்தன்மை குறைந்திருக்கலாம் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள். ஆனால் அது எந்த எந்த இடமென்பது சரியாகப் புரியவில்லை :) . கடல்நீரேரி முழுவதும் வெள்ளைக் கம்பளம் விரித்த பெரீஈஈஈய விளையாட்டு மைதானம்போல் மிக அழகாக இருக்கிறது. BTB the city I’m living is Bergen, Norway.

     
    • ரவி 10:53 am on January 16, 2010 Permalink | Reply

      கேட்கவே ஆசையா இருக்கே. எல்லா பிள்ளைகளும் விளையாடும் போது ஒரு படம் புடிச்சுப் போடுங்க.

  • சந்தோஷ் குரு 2:16 pm on January 12, 2010 Permalink | Reply
    Tags:   

    இந்தியாடுடே இதழில் கமலஹாசன் பரிந்துரைத்த சிலபடங்களை பார்க்க துவங்கியுள்ளேன். Red Cliff (மொத்தம் நான்கு மணி நேரம் ஓடும் இரு பாகங்கள் கொண்ட படம்) என்ற திரைப்படம் பார்த்தேன். பல மசாலா படங்கள் கொடுத்த John Woo இயக்கியிருக்கிறார். தமிழில் ”மகா யுத்தம்” என்ற பெயரில் சென்னையில் ஓடுகிறது. முடிந்தால் கண்டிப்பாக பார்க்கவும், நல்ல ஒரு வரலாற்று ஆக்‌ஷன் திரைப்படம். நம் தொன்மத்தில் கூறும் சக்ரவியூகம் போல சீனாவில் உள்ள யின்-யாங் போர் உத்தி இந்த படத்தில் பயன்படுத்துகிறார்கள். கலக்கலாக உள்ளது. நம்மூர் ஷங்கரின் பிரம்மாண்டம் எல்லாம் John Woo முன்னால் பச்சா :-) .

     
    • ரவி 10:53 am on January 16, 2010 Permalink | Reply

      கமல் பரிந்துரைத்த முழுப் பட்டியல் கிடைக்குமா?

      • சந்தோஷ் குரு 1:35 pm on January 19, 2010 Permalink | Reply

        அது இந்தியாடுடே இதழ் அல்ல, சண்டே இந்தியன்

        What kind of world cinema do you like?

        If I mention only Citizen Kane, I would be leaving out Seventh Seal. Even if I select 60 films like Citizen Kane and Seventh Seal, I would still be leaving out some great modern films. There is a film called Magnolia, an American classic. And No Country for Old Men. Then there is Goya’s Ghosts. It was widely seen only in Europe, not in other parts of the world. There is another American movie called One False Move, which was released 15 years ago and it hardly had any takers. There are so many other movies. John Woo’s Red Cliff is such a grandiose movie.

        (அவருடைய நேர்காணல் இங்கே)

  • சந்தோஷ் குரு 11:39 am on January 9, 2010 Permalink | Reply
    Tags:   

    கடந்த இரண்டு நாட்களாக என் நண்பன் மூலம் (அவனுக்கு தெஹல்கா வழியாக) அறிமுகமான, குழலி மாணிக்கவேல் என்ற எழுத்தாளரின் எழுத்துக்கு அடிமையாகியிருக்கிறேன். வழக்கமான பாணி சிறுகதை அல்ல இவருடையது, இருந்தும் மறுபடி மறுபடி வாசிக்கவைக்கும் வசீகரம் கொண்டிருக்கிறது இவர் எழுத்து. இவருடைய இரு சிறுகதைகளும் (1,2), வலைப்பதிவு மட்டுமே எனக்கு அறிமுகம். ஆனால் கண்டிப்பாக இவருடைய முதல் சிறுகதை தொகுப்பினை படித்தே ஆகவேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டிருக்கேன்..

     
    • ரவி 10:02 pm on January 11, 2010 Permalink | Reply

      பேரிலேயே ஒரு ஈர்ப்பு இருக்கே ! இன்னும் ஆங்கிலச் சிறுகதைகள் படிக்கத் தொடங்கல. நல்லா புரியுற மாதிரி எழுதுற நாலு பேர் சொல்லுங்க :)

      • புருனோ 2:30 am on January 12, 2010 Permalink | Reply

        O.Henry
        Conan Doyle
        Jeffrey Archer
        Fredrick Forysth

        என்று ஆரம்பிக்கலாம்

c
compose new post
j
next post/next comment
k
previous post/previous comment
r
reply
e
edit
o
show/hide comments
t
go to top
l
go to login
h
show/hide help
esc
cancel